இந்த நிலையில் ஹரிஷாலினி நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஹரிஷாலினியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் நடந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மாலை நேரம் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள், விசிக திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் ஆற்றலரசு, நகர செயலாளர் வடிவேல் ஆகியோர் தலைமையில் மணப்பாறை அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து முடங்கியது.
பின்னர் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர்கள் ஜெ.கே.கோபி, பிரபு ஆகியோர் உறவினர்களிடம் சமரசம் பேசி, கணவர் வீட்டினரிடமிருந்து குழந்தையைப் பெற்று பெண் வீட்டாரிடம் ஒப்படைத்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. ஹரிஷாலினி உயிரிழப்பு குறித்து வையம்பட்டி போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.