Skip to main content

கல்யாணம் பண்ணிக்க எப்படி சம்மதம் வாங்கினேன்னு உனக்குத் தெரியுமா? அதிர வைத்த இளம்பெண்ணின் சம்பவம்!

Published on 09/03/2020 | Edited on 09/03/2020

இல்ல தினேஷ், நீ முன்ன மாதிரி இல்லை. நெறைய தப்பு பண்றே. குடி, சிகரெட், பொண்ணுக...ன்னு நீ இந்த உலகத்துல இருக்கற எல்லா தப்பையும் பண்ண ஆரம்பிச்சுட்டே. இந்த ஆறு வருஷமா உன்னைய லவ் பண்ணினதை நெனச்சா எனக்கே அருவருப்பா இருக்குது. இந்த நிலைமையில நான் எப்படி உன்னைய கல்யாணம் பண்றது? அப்படி கல்யாணம் பண்ணாலும் நல்லா வாழமுடியும்ங்கற நம்பிக்கை எனக்கு இல்லை.
 

incident



உன்மேல இருக்கற காதலால எங்க அம்மாவை எப்படியெல்லாம் சமாதானப்படுத்தி, நாம கல்யாணம் பண்ணிக்க சம்மதம் வாங்கினேன்னு உனக்குத் தெரியுமா? எல்லாம் வீணாப் போச்சு. நான் உன்னைய மறக்கறது ரொம்ப கஷ்டம். எப்படி மறப்பனோ... எனக்கே தெரியல. ஆனாலும் நாம பிரியறதுதான் உனக்கும் சரி... எனக்கும் சரி... ரொம்ப நல்லது'' என கோவை கீரநத்தம் கல்லுக்குழி அருகே வசிக்கும் நந்தினி தனது காதலன் தினேஷிடம் கண்ணீர் முட்ட சொல்லிக் கொண்டு பஸ் ஏறி வீட்டுக்கு வந்துவிட்டார்.

தினேஷோ, நந்தினி படிக்கும் கல்லூரி வாசலில் நின்றுகொண்டு .வெளியே வரும் நந்தினியை மறித்து, "என்னைய கல்யாணம் பண்ணியே ஆகோணும். இல்லைன்னா உன்னைய கொலை செய்யக்கூட தயங்கமாட்டேன்... இது சத்தியம்'' என தொடர்ந்து மிரட்டினான். சட்டை செய்யவில்லை நந்தினி. கடந்த பிப்ரவரி 28-ந் தேதி மாலை கீரநத்தம் பகுதியில் உள்ள மதுக் கடை ஒன்றில் மது அருந்திவிட்டு தனது டூ வீலரை எடுத்துக்கொண்டு கோபம் கொந்தளிக்க நந்தினி வீட்டுமுன் பைக்கை மௌனமாக்கினான் தினேஷ். நந்தினி மட்டுமே வீட்டிலிருப்பதை உறுதி செய்து கொண்டு அவன் வீட்டிற்குள் நுழைந்தான்.

"நந்தினி... நான் வெறிகொண்டு இருக்கறேன். என்னைய கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்லு... அய்யோ சொல்லு...'' என அவன் ஒரு சைக்கோவாய் மாறி கத்தி நிற்பதை அறியாத நந்தினி, "நீ எத்தனை முறை கேட்டாலும் நான் உன்னைய கல்யாணம் பண்ணிக்கறதுக்கு... பேசாம தூக்குப்போட்டு செத்துப் போயிரலாம்னுதான் சொல்லுவேன்'' என்றாள்.

 

incident



"தெரியுண்டீ நீ இப்படித்தான் சொல்லுவேன்னு?'' என சொல்லிக் கொண்டே வீட்டில் இருந்த சேரை எடுத்து நந்தினியின் தலையில் அடித்தான். ரத்தம் சொட்ட கீழேவிழுந்த அவள் எந்திரிக்க முயல... துப்பட்டாவில் நந்தினியின் கழுத்தை நெரித்த தினேஷ், தனது பேண்ட் பாக்கெட்டில் கலக்கி வைத்திருந்த சாணிப்பவுடரை பாட்டிலில் இருந்து நந்தினியின் வாயில் ஊற்றினான்.

வெறி பிடித்த அவன் "சாகுடி... எனக்கு இல்லாத நீ எவனுக்கும் கெடைக்கக்கூடாது''என வீட்டை விட்டு வெளியேறினான்.

வேலைக்குப் போயிருந்த நந்தினியின் அம்மா ராமாத்தாள் வீட்டுக்கு வந்தபோது... மயங்கிக் கிடந்த தனது மகளை பதறியடித்துக் கொண்டு அக்கம் பக்கத்தினர் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோனார். அடுத்த நான்குமணி நேரங்களில் அதே அரசு ஆஸ்பத்திரியில் சாணிப்பவுடர் குடித்துவிட்டதாக அட்மிட் செய்யப்பட்டான் தினேஷ்.


அதற்கடுத்த நாள் பிப்ரவரி 29-ந் தேதி மதியம் சிகிச்சை பலனின்றி இறந்துபோனாள் நந்தினி.

அதற்குப் பின்னால் நந்தினியின் உறவினர்கள் முன் அழுத நந்தினியின் அப்பா முருகனும், அம்மா ராமாத்தாளும்... "எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு படிக்க வச்சோம் எங்க பொண்ண. நந்தினியை இப்படி நாசம் பண்ணிட்டானே படுபாவி. இனி இந்த உலகத்துல எங்களுக்குன்னு யாரு இருக்கறா..?'' என ஒத்த புள்ளையை பறிகொடுத்த ஏக்கத்தோடு அவர்கள் அழுததை அங்கிருந்த யாராலும் ஜீரணிக்க முடியவில்லை.


நந்தினி கொலையை விசாரிக்கும் கோவில்பாளையம் போலீசாரிடம் நாம் பேசியபோது, "அந்த தினேஷ் சரியான ஆள் இல்லை. இந்த 21 வயசுலயே எப்படி எல்லாம் யோசிக்கிறானுக பாருங்க. அவனுக்கு நந்தினிமேல உண்மையான காதல் இருந்திருந்தா அந்தப் பொண்ண அடிச்சு சாணிப் பவுடரை குடிக்க வச்சபோதே... அவனும் அந்த இடத்துலயே சாணிப்பவுடரை குடிச்சிருக்கலாம். ஆனா நாலுமணி நேரம் கழிச்சு... லைட்டா சாணிப்பவுடரை வாயில தேய்ச்சுட்டு வந்து, சாணிப்பவுடர் குடிச்சதா நாடகமாடி ஆஸ்பத்திரியில படுத்திட்டு இருக்கான் என்றார்கள்.

"காதல் கசிந்து கண்ணீர் மிகுந்து அழுவதெல்லாம் பழைய கதை. இப்போதெல்லாம் காதல் கசந்தால் சாணிப்பவுடரில் கொல்லலாம்' ...என நந்தினியைக் கொன்று புதிய தத்துவத்தை எழுதியிருக்கிறான் சைக்கோ தினேஷ்.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

வெள்ளியங்கிரி மலை ஏறிய இளைஞருக்கு நேர்ந்த துயரம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy befell the young man who climbed the Velliangiri mountain

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது டிரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு, கீழே இறங்கியபோது 7 வது மலையில் திருப்பூரை சேர்ந்த வீரக்குமார் (வயது 31) என்பவர் கடந்த 18 ஆம் தேதி தவறி விழுந்தார். இதனால் அவரின் கை மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

உடல்நலக் குறைவால் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய 7 பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக் உயர்ந்துள்ளது. முன்னதாக சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது எனவும், கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.