fg

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 6 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

Advertisment

உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. மராட்டியத்திற்கு அடுத்ததாக தமிழகத்தில் கரோனா தொற்று அதிக அளவு இருந்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1.7 லட்சத்தைக் கடந்துள்ளது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளார்கள். பிற மாவட்டங்களிலும் கரோனா தொற்று வேகமாக அதிகிரித்து வருகின்றது.

Advertisment

இதன் காரணமாக இளைஞர்கள் பலர் வேலை இழந்து வீடுகளில் முடங்கியுள்ளனர். பலரின் வாழ்வாதாரம் பறிபோய் உள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கையாக என்ன செய்வது என்று தெரியாமல் பலரும் முழித்து வருகிறார்கள். இந்நிலையில் இளைஞர்கள் சிலர் கோவிட் 19 என்ற பெயரில் ஆண்களுக்கான துணிக்கடையை திறந்துள்ளனர். என்ன காரணத்துக்காக வேலையை இழந்தோமோ அதை வைத்தே வேலையை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படியைில் இந்தக் கடையைத் தொடங்கி உள்ளோம் என்று கடையின் உரிமையாளரான அந்த இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். இதை ஆரம்பிக்க பணம் குறைவாக இருந்ததால் மனைவியின் நகையை அடகுவைத்து இந்தக் கடையைத் திறந்துள்ளோம் என்றும், மக்கள் நல்ல ஆதரவு கொடுக்கிறார்கள் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.