Skip to main content

சொந்த செலவில் 300 ஏக்கர் பெரிய குளத்தை தூர்வாரும் இளைஞர்கள்... ஒரு லட்சம் நிதி கொடுத்த இளைஞர்...

Published on 24/06/2019 | Edited on 24/06/2019

நாளுக்கு நாள் நிலத்தடி நீர் குறைந்து குடிதண்ணீருக்கே திண்டாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது தமிழகம். இந்த நிலைக்கு காரணம் அரசாங்கம் முறையாக நீர்நிலைகளை பராமரிக்காததும், ஆற்று மணலை கொள்ளையர்களுக்கு தாரை வார்த்ததும் தான். ஆனால் அரசாங்க கணக்குப்படி ஒவ்வொரு வருடமும் குளம், ஏரி, வாய்க்கால்கள் சீரமைக்கப்பட்டதாக உள்ளது. ஆனால் உண்மையில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளால் தூர்ந்துகிடக்கிறது. தண்ணீர் தேங்கி பல வருடங்கள் ஆகிவிட்டது. வரத்து வாய்க்கால்களை காணவில்லை.

 

Young people drilling a 300 acre pond at their own expense

 

இனியும் அரசாங்கத்தை நம்பி பயனில்லை என்ற முடிவுக்கு வந்த இளைஞர்கள் நீர்நிலை பாதுகாப்பை கையில் எடுத்துள்ளனர். தூர்ந்துகிடக்கும் குளம் ஏரிகளை தூர்வாரி தண்ணீரை சேமித்தால் நிலத்தடி நீரை பாதுகாக்கலாம் என்ற முடிவுக்கு வந்த இளைஞர்கள் சாதித்தும் காட்டிவிட்டனர்.

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகில் உள்ள களத்தூர் கிராமத்தில் ஒன்றுகூடிய இளைஞர்கள் கடந்த ஆண்டு நீர்நிலைகளை தூர்வார முடிவெடுத்து அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்காமல் பல முறை நீதிமன்றம் சென்று தலா 63 ஏக்கர் பரப்பளவுள்ள 2 குளங்களையும், சில சிறிய குளங்களையும் தூர்வாரி 8.5 கி.மீ வரத்து வாய்க்கால்களையும் சீரமைத்து குளங்களில் தண்ணீரை சேமித்தனர்.

அதன் பலனை கண்டனர். அதாவது, அதுவரை 270 அடி ஆழத்தில் இருந்த நிலத்தடி நீர் மட்டம் குளங்களில் தண்ணீர் தேக்கியதன் பலனாக கடகடவென உயர்ந்து 60 அடிக்குள் வந்தது. இதற்கு ஆன செலவு ரூ 58 லட்சங்கள். அத்தனையும் உள்ளூர் வெளியூர் வெளிநாடு வாழ் இளைஞர்களின் உழைப்பில் வந்த பணம். நீர் உயர்ந்திருப்பதை பார்த்ததும் பணம் ஒரு பொருட்டில்லை என்று மகிழ்ந்தனர் இளைஞர்கள்.

 

Young people drilling a 300 acre pond at their own expense

 

அதே நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலத்தில் கடந்த ஆண்டு அம்புலி ஆறு காட்டாற்றில் மண்ணால் அணை கட்டி குளங்களுக்கு தண்ணீர் கொண்டு சென்றனர். புயல் நேரத்தில் மின்சாரம் இல்லாத போது குளத்து நீர் பயிர்களை காப்பாற்றியது. இந்த ஆண்டும் அதே போன்ற பணிகள் நடந்து முடிந்தது.

இதைப் பார்த்த கொத்தமங்கலம் இளைஞர்கள், தங்கள் ஊரில் ஆயிரம் அடியிலும் தண்ணீர் கிடைக்கவில்லை, அதனால் நீர்நிலைகளில் தண்ணீரை சேமிக்க வேண்டும் என்று கொத்தமங்கலம் இளைஞர்மன்றம் என்ற அமைப்பை ஏற்படுத்தி கிராமத்தில் உள்ள அணைகள், குளங்கள், வரத்து வாய்க்கால்களை சுமார் 40 நாட்களாக சீரமைத்து வருகின்றனர். 100 நாள் வேலையில் குளம் வெட்டி மண் சுமந்து சேமித்த பணத்தை நீர்நிலை பாதுகாப்புக்காக இளைஞர்கள்  குளம் தூர்வாரும் பணிக்காக ரூ 10 ஆயிரத்தை ராஜம்மா பாட்டி கொடுக்க, அதன் பிறகு தினம் தினம் நிதி கொடுத்து இளைஞர்கள் பணிக்கு துணையாக நிற்கிறார்கள் இளைஞர்களும் கிராம மக்களும்.

அடுத்து வடகாடு கிராமத்திலும் குளம் சீரமைப்பு பணிகளை இளைஞர்கள் தொடங்கி, செய்து வருகின்றனர். அருகில் உள்ள மாங்காடு கிராம இளைஞர்கள் குளம் சீரமைப்புக் குழு உருவாக்கி பணிகளை தொடங்க தயாராகிவிட்டனர்.

இந்த நிலையில் தான் தஞ்சை மாவட்டம் களத்தூரில் தண்ணீரை கண்ட கடைமடைப் பகுதி விவசாயிகள் சங்கமான கைஃபா மற்றொரு பெரிய பணியை கையில் எடுத்துள்ளனர்.

பேராவூரணியில் பெரிய குளம் என்று அழைக்கப்படும் சுமார் 300 ஏக்கர் பரப்பளவுள்ள குளத்தை சீரமைக்க பல நாட்களாக திட்டமிட்டு குழு அமைத்து வந்த நிலையில் இன்று களத்தில் இறங்கிவிட்டனர். ஜெ சி பி, டிப்பர் டிராக்டர்களுடன் குள்தில்தூர்வாரும் பணியை தொடங்குள்ள இளைஞர்கள் குளத்தை தூர்வாருவதுடன வரத்து வாய்க்கால்களையும் தூர்வாரி இந்த வருடம் பெரிய குளத்தில் தண்ணீரை தேக்கி, குறைந்து வரும்  நிலத்தடி நீரை மீட்போம். இதே போல பல நீர்நிலை பாதுகாப்பு, நிலத்தடி நீர் சேமிப்பு பணிகளில் கைஃபா தொடர்ந்து செயலாற்றும் என்றனர்.

இந்த தகவல் அறிந்த இதே பகுதியை சேர்ந்த சிவக்குமரன் என்பவர், அமெரிக்காவில் வசித்தாலும் தங்கள் ஊர் நீர்நிலை உயர வேண்டும், அதற்கு எனது சிறு உதவி முதலில் இருக்க வேண்டும் என்று ரூ.ஒரு லட்சம் பணத்தை நிதியாக கொடுத்துவிட்டார். இதைப் பார்த்த குழுவினருக்கு பெரும் மகிழ்ச்சி.. எப்படியும் எடுத்த பணியை எளிதில் முடிப்போம் என்றனர்.

அரசாங்கம் செய்ய வேண்டிய பணிகளை இளைஞர்கள் செய்ய தொடங்கியிருப்பதைப் பார்த்து மக்கள் பாராட்டி வருகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆடு மேய்க்கச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்; அச்சத்தில் உறைந்த கிராம மக்கள்!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
The cruelty that happened to the woman who went to herd the goats; Villagers frozen in fear

தஞ்சாவூரில் ஆடுகளை மேய்க்கச் சென்ற பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அடுத்துள்ளது மனையேறிப்பட்டி. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த 48 வயது பெண் ஒருவர், கருமம்குளம் பகுதியில் ஆடுகளை எப்பொழுதும் மேய்ச்சலுக்குக் கொண்டு செல்வது வாடிக்கை. அதன்படி நேற்று மேய்ச்சலுக்கு ஆடுகளை அழைத்துச் சென்ற நிலையில் மாலை வரை அவர் வீடு திரும்பவில்லை. இதனால் காணாமல் போனவரைத் தேடி உறவினர்கள் குளக்கரை பகுதிக்குச் சென்றுள்ளனர். அப்பொழுது அப்பெண்ணின் செருப்பு மற்றும் அவர் உணவு எடுத்து வந்த பாத்திரம், தண்ணீர் பாட்டில் ஆகியவை மட்டும் தரைப்பகுதியில் கிடந்தது.

இதனால் சந்தேகமடைந்தவர்கள் அக்கம் பக்கத்தில் தேடிய பொழுது அப்பெண் ஆடைகள் களையப்பட்ட நிலையில் ரத்த காயத்துடன் சடலமாகக் கிடந்தார். பின்னர், உடனடியாக காவல்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஒருவேளை அப்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும், அச்சத்தையும்  ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

முதல்வர் காட்டிய கறார்; ஓரங்கட்டப்பட்ட சீனியர் - யார் இந்த முரசொலி?

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Thanjavur Parliamentary Constituency Candidate murasoli Details

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி முதற்கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணியில் தொகுதிப் பங்கீடுகள் இறுதி செய்யப்பட்டு, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அந்த வகையில், கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியது போக, 21 தொகுதிகளில் போட்டியிடும் திமுகவின் வேட்பாளர்கள் பட்டியலை, அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கடந்த மார்ச் 20 ஆம் தேதி வெளியிட்டார். அந்த வேட்பாளர் பட்டியலில் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கப்பாண்டியன், டி.ஆர். பாலு போன்ற திமுகவின் முக்கிய புள்ளிகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புதுமுக வேட்பாளர்கள் 11 பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பை மேடையில் வெளியிட்ட மு.க. ஸ்டாலின், தஞ்சையில் முரசொலி என்ற வேட்பாளரை அறிமுகப்படுத்திவிட்டு, 'முரசொலியே அங்கே நிற்கிறது' என அழுத்தமாக கூறினார். அப்போதே அனைவரது கவனத்தையும் புதுமுக வேட்பாளர் முரசொலி பெற்றார். இந்த நிலையில், தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராக அறிமுகமான முரசொலி, 9 முறை தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்டு அதில் 6 முறை எம்.பியாக தஞ்சையில் வெற்றிபெற்ற சீனியரான பழநிமாணிக்கத்தை ரேஸில் வீழ்த்தி வேட்பாளர் பட்டியலில் இடம் பிடித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

போட்டியிடும் தொகுதி மக்களுக்கே ஆச்சரியம் கொடுத்துள்ளார் புதுமுக வேட்பாளர் முரசொலி. தலைமை எப்படி அவரை தேர்ந்தெடுத்தது என்பது குறித்து தஞ்சை திமுகவினர் வட்டாரத்தில் பேசுகையில், பல தகவல்கள் கிடைத்தது. முன்னதாக தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு பழநிமாணிக்கம், முரசொலி, ராதிகா மணிமாறன், அஞ்சுகம் பூபதி, கலைவாணி மோகன் உள்ளிட்ட 24 பேர் விருப்ப மனுவை திமுக தலைமையிடம் தாக்கல் செய்திருந்தனர். ஆனால், நேர்காணலில் திமுக தலைமை முரசொலி மற்றும் ராதிகா மணிமாறனிடம்  மட்டும் எவ்வளவு பணம் தேர்தலுக்கு செலவு செய்வீர்கள் எனக் கேட்டு விவரம் பெற்றுள்ளனர். ஆனால், சீனியர் சிட்டிங் எம்.பி. பழநிமாணிக்கத்திடம் எதுவும் கேட்கவில்லை எனச் சொல்லப்படுகிறது. இதுவே, சிட்டிங் எம்.பி. பழநிமாணிக்கத்திற்கு இந்த முறை வாய்ப்பு கிடைக்காது எனப் பேசுபொருளை உண்டாக்கியுள்ளது.

இப்படியிருக்கையில், முரசொலியோ தலைமையிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் முன்னே தொகுதிக்கு உட்பட்ட சில எம்.எல்.ஏக்களை சந்தித்து சீட் கிடைத்தால் ஆதரவு வேண்டும் என ஆசி பெற்றுள்ளார். இதனால், முரசொலி தான் தஞ்சை வேட்பாளர் என திமுகவினர் பரவலாகப் பேசியுள்ளனர். இந்த செய்தி அறிந்த சிட்டிங் எம்.பி. பழநிமாணிக்கம் தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் முகாமிட்டு மீண்டும் தொகுதியில் போட்டியிட காய் நகர்த்தியுள்ளார். ஆனால், அவரை அழைத்துப் பேசிய திமுக தலைமை, இந்த முறை உங்களுக்கு சீட் இல்லை. கட்சி அறிவிக்கும் நபரை வெற்றிபெறச் செய்யுங்கள் என்று வெளிப்படையாக சொல்லியுள்ளது. அப்போது, இந்த ஒரு முறை மட்டும் என தஞ்சை சிட்டிங் எம்.பி. பேச்சை ஆரம்பிக்க, கட்சியின் தலைமையோ ஸ்ட்ரிக்டாக புதுமுகம் தான் இந்த முறை என சொல்லியதாகக் கூறுகின்றனர். இந்த நிலையில், திமுக தலைமை புதுமுகமான முரசொலியை வேட்பாளராக அறிமுகப்படுத்தியுள்ளதாக தஞ்சாவூர் திமுகவைச் சேர்ந்தவர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

தஞ்சை தொகுதிக்குள் பெரிதாக அறிமுகம் இல்லாத முரசொலி, வேட்பாளராக இடம் பிடிப்பதற்கு அவருடைய அமைதியான சுபாவம் தான் முக்கிய காரணம் எனச் சொல்லப்படுகிறது. மத்திய மாவட்டச் செயலாளர் எம்.எல்.ஏ. துரை. சந்திரசேகரனின் நெருங்கிய ஆதரவாளர் முரசொலி. திருவையாறு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தென்னங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர். இவருடையது பாரம்பரியமான தி.மு.க குடும்பம். முன்பே வடக்கு ஒன்றியச் செயலாளருக்கான உள்கட்சித் தேர்தலில் பழநிமாணிக்கம் தரப்பை எதிர்த்து முரசொலியை ஒன்றியச் செயலாளர் ஆக்கினார் சந்திரசேகரன். அதன் பிறகு கட்சிப்பணிகளை செய்து வந்த முரசொலி, ஒன்றியச் செயலாளராகப் பொறுப்பேற்ற பிறகு, இரண்டு இடங்களில் 50 அடி உயர கொடிக் கம்பத்தில் தி.மு.க கொடி ஏற்றும் நிகழ்வை விமரிசையாக நடத்தினார்.

அப்போது உதயநிதி ஸ்டாலின் முரசொலியை வெகுவாகப் பாராட்டினார். அமைச்சர் அன்பில் மகேஸ், மேயர் சண். ராமநாதன் ஆகியோரின் சிபாரிசும் அவருக்கு கிடைக்க வேட்பாளர் ரேஸில் வெற்றி பெற முக்கிய காரணமாக திமுகவினர் கூறுகின்றனர். அதிலும் மேயர் ராமநாதன், முரசொலிக்காக தனிப்பட்ட முறையில் உதயநிதியிடம் பேசியதாகச் சொல்லப்படுகிறது. டி.ஆர். பாலு ஆதரவும் இருந்தது இவருக்கான ப்ளஸ் பாயிண்ட். தென்னங்குடி கிராமத்தைச் சேர்ந்த முரசொலி எளிமையாவர், அமைதியான சுபாவம் கொண்டவர் எல்லோரிடமும் அன்பாகப் பழகக் கூடியவர் என்கின்றனர் திமுகவைச் சேர்ந்தவர்கள். அந்த பண்பே முரசொலி சத்தமில்லாமல் சாத்தித்துள்ளதாக அவரின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். துரை. சந்திரசேகரன் ஆதரவாளரான முரசொலிக்கு சீட் கிடைத்திருப்பதன் மூலம் சந்திரசேகரனின் கை தஞ்சையில் ஓங்கியிருக்கிறது என்பதை அறிய முடிகிறது.

புதுமுகமாக இருந்தாலும் தஞ்சை தொகுதியில் தி.மு.க-விற்கு பெரும்பான்மையான ஆதரவு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சாதாரண பொறுப்பில் இருப்பவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்பதை நிரூபிக்கும் விதமாக புதியவரான முரசொலிக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த முறை பழநிமாணிக்கத்திற்கு வயது அதிகம் ஆகிவிட்டது என்றும், 6 முறை ஒரே தொகுதியில் எம்.பியாக வென்ற ஒருவருக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு வழங்கினால், அந்த மாவட்டத்தில் பணியாற்றும் புதியவர்கள் சோர்ந்து போய்விடுவார்கள் என்பதும் தான் அக்கட்சியினர் கூறும் காரணமாக இருக்கிறது. ஆனால், சீட் கிடைக்காதவர்கள், அதிருப்தியில் உள்ளடி வேலை செய்யக்கூடும், தொகுதிக்கு புதிய முகம் உள்ளிட்டவை முரசொலிக்கு சவாலாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதனிடையே, முரசொலியின் ஆதரவாளர்கள் தஞ்சையில் தடபுடலாக தேர்தல் பணிகளைச் செய்து வருகின்றனர்.