Skip to main content

ஏன் இப்படியே பண்றீங்க... பெற்ற தாயால் இளம்பெண் எடுத்த முடிவு... விசாரணையில் அதிர்ச்சி தகவல்! 

Published on 15/11/2019 | Edited on 15/11/2019

திருமணத்திற்காக தாய் கடன் வாங்கியதால் மனமுடைந்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஈரோடு அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே வசிப்பவர் சந்திரன். அவரது மனைவி மோகனா. இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சத்யா(21) என்ற மகளும், பிரவீன்குமார்(18) என்ற மகனும் உள்ளார். சத்யாவின் தந்தை சந்திரன் இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதன் பின்பு மோகனா தனது மகன், மகளோடு கோயம்பத்தூரில் குடியேறினார். அங்கு குடும்ப வறுமையை போக்குவதற்காக விவசாய நிலத்தில் கூலி வேலை செய்து வந்துள்ளார் மோகனா. 

 

incident



இந்த நிலையில் சத்யாவிற்கு மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்துள்ளனர். திருமணம் நடத்துவதற்காக சத்யாவின் தாயார் மோகனா கடன் வாங்கியதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே இவர்களுக்கு நிறைய கடன் இருக்கும் சூழலில் தற்போது தனது திருமணத்திற்கும் எதற்காக மேலும் கடன் வாங்குகிறீர்கள் என சத்யா தாயார் மோகனாவை திட்டியுள்ளார். இதனால் தாய் மோகனாவுக்கும், மகள் சந்தியாவிற்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சந்தியா தாயுடன் சண்டை போட்டு வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். வெகு நேரமாகியும் சந்தியா வீட்டிற்கு வராததால் அவரது தாய் பதற்றம் அடைந்துள்ளார். பின்பு சந்தியாவை தேடி வந்துள்ளார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. 

அதன்பிறகு, வீட்டிலிருந்து சில மீட்டர் தூரத்தில் இருக்கும் கிணற்றில் சத்யா விழுந்து கிடப்பதாக கூறியுள்ளனர். பின்பு பதறிப்போய் அங்கு சென்று மோகனா பார்த்துள்ளார். கிணற்றில் விழுந்து சத்யா இறந்து கிடந்ததை பார்த்து கதறி அழுதுள்ளார். பிறகு இச்சம்பவம் குறித்து தீயணைப்பு படையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக போராடி சத்யாவின் உடலை மீட்டு இருக்கின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இது உண்மையிலேயே தற்கொலையா? இல்லை, வேறு ஏதும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.   

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.