Skip to main content

அப்பாவுக்கு ரொம்ப முடியல... இதை வச்சுட்டு பணம் கொடுங்க... பலரை ஏமாற்றிய இளம்பெண்!

Published on 18/12/2019 | Edited on 18/12/2019

சென்னை ஸ்டான்லி மருத்துவனையில் அப்பாவிற்கு உடம்பு சரியில்லை தங்க நாணயத்தை வைத்து கொண்டு பணம் கொடுங்கள் என்று இளம்பெண் ஒருவர் ஏமாற்றி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நோயாளிகளை பார்க்க வருபவர்களிடம் இளம் பெண் ஒருவர் தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறியுள்ளார். அப்போது தந்தையின் மருத்துவ செலவிற்கு பணம் இல்லை என்று அங்கு நோயாளிகளை பார்க்க வருபவர்களிடம் கூறியுள்ளார். அதோடு அந்தப் பெண் என்னிடம் இந்த தங்க நாணயம் தான் இருக்கிறது இதை வைத்து கொண்டு 500 ரூபாய் கொடுங்கள் போதும் என் தந்தையின் மருத்துவ செலவை இதை வைத்து பார்த்துக்கொள்வேன் என்று கூறியுள்ளார். நோயாளிகளை பார்க்க வருபவர்களும் இந்த பெண்ணிற்கு உதவலாம் என்று நினைத்து, அவள் சொல்வது உண்மை என்று நம்பி தங்க நாணயத்தை வெறும் 500 ரூபாய்க்கு பணம் கொடுத்து வாங்கி சென்றுள்ளனர். இதேபோல், பலரிடம் அந்த இளம்பெண் பணம் நாணயத்தை கொடுத்து பணம் பெற்றுள்ளார். அவ்வாறு தங்க நாணயத்தை வாங்கிச் சென்றவர்கள், அதனை கடையில் கொடுத்தபோது, அது போலி நகை என தெரிந்தது. 

 

priya



மேலும் அவை அனைத்தும் கவரிங் நகைகள் என தெரிந்து ஏமாந்தது அருகில் இருக்கும் வண்ணாரப்பேட்டை காவல் துறைக்கு இது குறித்து தகவல் அளித்துள்ளனர். அதன் பின்பு புகாரின் அடிப்படையில் ஸ்டான்லி மருத்துவமனைக்கு விரைந்த காவல் துறையினர் விசாரணை நடத்தி தங்க நாணயம் என ஏமாற்று வேலையில் ஈடுபட்ட இளம்பெண்ணை கைது செய்தனர். விசாரணையில், அந்த பெண்ணின் பெயர் ப்ரியா என்பதும், அவர் ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. ப்ரியாவிடம் நடந்த விசாரணையில், அவர் மருத்துவமனை வளாகத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தது காவல் துறைக்குத் தெரியவந்துள்ளது. 


அப்போது போலீஸார் நடத்திய விசாரணையில் மேலும் ஒரு அதிர்ச்சி தகவலை அந்தப் பெண் தெரிவித்துள்ளார். அதில், கடந்த சில நாட்களுக்கு முன் ஸ்டான்லி மருத்துவமனையில் நோயாளியை பார்க்க ஆட்டோவில் வந்த மூதாட்டியிடம், நூதன முறையில் செயின் பறித்தது இவர்தான் என்பதும் தெரிய  வந்தது. பின்னர் 3 சவரன்  நகையை பறிமுதல் செய்த போலீசார், ப்ரியாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல்  சிறையில் அடைத்தனர். மேலும் தங்கச் சங்கிலியை பறிகொடுத்த மூதாட்டி ஏற்கனவே வண்ணாரப் பேட்டை காவல் நிலையத்தில் அளித்திருந்த புகார் நிலுவையிலிருந்த நிலையில், இப்போது அந்த புகார் தொடர்பான குற்றவாளி சிக்கியுள்ளதாக வண்ணாரப் பேட்டை காவல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இளம்பெண் ஒருவர் பல மோசடி செயல்களில் ஈடுபட்டு வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.