Skip to main content

நடுரோட்டில் போதையில் கிடந்த இளம் பெண் 

Published on 23/07/2018 | Edited on 27/08/2018
Karaikal


காரைக்கால் எல்லையில் மதுபோதையில் சாலையோரம் மயங்கி கிடந்த 14 வயது சிறுமியின் நிலையை கண்ட பலரையும் முகம் சுவிக்கவே செய்தது. போதையில் கிடந்த சிறுமியை தமிழக போலிசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
 

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் வாஞ்சூர் பகுதியில் பத்துக்கும் அதிகமான மதுபான கடைகள் இயங்கி வருகின்றன. வாஞ்சூர் நாகை, திருவாரூர் மாவட்ட எல்லையில் இருப்பதால் தமிழக குடிமகன்கள் அங்கு குவிகின்றனர். போதைக்கு அடிமையான பெண்களையும் அழைத்து வந்து, மது வாங்கி கொடுத்து அனுபவித்து விட்டு அப்படியே விட்டு விட்டு போவதும், அவர்கள் வீதிகளிலும், வீதியோரம் உள்ள காடுகளிலும் கிடப்பதும் தொடர்கதையாகவே இருக்கிறது.
 

இந்த நிலையில் இளம் பெண் போதையில் பிரதான சாலையோரம் மயங்கிய நிலையில் கிடந்தது பலரையும் உச் கொட்ட வைத்தது. அந்த பெண் கிடந்தது காரைக்கால் எல்லையில், அவரை அங்குள்ள காக்கிகள் ஆட்டோ மூலம் தமிழக எல்லையில் கொண்டு வந்து போட்டுவிட்டு சென்று விட்டனர். 
 

அந்த சிறுமிக்கு 3 பேர் மது வாங்கிக் கொடுத்து அழைத்து வந்ததை கவனித்து வந்த செல்லதுறை என்பவர் கூறுகையில்,
 

" வாஞ்சூர் பெட்ரோல் பங்குக்கு உள்ளே உள்ள  மதுபானக் கடைக்கு அந்த சிறுமியை ஒரு வயதானவர், இரண்டு பேர் நடு தர வயதுடையவர்கள், பிறகு ஒதுக்குப் புறமா சரக்கோடு போனாங்க 1 மணி நேரம் கழிச்சி அந்த பெண் போதை தலைகேறி சாலையோரத்தில் மயங்கி கிடக்க, அந்த சிறுமியை அழைத்து வந்து மதுவாங்கி கொடுத்த இரண்டு நபர்கள் சாலையில் அடித்து கொண்டனர். ஒருவன் ஓடி விட்டான்.
 

 இதனை பார்த்த அங்கு வந்த பாதுகாவலர்களும் மற்றும் பொதுமக்களும் சிறுமிக்கு மதுவாங்கி கொடுத்த அவர்களை அடித்து துவைத்ததோடு அவர்களை பிடித்துவைத்து காரைக்கால் திருப்பட்டினம் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த புதுச்சேரி போலீசார் சிறுமிக்கு முதலுதவி அளிக்காமல், மயக்கநிலையில் இருந்த சிறுமி மற்றும் அழைத்து வந்த நபர்களை ஆட்டோ பிடித்து தமிழக எல்லைக்கு அனுப்பிவைத்து விட்டனர்.
 

பின்னர் தமிழக எல்லை பகுதியான நாகூரில் அந்த சிறுமியை சாலையில் வீசிவிட்டு அந்த நபர்கள் தப்பியோடினர். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் நாகூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகூர் போலீசார் 108 வாகனம் மூலம் சிறுமியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 
 

விசாரணையில் அந்த சிறுமி திருச்சி துறையூரை சேர்ந்தவர் என்பதும், தனது தாயுடன் நாகூர் தர்காவிற்கு சுற்றுலா வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. நாகூர் தர்காவில் இருந்து அந்த சிறுமியை அழைத்து வந்து மது வாங்கி கொடுத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் விடுவிப்பு!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Tamil Nadu fishermen released from Sri Lankan jail

தமிழக மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. இத்தகைய சூழலில் மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 19 மீனவர்கள் கடந்த மார்ச் 6 ஆம் தேதி (6.03.2024) மீன் பிடிக்க கடலுக்குச் சென்றிருந்தனர். இவ்வாறு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர். மேலும், மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி கைது செய்தனர். அதோடு மீனவர்கள் பயன்படுத்திய 2 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அதே சமயம் மீனவர்கள் 19 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், மயிலாடுதுறையைச் சேர்ந்த 9 பேர், புதுக்கோட்டையைச் சேர்ந்த 4 பேர், புதுச்சேரி, காரைக்காலில் இருந்து 6 பேர் என மொத்தம் 19 மீனவர்கள் இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அதன் பின்னர் இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அப்போது மீனவர்களை தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் பொன்னாடை போர்த்தி வரவேற்று, அரசின் சார்பில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். 

Next Story

தடையை மீறி கடலில் குளித்த மாணவி உயிரிழப்பு; தேடச் சென்ற மாணவர்கள் மாயம் 

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
A student who broke the ban and bathed in the sea lose their live; The students who went to look for magic

காரைக்காலுக்கு சுற்றுலா சென்ற கல்லூரி மாணவிகளில் ஒருவர் கடலில் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார். அவரைக் காப்பாற்றச் சென்ற இரு மாணவர்களும் காணாமல் போனதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி மாணவ - மாணவிகள் காரைக்கால் கடற்கரை பகுதிக்குச் சுற்றுலா சென்றிருந்தனர். அப்போது மாணவிகள் இருவர் தடையை மீறி கடலில் இறங்கிக் குளித்ததாகக் கூறப்படுகிறது. திடீரென தண்ணீரில் மூழ்கிய அந்த மாணவிகளை மீட்க மாணவர்கள் இருவர் கடலில் இறங்கினர். ஆனால் மாணவியை மீட்கக் கடலில் இறங்கிய இரண்டு பேரும் காணாமல் போயினர்.

இதுகுறித்து கடலோர காவல் படைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் மற்றும் அதிகாரிகள் காணாமல் போன மாணவர்களைத் தேடி வருகின்றனர். தடையை மீறி கடலில் இறங்கிய மற்றொரு மாணவி மீட்கப்பட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். கல்லூரி மாணவி தடையை மீறி கடலில் இறங்கிக் குளிக்க நேர்ந்தபோது ஏற்பட்ட உயிரிழப்பு சம்பவமும், தொடர்ந்து தேடச் சென்ற மாணவர்கள் காணாமல் போன சம்பவமும் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.