Skip to main content

காதலித்து ஏமாற்றிவிட்டதாகப் பட்டாலியன் காவலர் மீது இளம்பெண் புகார்!      

Published on 22/06/2023 | Edited on 22/06/2023

 

 young girl complained to the battalion guard that she was in love and cheated

 

சேலம் அருகே, தன்னைக் காதலித்து ஏமாற்றிவிட்டதாகப் பட்டாலியன் காவலர் மீது இளம்பெண் புகார் அளித்துள்ளார். சேலம் மாவட்டம் வேம்படிதாளத்தைச் சேர்ந்தவர் வினோதா (19 - பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், சேலம் நகர மகளிர் காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். 

 

அதில் கூறியுள்ளதாவது: “நானும், பட்டாலியன் காவல்துறையில் பணியாற்றி வரும் காவலர் ஒருவரும் உயிருக்கு உயிராகக் காதலித்து வந்தோம். அவர் என்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறியதால் நான் அவரிடம் நெருங்கிப் பழகினேன். பலமுறை தனிமையில் இருவரும் ஒன்றாக இருந்திருக்கிறோம். ஆனால் திடீரென்று அவர் என்னைத் திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார். அவரை என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார். 

 

சேலம் பட்டாலியனில் பணியாற்றி வரும் அந்த காவலரை, மகளிர் காவல்நிலைய காவல்துறையினர் நேரில் அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது, காதலித்தது உண்மைதான் என்று ஒப்புக்கொண்ட அந்தக் காவலர், தன் மீது புகார் அளித்த வினோதாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்று தெரிவித்துள்ளார். மேலும், ஒரு வாலிபரை தன்னுடன் அழைத்து வந்திருந்த காவலர், இவர்தான் அந்தப் பெண்ணின் கணவர் என்றும் காண்பித்தார். கடந்த சில ஆண்டுக்கு முன்பு அந்த வாலிபர், வினோதாவை காதல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் இந்த இளைஞர், அவருக்கு சித்தப்பா  உறவு முறை என்பதாலும், அப்போது நடந்தது குழந்தைத் திருமணம் என்பதாலும் இருதரப்பு உறவினர்களிடமும் மோதல் ஏற்பட்டது. பின்னர், இருதரப்பு உறவினர்களும் கூடிப்பேசி அவர்களைப் பிரித்துவிட்டனர். அதன் பிறகுதான் வினோதா என்னுடன் பழகி வந்தார் என்றும்  காவலர் கூறியுள்ளார்.     

 

இதையடுத்து, இளம்பெண்ணை காதலித்தும் நெருக்கமாகப் பழகியும் ஏமாற்றிவிட்டதாகக் காவலர் மீது வழக்குப்பதிவு செய்ய காவல்துறையினர் முடிவு செய்தனர். இந்நிலையில் திடீர் திருப்பமாக, புகார் அளித்த வினோதா, காவலரை கைது செய்தால் அவர் சிறைக்குச் செல்வதோடு, வேலையும் பறி  போய்விடும். அதனால் அவரை கைது செய்ய வேண்டாம் என்றும், தன்னுடன் சேர்த்து வைக்குமாறும் கூறினார். இதையடுத்து, அவர்கள் இருவருக்கும் மகளிர் காவல்துறையினர் குடும்ப நல ஆலோசகர்கள் மூலம் ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.