Skip to main content

பரிதாபப்பட்டு உதவிய ஆசிரியர்; விபூதி அடித்த இளம்பெண் 

Published on 09/08/2023 | Edited on 09/08/2023

 

young girl stole a cell phone from a teacher who was helping her

 

தாம்பரம் அருகே சேலையூர் இந்திரா நகரைச் சேர்ந்தவர் நளினி (55). இவர் மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கான சிறப்பு ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் தனது மகன் ரானக்ஸ் (16) என்பவருடன் அந்தப் பகுதியில் வசித்து வருகிறார். இவர் பணிபுரியும் இடத்திற்குத் தினமும் தாம்பரம் ரயில் நிலையத்துக்குச் சென்று அங்கு வருகிற மின்சார ரயில் மூலமாகத் தான் செல்வார். அப்படி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, இவர் மின்சார ரயிலில் பயணம் செய்தபோது, பவித்ரா(21) என்ற பெண் அறிமுகமாகியுள்ளார். மின்சார ரயில் பயணத்தில் தினமும் பேசி வந்த இவர்களுக்குள் நாளடைவில் நட்பு ஏற்பட்டுள்ளது. அந்த நட்பின்பால், நளினியின் செல்போன் எண்ணை வாங்கிய பவித்ரா, தினமும் செல்போனில் நளினியுடன் பேசி வந்துள்ளார். மேலும், நளினியின் வீட்டு முகவரி உள்ளிட்ட விபரங்களையும் பவித்ரா கேட்டு வாங்கியுள்ளார்.

 

இந்த நிலையில், நேற்று முன்தினம் நளினியை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட பின், நளினியின் வீட்டிற்கு பவித்ரா சென்றுள்ளார். அங்கு சென்ற பவித்ரா நளினியிடம், தனக்குத் துணையாக யாரும் இல்லை. அதனால், ஏதாவது வேலை வாங்கித் தர வேண்டும். மேலும், ஒருநாள் மட்டும் நளினியின் வீட்டில் தங்கிக் கொள்வதாகக் கெஞ்சி கேட்டுள்ளார். அவரின் பேச்சை நம்பிய நளினி, பவித்ராவை தனது வீட்டில் தங்குமாறு அனுமதி கொடுத்துள்ளார். அதன் பின்னர், நளினி கழிவறைக்குச் சென்ற நேரத்தில், கழிவறைக் கதவை வெளியே பூட்டிய பவித்ரா, வீட்டிலிருந்த செல்போனை திருடிக் கொண்டு அந்த இடத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

 

இதனையடுத்து, கழிவறையின் கதவை வெளியே பூட்டி இருப்பதை உணர்ந்த நளினி, கழிவறையின் கதவைத் தட்டியுள்ளார். இந்த சத்தத்தைக் கேட்டு, பக்கத்து அறையில் இருந்த நளினியின் மகன் வந்து கதவைத் திறந்துள்ளார். அதன் பின்னர், நளினி வெளியே வந்து பார்த்தபோது, வீட்டிலிருந்த பவித்ரா தனது செல்போனுடன் மாயமானது தெரியவந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த நளினி அருகில் இருக்கும் சேலையூர் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும்,  செல்போனை திருடிவிட்டுத் தப்பிச்சென்ற பவித்ராவை பிடிப்பதற்கு, தாம்பரம் ரயில் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் திடீர் மரணம்; கணவர் பரபரப்பு புகார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Family planning woman passed away suddenly

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே உள்ள கோடேபாளையத்தைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம் (30). இவரது மனைவி துர்கா (27). கடந்த 2018ல் இருவருக்கும் திருமணமானது. இவர்களுக்கு நான்கரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், 2-வது பிரசவத்துக்காக கடந்த 20ம் தேதி துர்காவை புளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அன்றைய தினம் மதியம் சுக பிரசவத்தில் குழந்தை பிறந்தது. அவரது குடும்பத்தினர் அருகில் இருந்து கவனித்துக் கொண்டனர். தொடர்ந்து, நேற்று முன் தினம் காலை துர்காவுக்கு குடும்பக் கட்டுப்பாடு ஆபரேசன் செய்யப்பட்டது. மாலையில் அவருக்கு 106 டிகிரி அளவுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ரத்தப் போக்கும் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மருத்துவர்கள், உயர் சிகிச்சைக்காக துர்காவை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த துர்கா, சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் உயிரிழந்தார்.

இதையடுத்து, தனது மனைவிக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்த மருத்துவர்கள் தவறான சிகிச்சையளித்தன் காரணத்தால் தான் தன் மனைவி இறந்துவிட்டார். எனவே, உரிய முறையில் பிரேத பரிசோதனை செய்து, சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கணவர் பன்னீர் செல்வம், புளியம்பட்டி போலீசில் புகார் தெரிவித்துள்ளார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

இளம் பெண் ரயில் நிலையம் அருகே கொடூரக் கொலை; பின்னணி என்ன ?

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
A young woman from Chennai was passed away near Gudiyattam railway station

வேலூர் மாவட்டம் குடியாத்தம், சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் தீபா. 30 வயதான இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் திருமணமாகி விவாகரத்து பெற்று தனது தாயாருடன் வசித்து வந்தார்.

கடந்த 14ஆம் தேதி அலுவல் காரணமாக குடியாத்தம் சென்று வருவதாக தனது தாயாரிடம் கூறிவிட்டு வந்தவர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனுக்கு தொடர்புகொண்டபோது அது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. எங்கே போனாலும் மகள் தினமும் தன்னுடன் பேசிவிடுவார் அப்படி இருக்க செல்போன் சுவிட்ச் ஆப் செய்து விட்டார். தன்னையும் தொடர்பு கொள்ளவில்லை என்பதால் அவர் பயந்து போனார்.

இதுகுறித்து அவரது தாயார் கடந்த 16ஆம் தேதி சென்னை புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட புளியந்தோப்பு போலீசார் செல்போன் எண்களை ஆராய்ந்து அம்பத்தூர் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த குடியாத்தம் அடுத்த சின்ன நாகால் பகுதியை சேர்ந்த ஹேம்ராஜ் (25) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மொபைல் கடையில் பணியாற்றி வந்த தீபா உடன் ஹேம்ராஜிற்கு நட்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே கடந்த 2022 ஆம் ஆண்டு காட்பாடி ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து இளம் பெண்ணை தள்ளிவிட்ட வழக்கில் ஹேம்ராஜ் 11 மாதங்கள் சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார். இதனிடையே இவரது மொபைல் எண்ணிற்கு தீபா குறுஞ்செய்தியும் அனுப்பியுள்ளார். இதனை அடுத்து நீண்ட நாட்களுக்குப் பிறகு பேசிய ஹேம்ராஜ் தான் ரயில்வேயில் பணிக்காக தேர்வுக்காக தயாராகி வருவதாகவும் நீயும் ரயில்வே பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் அதற்கான புத்தகங்கள் தன்னிடம் உள்ளதாக கூறி கடந்த 14ஆம் தேதி குடியாத்தம் ரயில்வே நிலையத்திற்கு தீபாவை ஹேம்ராஜ் வரவழைத்துள்ளார்.

இதனையடுத்து குடியாத்தம் ரயில் நிலையம் அருகே உள்ள மலையடிவாரத்திற்கு தீபாவை அழைத்துச் சென்று அங்கு தீபாவுடன் தனிமையில் இருந்துள்ளார். அங்கே இருவருக்கும் உருவான பிரச்சனையில் தீபா தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு அங்கிருந்து சென்னைக்குச் சென்றுள்ளது விசாரணையில் தெரிய வந்தது.

இதுகுறித்து ஹேமராஜை கைது செய்த குடியாத்தம் போலீசார் கொலைக்கான காரணம் உண்மைதானா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரயிலில் இருந்து ஒரு பெண்ணை கீழே தள்ளி கொலை குற்ற வழக்கில் சிறையில் இருந்தவன், ரயில்வே தேர்வு எழுதுகிறேன் என ஒரு படித்த பெண்ணிடம் சொல்ல இதை அவர் எப்படி நம்பினார்? இவன் சொல்வது உண்மையான காரணமா அல்லது வேறு ஏதாவது காரணமா என தீவிரமாக புலன் விசாரணை செய்து வருகின்றனர்.

சென்னையில் காணாமல் போன இளம் பெண் குடியாத்தம் ரயில் நிலையம் அருகே சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.