Skip to main content

வீட்டின் கூரை எரிந்ததில் வாலிபர் உடல் கருகி மரணம்!!

Published on 29/05/2021 | Edited on 29/05/2021

 

The young man's passes away in the burning of the roof of the house

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகில் உள்ளது இளையனார் குப்பம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் 25 வயதான மணிகண்டன். இவர்களின் வீட்டை ஒட்டியவாறு ஒரு பெட்டிக் கடை வைத்து நடத்திவருகிறார். நேற்று (28.05.2021) இரவு 7 மணியளவில் பலத்தக் காற்று வீசியதன் காரணமாக மின்சாரம் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் பெட்டிக் கடையில் வியாபாரம் செய்வதற்காக வெளிச்சம் தேவை என்பதால் மணிகண்டன் வீட்டிற்குள் சென்று மண்ணெண்ணெய் விளக்கு ஒன்றை ஏற்றியுள்ளார். 

 

அப்போது எதிர்பாராதவிதமாக அந்த விளக்கின் மூலம் அவர்களது வீட்டின் கூரை தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது. இதனால் அங்கிருந்த கேஸ் சிலிண்டரில் இருந்து அடுப்புக்கு செல்லும் டியூப் உருகியுள்ளது. பின்னர் அதன் வழியாக சிலிண்டரில் இருந்து கேஸ் வெளியேறியதால் தீ வீடு முழுவதும் பரவியது. அதனால் மணிகண்டன் வீட்டைவிட்டு வெளியே வர முடியாமல் உள்ளே சிக்கிக்கொண்டு கத்திக் கதறித் துடித்துள்ளார். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்த பொதுமக்கள் ஓடிவந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். அப்போது காற்று பலமாக வீசியதால் வீடு முழுவதும் தீ கொழுந்துவிட்டு எரிந்தது.

 

சுற்றிலும் தீ சூழ்ந்து கொண்டதால் மணிகண்டன் வீட்டிலிருந்து வெளியே வர முடியவில்லை. மணிகண்டனை அங்கிருந்த பொதுமக்களால் காப்பாற்ற முடியவில்லை. அதன் பிறகு வீடு முழுவதும் எரிந்து முடிந்ததும் தண்ணீரை ஊற்றி அணைத்தபடி உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த கட்டிலுக்கு கீழே மணிகண்டன் உடல் கருகி நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து பகண்டை கூட்ரோடு காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மணிகண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த போலீசார், தீ விபத்து குறித்து விசாரணை நடத்திவருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் பயங்கர தீ விபத்து; பொதுமக்கள் பாதிப்பு!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
fire in Delhi Public damage

டெல்லியில் உள்ள காஜிபூர் குப்பைக் கிடங்கில் நேற்று (21.04.2024) மாலை எதிர்பாராதவிதமாக தீப்பிடித்தது. இதனால் தீயில் இருந்து தொடர்ந்து புகை கிளம்பி வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குப்பைக் கிடங்கில் இருந்து விஷவாயு உற்பத்தியாகியதால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக டெல்லி தீயணைப்புத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். இதுவரை உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் கூறுகையில், “எங்களுக்கு தொண்டையில் எரிச்சல், புகையால் இருமல் வந்தது. இந்த தீயால் மாசு ஏற்பட்டது. இதனால் அனைவரும் அவதிப்படுகின்றனர்” எனத் தெரிவித்தார். மேலும் இது குறித்து உள்ளூரில் ஒருவர் கூறும்போது, “இன்று கண்விழித்து பார்த்தபோது அந்த பகுதி தெளிவாக தெரியவில்லை. சரியாக மூச்சு விட முடியவில்லை. கண்களில் எரிச்சல் ஏற்பட்டது. வெப்பம் அதிகரிக்கும் போது தீ விபத்துகள் தொடரும். அரசு இந்த பிரச்சனையை தீர்க்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் கூறுகையில், “டெல்லி மாநகராட்சியின் அனைத்து அதிகாரிகளும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீயணைப்பு துறையினரும் தொடர்ந்து  தீயை அணைக்கும் பணியில் பணியாற்றி வருகின்றனர். தீ விரைவில் கட்டுக்குள் கொண்டு வரப்படும்” எனத் தெரிவித்துள்ளார். டெல்லி பாஜக தலைவர் வீரேந்திரா சச்தேவா காஜிபூர் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

Next Story

மதுபோதையில் பேருந்தின் கண்ணாடி உடைப்பு; போலீசார் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Bus window breaking in drunkenness; Police investigation

உளுந்தூர்பேட்டை அருகே மது போதையில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் கண்ணாடியை இரண்டு இளைஞர்கள் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒலையனூர், குணமங்கலம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உளுந்தூர்பேட்டை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது வாகனத்தில் யார் முந்தி செல்வது என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. மது போதையில் இருந்த இரண்டு இளைஞர்களும் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு சென்றனர். அப்போது அவர்கள் இருவரும் ஒலையனூர் பேருந்து நிலையம் அருகே சென்ற போது, போதை ஆசாமி இருவருக்கும் வாக்கு வாதம் முற்றியுள்ளது. இதனால் இளைஞர்கள் இருவரும் மோதிக்கொண்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த எஸ்சிடிசி பேருந்தை தடுத்து நிறுத்திவிட்டு மோதலில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுனர் அந்தப் பேருந்தை அங்கிருந்து எடுத்துச் செல்ல முயன்றுள்ளார். உடனே அந்தப் போதை ஆசாமிகள் இருவரும் அங்கிருந்த கற்களை எடுத்து பேருந்தின் முன் கண்ணாடியை உடைத்தனர். மேலும் அவர்களுக்குள் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில் மூன்று இளைஞர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி வந்த அந்தப் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டதால் பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக குணமங்கலம், ஒலையனூர் பகுதிகளில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் சாலையில் சென்ற பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.