Skip to main content

‘உன் கூட நூறு வருசம் வாழணும்...’ - 8 பேருக்கு விபூதி அடித்த இளம்பெண்

Published on 11/07/2023 | Edited on 11/07/2023

 

 young woman who married and cheated 8 people through Instagram

 

இளம்பெண் ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி 8 பேரைத் திருமணம் செய்துகொண்டு அவர்களின் பணத்தையும், நகைகளையும் எடுத்துக்கொண்டு மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

சேலம் மாவட்டம் தாரமங்கலத்தைச் சேர்ந்தவர் பைனான்ஸியர் மூர்த்தி. இவர் தொளசம்பட்டி போலீசாரிடம், ‘இன்ஸ்டாகிராம் மூலம் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ரஷீதாவுக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவர் பியூட்டீசியனாக பணியாற்றி வருகிறார். நாளடைவில் எங்களது பழக்கம் காதலாக மாறியதால், கடந்த மார்ச் மாதம் 30 ஆம் தேதி இருவரும் ஓமலூரில் உள்ள ஈஸ்வரன் கோயிலில் திருமணம் செய்துகொண்டோம். பின்பு இருவரும் 3 மாதங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், கடந்த 5 ஆம் தேதி காலையில் இருந்து ரஷீதாவை காணவில்லை. மேலும் வீட்டில் இருந்த ரூ.1.50 லட்சம் பணம், 4 பவுன் நகைகளையும் காணவில்லை. அதனால் தனது காதல் மனைவி ரஷீதாவை கண்டுபிடித்துத் தரும்படி’ புகார் அளித்தார். இதனிடையே ரஷீதாவிடம் பழகியதால் தனது மனைவியையும் மூர்த்தி விவகாரத்து செய்துள்ளார்.

 

புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்திய போலீசார், ரஷீதாவின் சமூக வலைத்தளப் பக்கங்களை ஆய்வு செய்தனர். அதில் இன்ஸ்டாகிராமில் பல்வேறு பெயர்களில் கணக்குகள் வைத்துக்கொண்டு, வசதியான ஆண்களைத் தன் காதல் வலையில் சிக்க வைத்துத் திருமணம் செய்துகொண்டு, பணம் மற்றும் நகைகளை ஏமாற்றி வந்தது தெரிய வந்துள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு மாயமான ரஷீதாவை போலீசார் தீவிரமாகத் தேடி வரும் நிலையில், கடந்த மாதம் 20 ஆம் தேதி கோவையில் பெண் ஒருவர், ‘எனது கணவர் சத்ய கணேஷ் ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டு என்னிடம் அடிக்கடி பணம் கேட்டு மிரட்டுகிறார்’ என்று மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.

 

அந்தத் தகவலைத் தெரிந்து கொண்ட தொளசம்பட்டி போலீசார், அந்த வழக்குடன் மூர்த்தியின் வழக்கை ஒப்பிட்டுப் பார்த்ததில் இரண்டு பெண்ணும் ஒருவர்தான் என்பதைக் கண்டுபிடித்தனர். பின்பு விசாரணையைத் தீவிரப்படுத்தியதில், மூர்த்தி போன்று 8 பேரை ரஷீதா திருமணம் செய்துகொண்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் ரஷீதாவை பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘இன்ஸ்டாகிராம் காதலன்தான் வேணும்..’ - குழந்தைகளை தவிக்கவிட்டு சென்ற இளம்பெண்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
 woman who left her children behind and went with her Instagram boyfriend

சேலம் மாவட்டம் தொளசம்பட்டி அருகே உள்ள மானாத்தாள் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (29). இவருடைய மனைவி கீர்த்தனா(பெயர்மாற்றப்பட்டுள்ளது) (28). இவர்களுக்கு பத்தாண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 9 மற்றும் 6 வயதுகளில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கூலித்தொழிலாளியான கார்த்தி, பந்தல் போடுவது, மூட்டை தூக்குவது என கிடைத்த வேலைகளுக்குச் சென்று வருகிறார். உள்ளூரில் வேலை கிடைக்காதபட்சத்தில் அவ்வப்போது வெளிமாநிலத்திற்கும் வேலை தேடிச்சென்றுவிடுவார்.

கணவர் வீட்டில் இல்லாத சமயங்களில் கீர்த்தனா பெரும்பாலான நேரத்தை செல்போனில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய சமூக ஊடகங்களில் நேரத்தைச் செலவிட்டு வந்துள்ளார். குழந்தைகளைக்கூட சரியாக கவனித்துக் கொள்வதில்லையாம். இதனால் கார்த்தி அடிக்கடி கீர்த்தனாவை திட்டியுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு, குழந்தைகளை வீட்டில் தவிக்க விட்டுவிட்டு, கீர்த்தனா திடீரென்று மாயமானார். வெளியே சென்றிருந்த கார்த்தி, வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மனைவி காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உறவினர்கள், தோழிகள் விசாரித்துப் பார்த்தும் கீர்த்தனா எங்கு சென்றார் என்ற விவரங்கள் தெரியவில்லை. இதையடுத்து கார்த்தி, தொளசம்பட்டி காவல்நிலையத்தில் மனைவியைக் காணவில்லை என்று புகார் அளித்தார்.

காவல்துறை விசாரணையில், கீர்த்தனா இன்ஸ்டாகிராமில் அதிகமாக நேரத்தைச் செலவிட்டு வந்ததும், அதன் மூலமாக இளைஞர் ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டு, அவருடன் நெருக்கமாக பழகி வந்திருப்பதும் தெரிய வந்தது. அந்த இளைஞருடன் கீர்த்தனா சென்றிவிட்டதும், அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பதுங்கி இருப்பதும் தெரிய வந்தது. அவர்களை மீட்டு அழைத்து வரும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பெற்ற குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு இன்ஸ்டாகிராம் காதலனுடன் இளம்பெண் சென்ற சம்பவம் தொளசம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story

சேரன் மகள் திருமண புகைப்படங்கள்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

இயக்குநர் மற்றும் நடிகரான சேரனுக்கு நிவேதா பிரியதர்ஷினி, தாமினி என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் நிவேதா பிரியதர்ஷினிக்கும் சுரேஷ் ஆதித்யா என்பவருக்கும் கடந்த 22ஆம் தேதி சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள முருகன் கோயிலில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இத்திருமணத்திற்கு சேரனின் குருவான கே.எஸ்.ரவிக்குமார் தாலி எடுத்துக் கொடுத்துள்ளார். மேலும் சேரனிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய பாண்டிராஜ், ஜெகன்னாத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அத்தோடு இயக்குநர் பாராதிராஜா, சீமான், சமுத்திரகனி உள்ளிட்ட பல பிரபலங்கள்  திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.