Skip to main content

குரைத்த நாயை விரட்டியதால் அடித்து கொல்லப்பட்ட இளைஞர்! 

Published on 20/05/2022 | Edited on 20/05/2022

 

Young man passed away in puthukottai

 

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு குறிஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்த ரெங்கசாமி என்பவரின் மகன் அருள் (38). இவர், கீரமங்கலம் சந்தைப்பேட்டையில் சிறிய ஓட்டல் ஒன்றை நடத்திவருகிறார். அந்த ஓட்டலை மூடிவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் சென்ற போது நடுவழியில் பெட்ரோல் இல்லாமல் அவரது வண்டி நின்றுள்ளது. அதனைத் தொடர்ந்து தனது நண்பன் சின்ராசுவிடம் பெட்ரோல் வாங்கிவரச் சொல்லிவிட்டு அங்கு நின்ற போது, அருகில் உள்ள வீட்டில் நின்ற நாய் குரைத்துள்ளது. அந்த நாயை விரட்டிய அருள் கம்பெடுத்து தாக்க முயன்ற போது நாயின் உரிமையாளர் நாயை அடிப்பதை பற்றி கேட்க வாய்த்தகராறு ஏற்பட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

 

இந்த சம்பவத்தையடுத்து வீட்டிற்கு சென்ற அருள், மீண்டும் பாதியில் திரும்பி வந்து நாயை அடிக்க சென்றுள்ளார். இதனால் மீண்டு தகராறு ஏற்பட்ட நிலையில் வேம்பங்குடி கிழக்கு அண்ணாத்துரை மகன் தினேஷ் மற்றும் அவரது நண்பரான கீரமங்கலம் தர்மர்கோயில் தெரு அண்ணாத்துரை மகன் மதனும் அருளை தாக்க கீழே விழுந்துள்ளார்.


கீழே விழுந்த அருள், கீரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்று வீட்டிற்கு சென்ற பிறகு வாந்தி எடுத்து மயக்கமடைந்த நிலையில் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்து அருளின் மனைவி சுதா, கீரமங்கலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் தினேஷ், மதன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

 

Young man passed away in puthukottai

 

இந்த நிலையில், அருள் கொலைக்கு நீதி வேண்டும் உரிய இழப்பீடு வேண்டும் என்று சடலம் ஏற்றி வந்த வாகனத்தை மறித்து அருளின் உறவினர்கள் சாலை மறியல் செய்தனர். போலிஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் முக்கிய பிரமுகர்களின் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு பிறகு மறியலை கைவிட்டு சடலத்தை மயானத்திற்கு கொண்டு சென்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.