Skip to main content

“நீங்க கிளம்புங்க மேடம்; நாங்க பாத்துக்கிறோம்..” - அதிகாரிகள் சொல்லியும் கேட்காத கனிமொழி!

Published on 03/12/2021 | Edited on 03/12/2021

 

“You leave, madam; We care. ”- Kanimozhi who did not listen to the officials

 

வடகிழக்கு பருவமழையால் தமிழகமே வெள்ளக்காடாக மாறியிருந்தது. மக்கள் சொல்லொணா துயரத்தை அனுபவித்தனர். போர்க்கால நடவடிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டார். வெள்ளத்தால் பாதித்த பகுதிகளுக்கு விசிட் அடித்து மக்களின் துயரங்களைப் போக்க ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துவந்தார். மேலும், வெள்ளபாதிப்புகளை ஆய்வு செய்யவும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை துரிதப்படுத்தவும் அமைச்சர்கள் குழுவை அமைத்து அவர்களும் துரித பணியாற்றினர். இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளப்பகுதிகளை பார்வையிட்டு, மக்களை மீட்கும் நடவடிக்கைகளை எடுப்பதிலும், அவர்களுக்கான நிவாரண உதவிகளை வழங்குவதிலும் தீவிரமாக களப்பணியாற்றினார் அத்தொகுதி எம்.பி. கனிமொழி. 

 

அதித கனமழையைச் சந்தித்த தூத்துக்குடியின் பெரும்பாலான பகுதிகளை வெள்ள சூழ்ந்தது. அதனால், மாவட்ட  எம்.பி.யான கனிமொழி அதிகாரிகளுடன் பேசி அனைத்து வகையான நடவடிக்கைகளையும் எடுத்தார். 

 

இந்த நிலையில், குரும்பூர் அருகே உள்ள கடம்பாகுளம் கால்வாய் உடைந்ததால், ஊருக்குள் வெள்ளம் பாயும் அபாயம் இருந்தது. உடனே ஊர் மக்கள் பலரும், கனிமொழியை தொடர்புகொண்டு தகவலை தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து கனிமொழி, மாவட்ட கலெக்டருக்கும், வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தார். மேலும், அவரும் உடனடியாக கால்வாய் உடைப்பு பகுதிக்குச் சென்றார். 

 

“You leave, madam; We care. ”- Kanimozhi who did not listen to the officials

 

அதிகாரிகள் வருவதற்கு முன் ஸ்பாட்டுக்குச் சென்ற கனிமொழி, கால்வாய் உடைப்பை பார்வையிட்டார். அதேசமயம், பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளும் அங்கு விரைந்து வந்தனர். கால்வாய் உடைந்து வெள்ளம் வெளியேறிக் கொண்டிருக்கும் பகுதிகளை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர் அதிகாரிகள். பணிகள் வேகமெடுத்தன. அவர்களுக்கும் தேவையான உதவிகளை செய்து கொண்டிருந்தார் கனிமொழி. நேரம் கடந்து கொண்டே இருந்தது. நள்ளிரவு 1 மணியை தாண்டியும் பணிகள் நடந்து கொண்டிருந்தன. 

 

கால்வாய் சரி செய்யப்படுவதை கவனித்துக் கொண்டிருந்த கனிமொழி, அங்கிருந்து நகரவில்லை. அப்போது அதிகாரிகள், “மேடம், நள்ளிரவு 1 மணிக்கு மேலே ஆய்டுச்சு. கால்வாயை சீரமைக்க இன்னும் 2 மணி நேரம் ஆகலாம். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் கிளம்புங்கள் மேடம்” என்று சொல்லிப் பார்த்தார்கள். இருந்தும் கனிமொழி பணிகளை பார்வையிட்டு கொண்டிருந்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Tuticorin incident Court action order

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (27.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” என பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

“அ.தி.மு.க., பா.ஜ.க.வுக்கு நல்ல பாடத்தை சொல்லித் தரக்கூடிய தேர்தல் இது” - கனிமொழி எம்.பி.!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
"ADMK, BJP This is an election that can teach parties a good lesson" - Kanimozhi MP

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம், வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மக்களவை தொகுதிகளுக்கான தி.மு.க. மற்றும் அதன் கூட்டணியின் வேட்பாளார்களை ஆதரித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள எட்டையபுரத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை இன்று (26.12.2024) மேற்கொண்டார்.

முன்னதாக தூத்துக்குடி தி.மு.க. வேட்பாளரும், தி.மு.க. துணைப் பொதுச செயலாளருமான கனிமொழி எம்.பி. பேசுகையில், “சில மாதங்களுக்கு முன்னர் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தின் கரிசல் பூமி கண்ணீரில் தவித்துக் கொண்டிருந்தபோது மத்திய அரசு கைகட்டி பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால் நான் இருக்கிறேன் என கருணையோடு ஓடி வந்தது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தான். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எந்த பகுதியில் இருந்தாலும் நிவாரணம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கியது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மட்டும் தான். இந்திய சரித்திரத்திலேயே இல்லாத அளவிற்கு வீடு இடிந்தவர்களுக்கு 4 லட்ச ரூபாயை தி.மு.க. அரசு.

"ADMK, BJP This is an election that can teach parties a good lesson" - Kanimozhi MP

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவிக்கரம் நீட்டுவது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தான். ஆனால் இங்கு ஓட்டு கேட்க மட்டுமே வந்து கொண்டிருக்கிற பிரதமர் நிவாரண நிதியையும் கொடுப்பதில்லை. மாநிலத்திற்கு கொடுக்க வேண்டிய நிதியையும் கொடுப்பதில்லை. நம்மிடம் ஒரு ரூபாயை வரியாக வாங்கினால் 26 காசுகளை மட்டுமே கொடுக்கின்றனர். ஆனால் உத்தரப்பிரதேசத்திற்கு 2 ரூபாய் 2 காசுகள் என இருமடங்காக கொடுக்கின்றனர். இப்படி தமிழ்நாட்டை வஞ்சித்துக் கொண்டிருக்கிற, ஓர வஞ்சனை செய்துகொண்டிருக்க கூடிய பா.ஜ.க.வோடு இத்தனை ஆண்டுகளாக எடுத்த மக்கள் விரோத, சிறுபான்மையினருக்கு விரோதமான, விவசாயிகளுக்கு விரோதமான அத்தனை சட்டங்களையும் ஆதரித்து வாக்களித்தது அ.தி.மு.க.. ஆனால் இன்று பிரிந்துவிட்டோம் என்று நாடகமாடிக் கொண்டிருக்க கூடிய அ.தி.மு.க. உள்ளிட்ட இரண்டு கட்சிகளுக்கு நல்ல பாடத்தை சொல்லித் தர கூடிய தேர்தல் இது” எனப் பேசினார்.