publive-image

அ.தி.மு.க.வில் உட்கட்சிப் பூசல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வத்துக்கு எடப்பாடி பழனிசாமி இன்று (30/06/2022) மதியம் கடிதம் எழுதியுள்ளார்.

Advertisment

அந்த கடிதத்தில், "தங்களின் 29/06/2022- ஆம் தேதியிட்ட கடிதம் பத்திரிகைகளின் வாயிலாகதெரிந்துகொண்டேன். பின்னர், மகாலிங்கம் அவர்கள் வழியாகப் பெறப்பட்டது.

Advertisment

கடந்த 23/06/2022 அன்று நடைபெற்ற கழகப் பொதுக்குழுவில், 01/12/2022 அன்று நடைபெற்ற கழக செயற்குழுவால் கொண்டு வரப்பட்ட கழக சட்டதிட்ட திருத்தங்கள் அங்கீகரிக்கப்படவில்லை. ஆதலால், அந்த சட்ட திட்ட திருத்தங்கள் காலாவதி ஆகிவிட்டது. எனவே, கழக ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில் தாங்கள் எழுதியுள்ள கடிதம் செல்லத்தக்கதல்ல.

மேலும், உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது காலியாக இருக்கும் பதவிகளுக்கு நடைபெற உள்ள தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கு கடைசி நாள் 27/06/2022 அன்று முடிவுற்ற நிலையில், இத்தனை நாட்கள் பொறுத்திருந்து, கழகத்தின் வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையிலும், 27/06/2022 அன்று கூட்டப்பட்ட தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு தாங்கள் உட்பட அனைவருக்கும் முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டு, மொத்தம் உள்ள 74 தலைமைக் கழக நிர்வாகிகளில் 65 பேர் கலந்துகொண்டனர். 4 பேர் உடல்நிலை சரியில்லை என்று தகவல் தெரிவித்திருந்தனர். தாங்கள் அந்தக் கூட்டத்தைப் புறக்கணித்த நிலையில், தற்போதைய தங்களின் இந்தக் கடிதம் ஏற்புடையதாக இல்லை.

அதேபோல், நாம் இருவரும் கூட்டாக அழைப்பு விடுத்த, கழகத்தின் பொதுக்குழுவை நடத்தவிடாமல் தடுத்து நிறுத்துவதற்காகத் தாங்கள், ஆவடி காவல் ஆணையருக்கு கடிதம் மூலம் புகார் அளித்தும், நீதிமன்றங்களின் மூலம் வழக்குகளைத் தாக்கல் செய்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை செயல்படாத நிலைக்கு கொண்டு செல்வதற்கான அனைத்துப் பணிகளையும் செய்துவிட்டு, தற்போது இப்படி ஒரு கடிதத்தை எனக்கு அனுப்புவது ஏற்புடையதாக இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்". இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

கடிதத்தில் அன்புள்ள அண்ணன் என்றும், அ.தி.மு.க.வின் பொருளாளர் என்றும் குறிப்பிட்டுள்ளார் கழக தலைமை நிலையச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.