Skip to main content

மாணவியின் வாக்குமூலத்தால் போக்சோவில் கைதான இளைஞர்! 

Published on 13/06/2022 | Edited on 13/06/2022

 

Young man arrested in pocso

 

கடலூர் மாவட்டம், தொழுதூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது மாணவி. கடலூர் மாவட்டம், கொரக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் சரவண பிரகாஷ்(27). இவர், சென்னையில் ஒரு பேக்கரி கடையில் வேலை செய்து வருகிறார். இவர் அந்த மாணவிக்கு செல்போன் உரையாடல் மூலம் அறிமுகமாகியிருக்கிறார். சரவண பிரகாஷ், ஊருக்கு வரும்போது எல்லாம் மாணவியை நேரில் சந்தித்துள்ளார். அதில், இருவருக்கும் இடையே காதல் வளர்ந்துள்ளது. 

 

இவர், கடந்த 15.1.2021 அன்று மாணவியை அவரது பெற்றோருக்கு தெரியாமல் அழைத்துச் சென்று தனது உறவினர் ஊரில் வைத்து திருமணம் செய்து கொண்டார். சில நாட்கள் கழித்து, தனது சொந்த ஊரான கொரக்கை கிராமத்தில் உள்ள தனது தாய் தந்தையுடன் மனைவியை கொண்டு வந்து தங்க வைத்துவிட்டு சென்னைக்கு வேலைக்கு சென்றுள்ளார். சென்னையில், சரவண பிரகாஷ் வேலை செய்யும் அதே பேக்கரி கடையில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வேறு ஒரு இளைஞனும் சரவண பிரகாஷுடன் வேலை செய்து வந்துள்ளார். இருவரும் ஒரே அறையில் தங்கி உள்ளனர். 


இந்த நிலையில் சரவண பிரகாஷின் 17 வயது மனைவி, தனது கணவருக்கு செல்போனில் தொடர்புகொள்ளும் நேரங்களில் அவ்வப்போது, சரவண பிரகாஷின் நண்பன் எடுத்து பேசியுள்ளார். இப்படி அடிக்கடி சரவண பிரகாஷ் மனைவி அவரது நண்பனுடன் பேசி பழகி இருவரும் நெருக்கமாகி உள்ளனர். இந்த விஷயம் அந்தப் பெண்ணின் கணவரான சரவண பிரகாஷுக்கு தெரியவந்து, மனைவியை கண்டித்துள்ளார். அதோடு மனைவி வைத்திருந்த செல்போனையும் அவரிடமிருந்து பறித்துள்ளார். அதன்பிறகும் அந்தப் பெண் அக்கம் பக்கத்தினரின் செல்போன் வாங்கி அதன் வழியாக சரவண பிரகாஷ் நண்பனிடம் தொடர்ந்து பேசி வந்துள்ளார். 


இவர்கள் செல்போன் தொடர்பு குடும்பத்தில் பெரும் சிக்கலை உருவாக்கும் என்று எண்ணிய சரவண பிரகாஷ், மனைவியை வீட்டில் இருக்க வேண்டும். வெளியில் எங்கும் தனியாக செல்லக்கூடாது வேறு யாருடனும் செல்போனில் பேசக்கூடாது என்று கண்டித்ததோடு தனது தாய் தந்தையிடம் கூறி மனைவியை கண்காணிக்குமாறு கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த பிரகாஷ் மனைவி, தனது பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளார். தன்னை சரவண பிரகாஷ் வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்கிறார் என்று கூறியுள்ளார். 


அதனைத் தொடர்ந்து அவரது பெற்றோர்கள், இதுகுறித்து மங்களூர் ஊராட்சி ஒன்றிய அலுவலர் புண்ணியவதிக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து புண்ணியவதி, போலீசில் புகார் கொடுத்துள்ளார். அவரது புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் அன்னக்கொடி நேரில் சென்று விசாரணை நடத்தினார். அப்போது அந்த மாணவி, ஆசை வார்த்தை கூறி சரவண பிரகாஷ் தன்னை திருமணம் செய்து கொண்டு, தன்னை வீட்டை விட்டு வெளியேறாமல் அடைத்து வைத்திருப்பதாகவும், தான் அவருடன் இருக்க விருப்பமில்லை என்றும் அந்த இளம்பெண் வாக்குமூலம் அளித்துள்ளார். அதன்பின் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் சரவண பிரகாஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.