Skip to main content

நகைக்காக பெண்ணை கொன்று புதைத்த இளம்பெண் – அதிர்ச்சியில் போலிஸ்

Published on 29/03/2018 | Edited on 29/03/2018

சாந்தி:

sn

திருவெறும்பூர் அருகே நகைக்காக பெல் ஊழியர் மனைவியைச் சுத்தியலால் அடித்துக் கொலை செய்து வீட்டின் பின்புறத்தில் புதைத்த பெண்ணை திருவெறும்பூர் போலீசார் கைது செய்தனர். 

 

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே மேலகுமரேசபுரம் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் நாதமணி (51). மத்திய அரசின் பெல் நிறுவன ஊழியர். இவரது மனைவி சாந்தி (48). இவர், தனியார் பேக்கரி குடோனில் உதவியாளராக இருந்தார். வேலை நேரம் போக மீதமுள்ள நேரத்தில் தவணை முறையில் புடவை, நைட்டி, ஜாக்கெட் உள்ளிட்டவை விற்று வந்தார். 

 

கடந்த 26ம் தேதி காலை வேலைக்கு சென்ற சாந்தி, மதியம் வீட்டுக்கு வந்தார். மதியத்துக்குமேல், துணி விற்பனைக்கான பணத்தை வசூலிக்க சென்றார். அதன் பின் சாந்தி வீடு திரும்ப வில்லை. சாந்தியை நாதமுனி பல இடங்களில் தேடினார். எங்கு தேடியும் காணவில்லை.

இதையடுத்து நாதமுனி, மறுநாள் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் மனைவியை காணவில்லை என புகார் அளித்தார். புகாரையடுத்து திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சாந்தியை தேடி வந்தனர். 

 

விசாரணையில், கோனார் தெருவைச் சேர்ந்த ராமதுரையின் மனைவி பூங்குழலி மீது போலீசுக்கு சந்தேகம் வந்தது. இதையடுத்து, நேற்று காலை சந்தேகத்தின்பேரில் பூங்குழலியிடம் போலீசார் விசாரித்தனர். 

 

அப்போது, ஒருவித பயத்தில் உளறி பேசியதுடன், சாந்தியை கொன்று வீட்டில் புதைத்துவிட்டதாக கூறினார். 

பூங்குழலி:

kulal

விசாரணை குறித்து போலிஸ் பூங்குழலி அந்தப் பகுதியில் உள்ள ஒரு மகளிர் சுயஉதவி குழுவில் உறுப்பினராக உள்ளார். ஏற்கனவே கடன் வாங்கிய வகையில் சாந்திக்கு, பூங்குழலி ரூ.2 ஆயிரம் கொடுக்க வேண்டி இருந்தது. அதனை பலமுறை கேட்டும் பூங்குழலி கொடுக்கவில்லை. இதனால் பூங்குழலியை பலமுறை சாந்தி திட்டியுள்ளார். 26ம் தேதி பூங்குழலியிடம் பணம் கேட்க சென்றார். அப்போது வீட்டிற்குள் இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

அப்போது ஆவேசமடைந்த பூங்குழலி வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து சாந்தி தலையில் அடித்தார். இதில் சம்பவயிடத்திலேயே சாந்தி இறந்தார். இதையடுத்து, சாந்தியின் உடலை மறைக்க திட்டமிட்டார். வீட்டின் கொல்லைபுறத்தில் இருந்த மரத்தை வேறோடு பிடுங்கி அந்த பள்ளத்தில் சாந்தி உடலை போட்டு மூடிவிட்டார். புதைப்பதற்கு முன் சாந்தி கழுத்தில் இருந்த செயின், தாலியை கழற்றி எடுத்து வைத்து கொண்டார். அதில் ஒரு செயினை அடகு கடையில் ரூ.30 ஆயிரத்திற்கு வைத்துள்ளார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, சாந்தியின் உடலை தோண்டி எடுப்பதற்காக திருவெறும்பூர் தாசில்தார் ஷோபாவுக்கு தகவல் அளித்தனர். 

ஷோபா வந்தவுடன் அவர் முன்னிலையில் சாந்தியின் உடலை தோண்டி எடுத்தனர். பின்னர், பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 

இதில் கொடுமை என்னவென்றால் 1 வருடத்திற்கு முன்பு சப்பானி என்பவர் நகைக்காக 8 பேரை கொலை செய்தார். அதில் இறந்த போன சாந்தியின் மாமியார் கோகிலா ஒருவர் என்பது குறிப்பிடதக்கது. ஒரே குடும்பத்தில் மாமியார், மருமகள் நகைக்காக கொலை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது. 

ஒரு பெண்ணை ஒரு பெண் கொலை செய்து புதைத்து இருப்பது போலிசாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

கொலையாளி பூங்குழலி தொடர்பு எல்லாம் அந்த பகுதியில் திருட்டு கும்பலுடன் தொடர்பு இருப்பதாகவும், அவருடைய கணவர் வெல்டர் சம்பவத்தன்று வெளியூருக்கு சென்றிருப்பதாலும் திருட்டு கும்பலுக்கு தொடர் அல்லது இந்த கொலைக்கு வேறுயாரும் உதவினார்களா என்கிற ரீதியில் போலிசார் இதுபற்றி தொடர்ந்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

இளம்பெண் கொலை வழக்கு; இளைஞரை சுட்டுப் பிடித்த போலீஸ்!

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
Police caught youth in case of case of young woman

சென்னையிலிருந்து ரமேஷ் மற்றும் அவரது காதலி பவித்ராஸ்ரீ இருவரும் திருவண்ணாமலை கிரிவலம் செல்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டு திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை செல்வதற்காக வந்து கொண்டிருந்தனர். அப்போது திண்டிவனம் அருகே உள்ள கோனேரி குப்பம் பகுதியில் இருவரும் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது இரண்டு பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென வழி மறித்தனர். பின்னர் அவர்களிடம் இருந்த செல்போனை பறித்துக்கொண்ட மர்ம கும்பல் ரமேஷின் காதலி பவித்ராஸ்ரீயை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர்.

இதையடுத்து மர்ம நபர்களிடம் இருந்து தப்பித்து ஓடிய பவித்ராஸ்ரீ அந்த வழியாக வந்த கார் மீது மோதி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைப் பார்த்த மர்ம நபர்கள் இரண்டு பேரும் அங்கிருந்து தப்பித்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து ரமேஷ் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட ஒலக்கூர் போலீசார் குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.

இந்த நிலையில்தான் திண்டிவனம் டி.எஸ்.பி சுரேஷ் பாண்டியன் தலைமையிலான தனிப்படை போலீசார், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்தனர். அதனடிப்படையில், அந்த மர்ம நபர்கள் இருவரும் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் பகுதியில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தனிப்படை, இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில்,  திருநெல்வேலி மாவட்டம் கோழியன் குளம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த சந்திர பெருமாள் என்பவரது மகன் 24 வயது உதய பிரகாஷ், மற்றொருவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும் தெரிய வந்தது. அவர்கள் இருவரும் தங்கள் சொந்த வேலை காரணமாக சென்னை சென்றிருந்தனர். சம்பவம் நடந்த அன்று சென்னையிலிருந்து இரு சக்கர வாகனத்தில் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தபோது, கோனேரி குப்பம் அருகே ரமேஷ் அவரது காதலி பவித்ராஸ்ரீயும் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்ததை நோட்டமிட்டு அவர்களை வழிமறித்து தாக்கி அவர்களிடமிருந்து செல்போனை பறித்துள்ளனர். ஆனால் பவித்ராஸ்ரீ தனது செல்போனை கொடுக்க மறுத்துள்ளார். பின்பு அவரிடம் செல்போனை பறித்து வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பித்து சென்றபோது காரில் அடிப்பட்டு பவித்ராஸ்ரீ உயிரிழந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து இருவரிடமும் பறிக்கப்பட்ட செல்போனகள் குறித்து விசாரித்தபோது, விக்கிரவாண்டி அருகே உள்ள கப்பியாம்புலியூர் ஏரிக்கரையில் பதுக்கி வைத்திருப்பதாகக் கூறியுள்ளனர். அதனைப் பறிமுதல் செய்வதற்காக இருவரையும் அழைத்துக்கொண்டு காவல் உதவி ஆய்வாளர் ஐயப்பன், ஏட்டு தீபன் மற்றும் காவலர்கள் சென்றுள்ளனர். அங்கு செல்போனை எடுத்துக் கொடுத்த உதயபிரகாஷ் செல்போனுக்கு அருகில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கத்தியை எடுத்து, காவல் உதவி ஆய்வாளர் ஐயப்பன் மற்றும் ஏட்டு தீபன் இருவரையும் கத்தியால் தாக்கிவிட்டு தப்பித்து ஓடியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து வேறு வழியின்றி உதவி ஆய்வாளர் ஐயப்பன், உதயபிரகாஷின் வலது காலில் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட்டுள்ளார். உடனே சரிந்து விழுந்த அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். தாக்கப்பட்ட உதவி ஆய்வாளர் மற்றும் ஏட்டு தீபன் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. 

Next Story

மாணவியிடம் பேசிய கல்லூரி மாணவன் மீது தாக்குதல்;  போலீஸ் விசாரணை

Published on 31/01/2024 | Edited on 31/01/2024
beaten on college student who spoke to girl student

திருச்சி வயலூர் ரோடு ஜின்னா தெரு பகுதியைச் சேர்ந்தவர் முகமது கர்சத் (வயது 20). இவர் கேகே நகரில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் தனது நண்பர் ராகுல் என்பவருடன் திருச்சி வயலூர் ரோட்டில் உள்ள ஒரு ஜிம்னாஸ்டிக் பயிற்சி மையத்துக்கு சென்றார். அங்கே பயிற்சிக்கு வந்த மேரி என்ற மாணவியுடன் முகமது கர்சத் பேசியுள்ளார். இதனைப் பார்த்து ஆத்திரமடைந்த இன்னொரு மாணவர் எதற்காக அந்த மாணவியிடம் பேசுகிறாய் என்று தகராறு செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாணவர் முகமது கர்சத்தை எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த பாண்டி சஞ்சய் மற்றும் சிலர் சேர்ந்து அவரை கல் மற்றும் கையால் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து முகமது கர்சத் திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.