Skip to main content

திருமணமான பெண்ணுடன் வாலிபர்...கண்டித்த சித்தி...நடந்த விபரீதம்!

Published on 21/09/2019 | Edited on 21/09/2019

சென்னையில் திருமணமாகி கணவரை இழந்த பெண்ணுடன் வாலிபர் தொடர்பு வைத்ததை கண்டித்த சித்தியால் அந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பாகியுள்ளது. இது பற்றி விசாரித்த போது,  சென்னையின் அனகாபுத்தூரைச் சேர்ந்தவர் மனோஜ்குமார் எனும் வாலிபர். இவர் சிறு வயது இருக்கும் போதே பெற்றோரை இழந்துள்ளார். இதனால் தனது சித்தி வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் அதே பகுதியில் இருக்கும் பரிமளா என்ற பெண்ணுடன் நடப்பாக பழகி வந்துள்ளார். அப்போது பரிமளா ஏற்கனவே திருமணமாகி கணவனை இழந்துள்ளார் என்ற விஷயம் மனோஜ்குமாருக்கு தெரிய வந்துள்ளது. மேலும் கணவனை இழந்த பரிமளாவிற்கு 13 வயதில் ஒரு மகள் உள்ளார் என்பதும் மனோஜ் குமாருக்கு தெரிந்துள்ளது. இருந்தாலும் நட்பாக பழகி வந்த மனோஜ்குமாருக்கு நாளடைவில் பரிமளா மீது காதல் மலர்ந்துள்ளது. 
 

youngster



பின்பு இருவரும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இருவரும் கணவன், மனைவி போல் வாழ்ந்து வந்துள்ளனர். இதை அறிந்த மனோஜ்குமாரின் சித்தி இவர்களது உறவை கண்டித்துள்ளார். மேலும் பரிமளாவிடம் இனிமேல் தொடர்பு வைத்துக்கொள்ள கூடாது என்றும் கூறியுள்ளார். ஆனால் அவரது சித்தி பேச்சை கேட்காமல் மனோஜ் பரிமளாவை வீட்டுக்குக் கூட்டி வந்து ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார். இதனால் மனோஜுக்கும் அவரது சித்திக்கும் இடையே தினமும் சண்டை நடந்துள்ளது. இதனால் ஒரு கட்டத்தில் பரிமளா மனோஜை விட்டு பிரிந்து விடலாம் என்று எண்ணியதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து விரக்தியடைந்த மனோஜ் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது பற்றி தகவல் அறிந்து வந்த போலீஸார் வழக்குப்பதிவு செய்து, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.