Skip to main content

மக்களை திரட்டி பிரச்சனைகளை உண்டாக்கியுள்ளீர்கள்; மீத்தேன் எதிர்ப்பு மாநாட்டுக்கு போலிஸார் திடீர் தடை!!

Published on 20/09/2018 | Edited on 20/09/2018

காவிரி படுகை முழுவதையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும், என மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் சார்பில் வரும் 23 ம் தேதி நடக்க இருந்த இயற்கை வளம், கணிம வளம் பாதுகாப்பு மாநாட்டிற்கான அனுமதியை காவல்துறை மறுத்திருக்கிறது.

 

methen

 

மாநாட்டில் அ.தி.மு.க பா.ஜ.கவை தவிர்த்து மற்ற அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும், இயங்கங்கங்களின் தலைவர்களும் கலந்து கொள்ள இருந்த நிலையில் மாநாட்டின் ஒருங்கினைப்பாளரும், மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கினைப்பாளருமான பேராசிரியர் ஜெயராமன் மீது 24 வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரனையில் இருப்பதால் அனுமதியை மறுக்கிறோம் என  காக்கிகள் கூறி மறுத்திருப்பதால் பரபரப்பு அதிகரித்திருக்கிறது.

 

methen

 

நாகை மாவட்டம் மயிலாடுதுறை தனியார் திருமண மண்டபம் ஒன்றில்  வரும், 23 ம் தேதி  இயற்கைவளம், கனிமவள பாதுகாப்பு மாநாட்டிற்கு ஏற்பாடு செய்திருந்தார் பேராசிரியர் ஜெயராமன். அந்த மாநாட்டில் பழ நெடுமாறன், திருமாவளவன், டி.டி.வி.தினகரன், வேல்முருகன், ஜவாஹிருல்லா , எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி, வழக்கறிஞர் பாலு, கொளத்தூர் மணி, உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்குகொள்ள இருந்தனர்.  காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அரங்க மாநாடாக  நடக்க இருந்த மாநாட்டிற்கு மயிலாடுதுறை காவல்துறை திடிர் தடை போட்டிருக்கிறது. 

 

மயிலாடுதுறை டி.எஸ்.பி வெங்கடேசன் இதற்கான ஆணையை பிறப்பித்திருக்கிறார். தடைக்கான நகலை பேராசிரியர் ஜெயராமன் வீட்டின் சுவற்றில் ஓட்டிவிட்டு சென்றுள்ளனர்.

 

அந்த ஆணையில், "இந்த மாநாட்டினால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும், பெரிய அளவில் சட்டம் ஓழுங்கு பாதிக்கும். மயிலாடுதுறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மத்திய அரசின் திட்ட பணிகள் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடந்து வருகிறது. அதற்கு எதிராக பல்வேறு சட்ட விரோத போராட்டங்களை நடத்தி மக்களை திரட்டி பிரச்சனைகளை உண்டாக்கியுள்ளீர்கள் அந்த வகையில் உங்கள் மீது 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற விசாரனையில் இருக்கிறது. இந்த மாநாட்டின் மூலமும் அது போல் பிரச்சினை எழலாம். அதனால் நீங்கள் நடத்த இருந்த மாநாட்டிற்கான அனுமதியை ரத்து செய்கிறோம், " என குறிப்பிட்டுள்ளனர்.

 

methen

 

methen

 

இது குறித்து பேரசிரியர் ஜெயராமனிடம் கேட்டோம், " மக்களுக்கு விழிப்புனர்வை ஏற்படுத்திவிடும் , மக்கள் தன்னெழுச்சியாக போராடுவார்கள், மத்திய அரசின் திட்டம் பலிக்காது என்பது மத்திய அரசின் கவலை, மாநிலத்தில்  அ.தி.மு.க ஆட்சி நடக்கிறதா என்பது புரியாமல் மக்கள் துயரத்தில் உள்ளனர், வரும் தலைவர்கள் அதிமுக அரசின் கையாலாகாத நிலை குறித்து மக்களிடம் பேசி விடுவார்கள் என்கிற கவலை அதிமுகவினருக்கு . மணல் கொள்ளை குறித்து கூறிவிடுவார்கள் என்கிற கவலை காக்கிகளுக்கு, அதனால் தான் தடை போடுகின்றனர். சட்டபடி  மாநாட்டை நடத்துவோம்" என்கிறார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.

Next Story

நொடிப்பொழுதில் நிகழ்ந்த மரணம்! வெளியான அதிர்ச்சி வீடியோ!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Youth passed away after falling into water tank in Hyderabad

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் அருகே அமைந்துள்ளது கஜ்ஜிபவுலி. இப்பகுதியில் உள்ள தனியார் விடுதியில் வசித்து வந்தவர் ஷேக் அக்மல் சுபியான். 24 வயதான ஷேக் அக்மல் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர், பணி செய்வதற்கு ஏதுவாக வேலை செய்யும் ஐடி நிறுவனம் அருகிலேயே தனியார் விடுதியில் தங்கியிருந்துள்ளர்.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி விடுமுறை என்பதால் ஷேக் அக்மல் விடுதி அருகில் உள்ள கடைக்கு மளிகை பொருட்கள் வாங்கச் சென்றுள்ளார். தேவையானதை வாங்கி முடித்தவர் மீண்டும் தனது விடுதிக்கு திரும்பியுள்ளார். அப்போது, அவர் தங்கியிருந்த விடுதியின் கேட் அருகே தண்ணீர் தொட்டி திறந்து கிடந்துள்ளது. ஆனால், அதனைக் கவனிக்காமல் சென்ற ஷேக் அக்மல், விடுதி வாசல் அருகே திறந்து வைக்கப்பட்டு இருந்த தண்ணீர் தொட்டில் தவறி விழுந்துள்ளார். நொடி பொழுதில் எதிர்பாராமல் தண்ணீர் தொட்டியில் விழுந்த வேகத்தில் ஷேக் அக்மல் சுபியானின் முக நாடிப் பகுதி தண்ணீர் தொட்டியின் கான்கீரிட் மீது பலமாக மோதி உடைந்தது. அதில், ரத்தம் கொட்டி மயக்க நிலையில் அவர் தண்ணீர் தொட்டியினுள் மூழ்கியதாக கூறப்படுகிறது. இதனை யாரும் கவனிக்காத நிலையில், இளைஞர் கீழே விழுந்த சத்தம் வீட்டின் உள்ளே இருந்த சிறுவனுக்கு மட்டும் கேட்டுள்ளது. சத்தம் கேட்ட அந்தச் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்ததை விட்டுவிட்டு விடுதி பொறுப்பாளரிடம் கூறுயுள்ளார். அப்போது, விடுதி வாசலுக்கு வந்தவர், திறந்துக்கிடந்த தண்ணீர் தொட்டிக்குள் யாரேனும் உள்ளனரா எனத் தேடிப்பார்த்துள்ளார்.

ஆனால், யாரும் தென்படாத நிலையில், தனது வழக்கமான பணிகளை மேற்கொள்ள அவர் சென்றுவிட்டார். அதன் பிறகு அங்கிருந்தவர்களும் தங்களது பணிகளை மேற்கொள்ள சென்றுவிட்டனர் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, மாலை நேரத்தில் ஷேக் அக்மல் காணவில்லை என்ற தகவல் விடுதி காப்பாளருக்குச் சென்றுள்ளது. அவர், விடுதியின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளார். அப்போதுதான் நடந்த அதிர்ச்சி சம்பவம் அனைவருக்கும் தெரிய வந்தது. கடைசியாக கடைக்குச் சென்று திரும்பிய ஷேக் அக்மல் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த காட்சிகள் சிசிடிசியில் பதிவிவாகி இருந்தது. இதைப்பார்த்து அதிர்ந்து போன விடுதி காப்பாளர் அங்கிருந்தவர்கள் உதவியுடன் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த  ஷேக் அக்மலினை மீட்டனர். ஆனால், அவர் இறுதியில் சடலமாகவே மீட்கப்பட்டார். இதையடுத்து, நடந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஷேக் அக்மல் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதனிடையே, ஷேக் அக்மல் தவறி விழும் சிசிடிசி காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி  வருகிறது. அதில், ஷேக் அக்மல் தவறி விழுவதும், உடனே சத்தம் கேட்டு குழந்தை விடுதி பொறுப்பாளரை எச்சரிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. ஆனால், விடுதி பொறுப்பாளர் தேடிப்பார்த்தும் யாரும் உள்ளே விழுந்தது போல தெரியாததால் அவர் மற்ற பணிகளைச் செய்வதும் தெரிய வந்துள்ளது. இதற்கிடையில், வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் துவங்கிய போலீசார் அஜாக்கிரதையாக தண்ணீர் தொட்டியைத் திறந்து வைத்த விடுதி உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இளைஞர் ஒருவர் தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத் அருகே வீட்டின் தண்ணீர் தொட்டியில் விழுந்த ஐடி ஊழியர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.