கோவை குணியமுத்தூர் பிகேபுதூரை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த 31/1 19. அன்று காணாமல் போனதாக கோவை குணியமுத்தூர் காவல் நிலையத்திற்கு வந்த புகாரை தொடர்ந்து. போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடிவந்தார்கள். இந்நிலையில்3/2/19, அன்று பழனியில் காவல் துறையினர் காணமல்போன சிறுமியுடன் 20 வயது மதிக்கத்தக்க இளைஞரையும் மீட்டு கோவை அழைத்து வந்து விசாரித்தார்கள். விசாரணையில் கோவை கணபதி பகுதியில் சிறுமி வசித்து வந்த பொழுது அதேபகுதியில் ஓம்னி வேன் ஓட்டும் சவுகத் அலி(20 வயது) என்பவருடன் நட்பாக பழகி வந்துள்ளார்.

sexual-abuse

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

சவுகத் அலி அந்த பழக்கத்த பயன்படுத்தி சிறுமியை அழைத்துக்கொண்டு திருப்பூர், மற்றும் பழனியில் விடுதி எடுத்து பாலியல் வல்லுறவு கொண்டதாக விசாரணையில் தெரிவித்துள்ளார். எனவே சவுகத் அலி யை போலிசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளார்கள்.

மேலும் விசாரணையில் அவர் திருவண்ணாமலை மாவட்டம், அண்ணா நகர் பகுதியில் வசித்துவரும் பாஷா என்பவரது மகன் என்பது தெரியவந்துள்ளது.