Skip to main content

ஆன்லைன் சூதாட்டத்தால் திருமணம் ரத்து... உருக்கமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை!

Published on 02/01/2022 | Edited on 02/01/2022

 

Young man commits... after losing money in online gambling

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ளது கூவாகம் நத்தம் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் ராமானுஜம் என்பவரது மகன் 27 வயது குமாரவேலு. இவர் அந்த பகுதியில் உள்ள கிராமங்களில் கேபிள் டிவி ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார். இவருக்கு ஆன்லைன் மூலம் ரம்மி சூதாட்டம் விளையாடுவதில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. அந்த சூதாட்ட கும்பல் முதலில் ஒரு ஆயிரம் இரண்டாயிரம் பணத்தை போனஸ் என்ற பெயரில் குமாரவேலு வங்கிக் கணக்கிற்கு அனுப்பி சூதாடுவதற்கு ஆசையைத் தூண்டி உள்ளது. அதன் பிறகு இவர் சூதாட்டத்தில் விளையாட ஆரம்பித்துள்ளார். இதனால் அவ்வப்போது பணத்தை இழந்தும் வந்துள்ளார்.

 

சூதாட்டத்தில் இழந்த பணத்தை மீண்டும் பெற்றே தீருவது என்ற பிடிவாத எண்ணத்துடன் உறவினர்கள், நண்பர்கள் என்று பலரிடமும் கடன் பெற்று அந்தப் பணத்தையும் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்துள்ளார். இந்தநிலையில் குமாரவேலுவின் பெற்றோர் அவர்களதுஉறவினர் பெண் ஒருவரை குமாரவேலுக்கு திருமணம் செய்வதற்காகப் பேசி முடிவு செய்துள்ளனர். திருமணம் செய்யப்போவதை காரணம் காட்டி மேலும் பலரிடம் கடன் பெற்றுள்ளார் குமாரவேலு. அந்தப் பணத்தையும் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்துள்ளார். இந்தத் தகவல் பெண் வீட்டாருக்கு தெரிய வரவே குமாரவேலுவுக்கு பெண் கொடுக்க மறுத்துவிட்டனர். இதனால் மனம் உடைந்த குமாரவேலு சில தினங்களுக்கு முன்பு வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்து விஷத்தைக் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அவரது உறவினர்கள் அவரை மீட்டு உடனடியாக சிகிச்சைக்குச் சேர்த்து உடல்நிலை தேறி வீடு திரும்பியுள்ளார். அதன் பிறகாவது அந்த சூதாட்ட போதையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளாமல் மீண்டும் மீண்டும் குமாரவேலு ஆன்லைன் சூதாட்டத்தில் ரம்மி விளையாடுவதில் தீவிரமாக இருந்துள்ளார்.

 

இவரது செயலை கண்டு இவருக்கு யாரும் பணம் கொடுக்க முன்வரவில்லை. இந்தநிலையில் தனது உறவினர் ஒருவரிடம் இருசக்கர வாகனத்தை இரவல் வாங்கி அதை அடமானம் வைத்து அந்தப் பணத்தையும் சூதாட்டத்தில் இழந்துள்ளார். அதனால் குமாரவேலுக்கு 4 லட்சம் வரை கடன் அதிகரித்தது பணம் கொடுத்தவர்கள் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் மனம் உடைந்த குமாரவேலு சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை, அவரது பெற்றோரும் உறவினர்களும் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

 

இந்த நிலையில் நேற்று திருவெண்ணைநல்லூர் மலட்டாறு பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்கில் தொங்கியுள்ளார் குமாரவேல். அவரது சட்டைப்பையில் 'என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. நான் சூதாட்டத்தில் பணத்தை இழந்து கடன்காரன் ஆனதால் அதிலிருந்து மீள முடியாமல் வேறு வழியில்லாமல் தற்கொலை செய்து கொள்கிறேன்' என்று எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் குமாரவேல். இந்த தகவல் திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்திற்கு அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குமாரவேல் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் சூதாட்டத்தில்  பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டவர்கள் பட்டியல்கள் நீண்டு கொண்டே செல்கிறது. எனவே தமிழக அரசு இப்படிப்பட்டவர்களைக் காப்பாற்றுவதற்கு உரிய சரியான முடிவு எடுக்க வேண்டும். இல்லையேல் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.