Skip to main content

அப்பாவுக்கு ரொம்ப முடியல... இதை வச்சுட்டு பணம் கொடுங்க... பலரை ஏமாற்றிய இளம்பெண்!

Published on 18/12/2019 | Edited on 18/12/2019

சென்னை ஸ்டான்லி மருத்துவனையில் அப்பாவிற்கு உடம்பு சரியில்லை தங்க நாணயத்தை வைத்து கொண்டு பணம் கொடுங்கள் என்று இளம்பெண் ஒருவர் ஏமாற்றி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நோயாளிகளை பார்க்க வருபவர்களிடம் இளம் பெண் ஒருவர் தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறியுள்ளார். அப்போது தந்தையின் மருத்துவ செலவிற்கு பணம் இல்லை என்று அங்கு நோயாளிகளை பார்க்க வருபவர்களிடம் கூறியுள்ளார். அதோடு அந்தப் பெண் என்னிடம் இந்த தங்க நாணயம் தான் இருக்கிறது இதை வைத்து கொண்டு 500 ரூபாய் கொடுங்கள் போதும் என் தந்தையின் மருத்துவ செலவை இதை வைத்து பார்த்துக்கொள்வேன் என்று கூறியுள்ளார். நோயாளிகளை பார்க்க வருபவர்களும் இந்த பெண்ணிற்கு உதவலாம் என்று நினைத்து, அவள் சொல்வது உண்மை என்று நம்பி தங்க நாணயத்தை வெறும் 500 ரூபாய்க்கு பணம் கொடுத்து வாங்கி சென்றுள்ளனர். இதேபோல், பலரிடம் அந்த இளம்பெண் பணம் நாணயத்தை கொடுத்து பணம் பெற்றுள்ளார். அவ்வாறு தங்க நாணயத்தை வாங்கிச் சென்றவர்கள், அதனை கடையில் கொடுத்தபோது, அது போலி நகை என தெரிந்தது. 

 

priya



மேலும் அவை அனைத்தும் கவரிங் நகைகள் என தெரிந்து ஏமாந்தது அருகில் இருக்கும் வண்ணாரப்பேட்டை காவல் துறைக்கு இது குறித்து தகவல் அளித்துள்ளனர். அதன் பின்பு புகாரின் அடிப்படையில் ஸ்டான்லி மருத்துவமனைக்கு விரைந்த காவல் துறையினர் விசாரணை நடத்தி தங்க நாணயம் என ஏமாற்று வேலையில் ஈடுபட்ட இளம்பெண்ணை கைது செய்தனர். விசாரணையில், அந்த பெண்ணின் பெயர் ப்ரியா என்பதும், அவர் ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. ப்ரியாவிடம் நடந்த விசாரணையில், அவர் மருத்துவமனை வளாகத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தது காவல் துறைக்குத் தெரியவந்துள்ளது. 


அப்போது போலீஸார் நடத்திய விசாரணையில் மேலும் ஒரு அதிர்ச்சி தகவலை அந்தப் பெண் தெரிவித்துள்ளார். அதில், கடந்த சில நாட்களுக்கு முன் ஸ்டான்லி மருத்துவமனையில் நோயாளியை பார்க்க ஆட்டோவில் வந்த மூதாட்டியிடம், நூதன முறையில் செயின் பறித்தது இவர்தான் என்பதும் தெரிய  வந்தது. பின்னர் 3 சவரன்  நகையை பறிமுதல் செய்த போலீசார், ப்ரியாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல்  சிறையில் அடைத்தனர். மேலும் தங்கச் சங்கிலியை பறிகொடுத்த மூதாட்டி ஏற்கனவே வண்ணாரப் பேட்டை காவல் நிலையத்தில் அளித்திருந்த புகார் நிலுவையிலிருந்த நிலையில், இப்போது அந்த புகார் தொடர்பான குற்றவாளி சிக்கியுள்ளதாக வண்ணாரப் பேட்டை காவல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இளம்பெண் ஒருவர் பல மோசடி செயல்களில் ஈடுபட்டு வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் பிரச்சாரம்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Kolathur MK Stalin propaganda

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இதனையொட்டி திருவள்ளூர் மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் மற்றும் வடசென்னை மக்களவைத் தொகுதியின் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து நேற்று (15.04.2024) தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வடசென்னையில் வாக்கு சேகரித்தார். இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியுடன் சென்னை கொளத்தூரில் இன்று (16.04.2024) காலை வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்தார். அப்போது பொதுமக்களை சந்தித்து வடசென்னை கலாநிதி வீராசாமியை ஆதரித்து வாக்கு சேகரித்தார். மேலும் பொதுமக்களின் குறைகளையும் கேட்டறிந்தார். அப்போது அவருடன் பொதுமக்கள் ஆர்வத்துடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து திறந்த வாகனத்தில் சென்று ஆதரவு திரட்டினார். சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்கள முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அமைச்சர் சேகர்பாபு மற்றும் திமுக நிர்வாகிகள் எனப் பலரும் உடன் இருந்தனர். மேலும் இன்று மாலை நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்கிறார். நாளை மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்வது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு; மும்பை போலீசார் அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
incident front of Salman Khan house Mumbai police in action

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவர் மும்பை பாந்த்ரா நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (14.04.2024) இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த போது சல்மான் கான் வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பிச்சென்ற மர்ம நபர்களைத் தேடி வந்தனர். சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், அவர் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் பூஜ் பகுதியில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இது குறித்து பூஜ் சார்பில் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஏப்ரல் 14 ஆம் தேதி நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை மேற்கு கச்சச் போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பீகாரைச் சேர்ந்த விக்கி குப்தா (வயது 24), சாகர் பால் (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.