Skip to main content

இளம் போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!!!

Published on 17/08/2020 | Edited on 17/08/2020
555

 

விழுப்புரம் மாவட்டம், ஆற்காடு கிராமத்தை சேர்ந்தவர் குமார் என்பவரது மகன் ஏழுமலை, வயது 25. பி.இ .பட்டதாரியான இவர் கடந்த 2017ஆம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் 2019ஆம் ஆண்டு முதல் விழுப்புரம் காகுப்பம் ஆயுதப்படை காவலர் பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்து காவலராக பணியாற்றி வந்தார். தற்போது மாவட்ட எஸ்பி குடியிருப்பு முகாம் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்து வந்துள்ளார்.

 

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் டூட்டி முடிந்து அவர் தங்கியுள்ள காகுப்பம் பயிற்சி காவலர் குடியிருப்பில் ஓய்வு எடுக்க சென்றுள்ளார். அதற்கு முன்னதாகவே அங்குள்ள ஆயுதப்படை முகாமில் உள்ள அதிகாரியிடம் அவர் பாதுகாப்புக்கு எடுத்து சென்றிருந்த துப்பாக்கியை ஒப்படைத்து கையெழுத்து இடவேண்டும். ஆனால் அவர் அப்படி ஒப்படைக்காமல் இருந்துள்ளார். 

 

இதற்கிடையே இரவு வெகு நேரமாகியும் ஏழுமலை அலுவலகத்திற்கு வந்து துப்பாக்கியை ஒப்படைத்து ஆஜராகாததால் அங்கிருந்து ஆயுதப்படை அதிகாரிகள் அவரது செல்போன் மூலம் அவரை தொடர்பு கொண்டுள்ளனர். அது சுவிட்ச் ஆஃபில் இருந்து உள்ளது. இதனையடுத்து நேற்று காலை ஏழுமலை தேங்கியுள்ள குடியிருப்பில் ஏழுமலை  இருக்கிறாரா என்று பார்த்து வருமாறு குடியிருப்பில் உள்ள போலீஸ்காரர் தங்கம் என்பவரை அனுப்பி வைத்துள்ளனர்.

 

தங்கம் அங்கு சென்று பார்த்தபோது ஏழுமலை தனது அறையில் படுத்து தூங்கிக் கொண்டிருப்பது தெரிந்துள்ளது. அவரை எழுப்பி என் அலுவலகத்திற்கு வந்து ஆஜராகவில்லை என்று என்று அதிகாரிகள் கேட்கிறார்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு ஏழுமலை எனக்கு உடல்நிலை சரியில்லை, மாத்திரை போட்டு உள்ளேன், இதோ சிறிது நேரத்தில் அலுவலகம் வந்து விடுவதாக தெரிவித்துள்ளார் ஏழுமலை. 

 

இந்த தகவலை தங்கம் ஆயுதப்படை அலுவலகத்தில் இருந்த அதிகாரிகளிடம் சென்று தெரிவித்துள்ளார். பிறகு நீண்ட நேரம் சென்ற பிறகு மீண்டும் ஏழுமலை அலுவலகம் வரவில்லை. இதை எடுத்து போலீஸ்காரர் தங்கம் மீண்டும் ஏழுமலை அறைக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது அரை கதவு ஜன்னல்கள் மூடப்பட்டிருந்தன. சந்தேகமடைந்த தங்கம் நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்கவில்லை என்றதும் பின்னர் அருகில் உள்ள ஒரு ஜன்னலை உடைத்து உள்ளே பார்த்தபோது ஏழுமலை தலையில் இருந்து ரத்தம் ஓடிய நிலையில் ஏழுமலை கிடந்துள்ளார். அவர் அருகில் துப்பாக்கி ஒன்று கிடந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த தகவல் டிஐஜி எழிலரசன் மாவட்ட எஸ்பி ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு இருவரும் நேரடியாக சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

 

தடய அறிவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இதையடுத்து இறந்துபோன ஏழுமலையின் உடலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆயுதப்படை போலீஸ்காரர்தான் வைத்திருந்த துப்பாக்கியால் தானே சுட்டு கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆயுதப்படை காவலர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

போலீஸ்காரர் ஏழுமலை ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ஏழுமலையின் பெற்றோர் அவரது மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர் .அப்போது அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு எங்கள் மகனை படிக்க வைத்தோம், பி.இ. படித்திருந்தாலும்கூட அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தால் காவல் பணிக்கு சேர்ந்தார். எங்களுக்கும் அது மகிழ்ச்சியாக இருந்தது. ஏற்கனவே ஒருமுறை விபத்தில் சிக்கிய போது பதறிப்போனோம். அதிலிருந்து உயிர் பிழைத்து மீண்டும் வேலைக்கு சென்று வந்த நிலையில் சில மாதங்களாக சந்தோஷமாக இருந்தோம். அந்த சந்தோஷம் பறிபோய் விட்டதே, எங்களுக்கு ஒரே மகன் இவர் என்று கதறி அழுதனர். இளம்வயது காவலர் துப்பாக்கியால் சுட்டு கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் காவலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி காலமானார்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Vikravandi DMK MLA Pugalenthi passed away!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (71). இந்த நிலையில், விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை. ரவிக்குமார், கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோரை ஆதரித்து விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று (05-04-24) இரவு வந்திருந்தார். 

இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று முன் தினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார். அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று (06-04-24) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர். புகழேந்தி மறைந்த செய்தியை அறிந்து மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் பெரும் திரளாக கூடியுள்ளனர். மேலும், அமைச்சர் பொன்முடி மருத்துவமனைக்கு வந்து, மறைந்த புகழேந்திக்கு அஞ்சலி செலுத்தினார். 

Next Story

இளம் பெண்ணிற்குத் தாலி கட்டிவிட்டு இளைஞர் தற்கொலை; சிக்கிய உருக்கமான கடிதம்!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
young man lost their life by tying a thali to a woman

விழுப்புரம் திருவெண்ணெய்நல்லூர் அருகே வசிப்பவர் ராதாகிருஷ்ணன். இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு வங்கியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இதனிடையே 26 வயது இளம்பெண் ஒருவரும் ராதாகிருஷ்ணனும் 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ராதாகிருஷ்ணனிடம் கூறி இருக்கிறார். அதற்கு ராதாகிருஷ்ணன் தனது தாயார் இறந்து சில மாதங்களே ஆகிறது. அதனால் ஒரு வருடம் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி இருக்கிறார்.

இந்த நிலையில்தான் அந்த பெண் நேற்று முன் தினம் விழுப்புரம் மகளிர் காவல்நிலையத்தில் ராதாகிருஷ்ணனை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு புகார் கொடுத்துள்ளார்.அதன் பெயரில் போலீசார் ராதாகிருஷ்ணன் மற்றும் இளம்பெண் இருவர் வீட்டாரிடம் பேசி  சமாதானம் செய்துள்ளனர். அதனை தொடர்ந்து மாலை போலீஸ் நிலையம் அருகே உள்ள கோவிலில் ராதாகிருஷ்ணனுக்கும் அந்த பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து, இருவரும் பெண் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இரவு சிறிது நேரம் தங்கியிருந்த ராதாகிருஷ்ணன் பெண்ணிடம்  தனது வீட்டிற்கு சென்று விட்டு காலையில் வந்து உன்னை கூட்டிச்செல்கிறேன் என்று தெரிவித்துவிட்டு சென்றிருக்கிறார். இந்த நிலையில்தான் ராதாகிருஷ்ணன் காலையில் தனது விட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராதாகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதன்  பிறகு விசாரணை செய்த போலீசாரிடம் ராதாகிருஷ்ணன் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில், “என்னை மன்னித்து விடுங்கள் என்னை வற்புறுத்தி எனக்கு விருப்பம் இல்லாமல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று இந்த திருமணத்தை செய்து வைத்துள்ளார்கள். இது எனக்கு பிடிக்கவில்லை. என்னையும் என் குடும்பத்தாரையும் கொன்று விடுவேன் என மிரட்டினார்கள். எனது மரணத்திற்கு அவர்கள் தான் காரணம் எனக்கு விருப்பம் இல்லாத வாழ்கையை  எப்படி வாழ முடியும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து தனது மகனின்  மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸில் புகார் அளிக்க, 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.