Skip to main content

நீ அரிசி தா, நான் சாராயம் தருகிறேன் – பண்டமாற்றில் திணறும் அதிகாரிகள்!

Published on 22/10/2019 | Edited on 22/10/2019

வேலூர் மாவட்டத்தில் காட்பாடி, கே.வி.குப்பம், வாணியம்பாடி, குடியாத்தம், பேரணாம்பட்டு, நாட்றாம்பள்ளி தாலுக்காவின் பெரும்பாலான கிராமப்புற பகுதிகள் ஆந்திரா மாநில எல்லையோரம் வருகின்றன. இந்தபகுதிகளில் வாணியம்பாடி, நாட்றம்பள்ளி, பேரணாம்பட்டு பகுதியில் இருந்து ஆந்திரா மாநில கிராமங்களுக்கு செல்லும் பிரதான சாலையை தவிர்த்த ஒற்றையடி பாதைகள் வழியாக தமிழகத்தில் இருந்து விலையில்ல ரேஷன் அரிசி கடத்தி சென்று அங்கு விற்பதும், ஆந்திராவில் இருந்து சாராயம் கடத்தி வந்து தமிழகத்தில் விற்பதும் வாடிக்கையாக உள்ளது.

 

You give rice, i give you booze


இதனைத்தடுக்க வேண்டும் என பலதரப்பில் இருந்தும் கோரிக்கை, இளைஞர்கள் போராட்டம் நடத்தினாலும் காவல்துறை, உணவு கடத்தல் தடுப்புத்துறை போன்றவற்றில் உள்ள கறுப்பாடுகளால் தடுக்க முடியாமல் தவிக்கின்றனர். அவர்களையும் மீறி நடைபெறும் ரெய்டுகளில் டன் கணக்கில் ரேஷன் அரிசிகள் சிக்கி வருகின்றன.

இந்நிலையில் வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தும்பேரி வட்டம் அண்ணா நகர் பகுதியில் பறக்கும்படை தனி வட்டாட்சியர் தலைமையில் வருவாய்த்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக ஆந்திரா மாநிலத்திற்கு இருசக்கர வாகங்களில் ரேஷன் அரிசி கடத்தி வந்தனர். அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்ததை கண்டு அரிசி மற்றும் இருசக்கர வாகங்களை விட்டு கடத்தல் காரர்கள் தப்பி ஓட்டம். கடத்தலுக்கு பயன்படுத்திய 2 இருசக்கர வாகங்கள் மற்றும் 450 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இப்படி அடிக்கடி சிக்கினாலும் தற்போது ஒரு புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ஆந்திரா மாபியாக்கள் சாராயம் கொண்டு வந்து தந்துவிட்டு அதற்கு பதில் ரேஷன் அரிசி வாங்கி செல்வதும், வேலூர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சாராய விற்பனை கும்பல், ஆந்திரா சாராயத்தை வாங்க ரேஷன் அரிசியை விலையாக தருவதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதன் முழு விவரத்தை பெற அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர் என்கின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வேட்பாளரை வசைபாடும் நிர்வாகிகள்; அடுத்தடுத்து வெளியாகும் ஆடியோவால் பரபரப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Argument to party officials with Vellore candidate AC Shanmugam

தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. வாக்குப்பதிவு நடந்து முடிந்த பின் சில இடங்களில் உட்கட்சி மோதல் உச்சத்துக்குச் சென்றுள்ளது. வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜகவின் தாமரை சின்னத்தில் புதிய நீதி கட்சியின் நிறுவனர் ஏசி சண்முகம் போட்டியிட்டார். தமிழ்நாட்டில் பணமழை பொழிந்த சிலதொகுதிகளில் மிக முக்கியமானது வேலூர் நாடாளுமன்ற தொகுதி. வாக்காளர்களுக்கு தலா 500 ரூபாய், ஒரு பூத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் என சுமார் 100 கோடிக்கு மேல் தேர்தல் களத்தில் செலவு செய்துள்ளாராம் ஏசி சண்முகம்.

பாஜக நிர்வாகிகள், பாமக நிர்வாகிகள் மாவட்டம் ஒன்றியம் நகர கிளை வரை லட்சங்களில் தேர்தல் பணிக்காக ஏ.சி.சண்முகத்திடம் பணம் வாங்கி உள்ளனர். இப்படி பணம் வாங்கியவர்கள் வாக்குப்பதிவு முடிவுக்கு பின்னர் பங்கு பிரிப்பதில் அடித்துக்கொண்டு இருக்கின்றனர். தேர்தலுக்கு முன்பே ஏ.சி.சண்முகத்திடம் பணம் வாங்குவதில் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து சில ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. வாக்குப்பதிவு முடிவுக்கு பின்னர் இப்பொழுது ஏ.சி. சண்முகத்தை கடுமையான முறையில் விமர்சிக்கும் ஆடியோக்கள் வெளியாகி உள்ளன. அதன் தொடர்ச்சியாக தினமும் சண்டையும் அடித்துக் கொண்டும் சாலை மறியலிலும் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ-கஸ்பா பகுதியில் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்ததும் பணம் பங்கு பிரிப்பதில் பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டு கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பாஜக வழக்கறிஞர் கோகுல் தரப்பினரை மற்றொரு தரப்பினர் தாக்கியதில் காயம் அடைந்த கோகுலை காவல்துறையினர் மீட்டு அழைத்து வந்த போது காவல்துறையினர் முன்னிலையில் மீண்டும் சரமாரியாக தாக்கினர். இதனைத் தொடர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் கோகுல், கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், மற்றும் ஸ்ரீ வர்ஷன் ஆகிய மூன்று பேரை போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பேரணாம்பட்டு ஒன்றியத்தில் பாஜக நிர்வாகிகள் பணம் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் புதிய நீதிக் கட்சி நிர்வாகிகளை தொடர்பு கொண்டு ஏ.சி. சண்முகத்தை ஆபாசமான வார்த்தைகளில் கொச்சையாகத் திட்டி பேசி உள்ளனர். இந்த ஆடியோ தற்போது வெளியாகி, பாஜக தரப்பை நெருக்கடிக்கு உள்ளாக்கியது. இதனால் வேலூர் மாவட்ட பாஜக தலைவர் மனோகரன்,  பேரணாம்பட்டு ஒன்றியத்தை மொத்தமாக களைத்து விட்டார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் யாரும் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என அறிக்கை வெளியிட்டுள்ளார். இப்படி தேர்தல் முடிந்த பின்னரும் தினம் தினம் வேலூர் மாவட்ட பாஜகவில் அடிதடியும் சண்டையும் நடந்து வருகின்றது.

புதிய நீதிக் கட்சியின் குடியாத்தம் பகுதி நிர்வாகிகளும், வேலூர் மாவட்ட நிர்வாகிகள் சிலரும் கட்சியிலிருந்து நீக்குவதற்கான பணியில் ஏ.சி. சண்முகம் ஈடுபட்டுள்ளார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்