Skip to main content

காதலிக்க கட்டாயப்படுத்திய இளைஞர்... பெண்ணின் புகாரையடுத்து கைது செய்த காவல்துறையினர்!

Published on 02/09/2021 | Edited on 02/09/2021

 

The young man who forced himself to fall in love ... The police arrested him on the complaint of the woman

 

இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார்(26). இவர் சென்னை ஓரகடம் பகுதியில் உள்ள ஒரு தனியார் செல்போன் உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் கண்காணிப்பாளராக வேலை செய்து வருகிறார். அதே நிறுவனத்தில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவரும் அங்குச் சென்று வேலைக்குச் சேர்ந்து  வேலை செய்து வந்துள்ளார்.

 

அந்தக் காலகட்டத்தில் வினோத் குமார் அந்த இளம்பெண் இருவருக்கும் இடையே அறிமுகமான பழக்கம் பிறகு காதலாக மாறியுள்ளது. இந்த நிலையில் அவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுப் பிரிந்து விட்டனர். அந்தப் பெண் தன் சொந்த ஊருக்கு வந்து விட்டார். ஆனால் வினோத் குமார் அந்த பெண்ணின் ஊருக்கே தேடி வந்து அந்த பெண்ணிடம் தன்னை மீண்டும் காதலிக்க வேண்டும்; என்னோடு சென்னைக்கு வரவேண்டும் என்று வற்புறுத்தி உள்ளார். அந்த இளம்பெண் முடியாது என மறுத்ததால் அவரை திட்டி வினோத்குமார் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

 

மேலும் இருவரும் காதலித்த போது சேர்ந்து எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு உன்னை அவமானப்படுத்துவேன் என்று வினோத்குமார் கூறி மிரட்டியதாகவும் தெரிகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்ட அந்த பெண் வேப்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து வேப்பூர் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரா, வினோத்குமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.