Skip to main content

செல்ஃபி எடுக்க முயன்று தடுப்பணையில் விழுந்த இளைஞர் சடலமாக மீட்பு!

Published on 29/12/2021 | Edited on 29/12/2021

 

The young man who took a selfie in the broken block

 

சாத்தனூர் அணையிலிருந்து புறப்பட்டு வருவது தென்பெண்ணை ஆறு. இந்த ஆறு திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களைக் கடந்து கடலில் கலக்கிறது. புதுச்சேரி மாநிலம் சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரின் மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 32). இவர் தனது உறவினர்கள் 3 பேருடன் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள உறவினர் ஊரான அண்ராயநல்லூருக்கு துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

 

துக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு ஊருக்குத் திரும்பும்போது ஏனாதிமங்கலம் அருகே தென்பெண்ணை ஆற்றில் குறுக்கே கட்டப்பட்டிருந்த சேதம் அடைந்த எல்லீஸ் அணைக்கட்டை வேடிக்கை பார்த்துவிட்டு செல்வதற்காக அணை பகுதிக்கு சென்றுள்ளார். அப்பொழுது உடைந்த தடுப்பணையில் ஏறி நின்ற கிருஷ்ணமூர்த்தி செல்ஃபோன் மூலம் செல்ஃபி படம் எடுத்துள்ளார். செல்ஃபி எடுக்கும் ஆர்வத்தில் தவறி ஆற்றுத் தண்ணீரில் விழுந்து மாயமானார் கிருஷ்ணமூர்த்தி.

 

ஆழமான பகுதி என்பதால் அங்கு வந்த அவரது உறவினர்கள் தேடிப்பார்த்தும் கிருஷ்ணமூர்த்தியை கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து தகவல் திருவெண்ணைநல்லூர் தீயணைப்பு நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், அலுவலர் சுந்தரமூர்த்தி தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரர்கள் விரைந்து வந்து எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டு ஆற்றுப்பகுதியில் தீவிரமாக கிருஷ்ணமூர்த்தியை தேடும் பணியில் ஈடுபட்டனர். காவல்துறையினர், திருவெண்ணைநல்லூர் வட்டாட்சியர் பாஸ்கரதாஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். ஆனால் இறுதியில் பலமணிநேர தேடுதலுக்கு பின் தண்ணீரில் விழுந்து மூழ்கிய கிருஷ்ணமூர்த்தி சடலமாக மீட்கப்பட்டார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.