Skip to main content

இளைஞர்களின் ரகசிய புகார்! போலி மருத்துவர் கைது!

Published on 03/06/2020 | Edited on 03/06/2020
Young people's complaint - Fake doctor - police investigation



இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த பாணாவரம் பகுதியில் காமாட்சி கிளினிக் என்ற பெயரில் மருத்துவமனை நடத்தி வந்த 48 வயது தயாளன் என்பவர் போலி மருத்துவர் என்பது அப்பகுதி இளைஞர்களின் புகாரால் தெரியவந்துள்ளது. 


அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி உத்தரவின் பேரில் வருவாய்த்துறையினர், சுகாதாரத்துறையினர் நடத்திய ஆய்வில் அது உண்மை என தெரியவந்து போலி மருத்துவர் தயாளன் கைது செய்ய மாவட்ட மருத்துவ தொடர்பு அதிகாரி கீர்த்தி காவல்நிலையத்தில் புகார் தந்தார். அதனை தொடர்ந்து பாணாவரம் போலிஸார் தயாளனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

தயாளன் அந்த பகுதியில் நீண்ட வருடங்களாக கிளினிக் நடத்தி வந்துள்ளார். இவர் போலி மருத்துவர் என்பது அப்பகுதி வருவாய்த்துறை, சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு தெரிந்தும் எந்த புகாரும் மேலதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் இருந்துள்ளனர். இதனால் ஏழை, படிக்காத பாமர மக்களிடம் நான் ஒரு பெரிய மருத்துவர் எனச்சொல்லிக்கொண்டு கிளினிக் நடத்திக்கொண்டு இருந்து வந்துள்ளார் தயாளன் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரியாணி கடை உரிமையாளர் வழிமறித்து கொலை; போலீஸார் விசாரணை

Published on 27/10/2023 | Edited on 27/10/2023

 

Biryani shop owner incident for police investigation

 

கடலூரில் பிரியாணி கடை நடத்தி வந்த நபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் அந்தப் பகுதியில் பிரியாணி கடை ஒன்றை நடத்தி வந்திருக்கிறார். இவர், நேற்று (26-10-23) இரவு வழக்கம் போல் வேலையை முடித்து தனது வீட்டிற்கு இருசக்கர வாகனம் மூலம் வந்து கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள், கண்ணன் வந்த கொண்டிருந்த வாகனத்தை வழிமறித்துள்ளனர். மேலும், தாங்கள் வைத்திருந்த கத்தியால் குத்திக் கொலை செய்தனர். இதில் சம்பவ இடத்திலேயே கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

 

தகவல் அறிந்த நெய்வேலி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலமாகக் கிடந்த கண்ணனை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கடந்த ஆகஸ்ட் மாதம் கண்ணனுக்கும் மற்றொரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, கண்ணன் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனால், எதிர் தரப்பினர் கண்ணனை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

 

 

Next Story

ஃபார்மஸி முடித்துவிட்டு சிகிச்சை; போலி மருத்துவர் மீண்டும் கைது!

Published on 18/04/2023 | Edited on 18/04/2023

 

Fake doctor arrested in Salem

 

தமிழகம் முழுவதும் போலி மருத்துவர்களைக் களையெடுக்கும் நடவடிக்கைகளில் காவல்துறையும், சுகாதாரத்துறையும் முழுவீச்சில் களம் இறங்கியுள்ளன. எம்பிபிஎஸ் படிப்பை முடிக்காமல் சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி மற்றும் பிஸியோதெரபி உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்கள் அலோபதி முறையில் சிகிச்சை அளிக்கத் தடை செய்யப்பட்டு உள்ளது.     

 

சில இடங்களில் அனுபவத்தின் அடிப்படையிலும், ஃபார்மஸி படிப்பு முடித்தவர்களும் கூட நோயாளிகளுக்கு ஊசி மருந்து செலுத்தி சிகிச்சை அளித்து வந்துள்ளனர். அவர்களும் போலி மருத்துவர்கள் எனக் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் 10க்கும் மேற்பட்ட போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், சேலம் அருகே உள்ள வீராணம் பள்ளிப்பட்டியில் பரமேஸ்வரன் (41) என்பவர் எம்பிபிஎஸ் முடிக்காமல் சொந்தமாக கிளினிக் வைத்து சிகிச்சை  அளித்து வருவதாக காவல்துறைக்கு புகார் வந்துள்ளது. அதன்பேரில் எடப்பாடி அரசு மருத்துவமனை மருத்துவர் தினேஷ்குமார், வீராணம் காவல்நிலைய எஸ்ஐ நடராஜ் மற்றும் காவலர்கள், பரமேஸ்வரனை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் மீதான புகார் உண்மை என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.          

 

இவர், ஏற்கனவே கடந்த 2017 ஆம் ஆண்டும் இதே புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்டுள்ளார். அப்போது, பிணையில் வெளியே வந்த அவர் மீண்டும் கிளினிக் நடத்தி அலோபதி முறையில் சிகிச்சை அளித்து வந்தது தெரிய வந்துள்ளது. இவர், மருந்தாளுநர் (பார்மஸி) படிப்பை மட்டுமே படித்துவிட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். கைதான பரமேஸ்வரனை சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு மத்திய சிறையில் அடைத்தனர்.