Skip to main content

‘அட போங்கப்பா.. நீங்களும் உங்க எய்ம்ஸ் மருத்துவமனையும்..’ -மத்திய அமைச்சகத்தின் பதிலால் மக்கள் எரிச்சல்!  

Published on 01/10/2018 | Edited on 01/10/2018

மதுரை மாவட்டத்தில் உள்ள தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவிருப்பதாகவும், இது அரும்பெரும் சாதனை என்றும், தமிழகத்தில் விளம்பரங்களும், பேட்டிகளும் கொடுத்து வருகின்றனர் மத்திய, மாநில அமைச்சர்கள். அதேநேரத்தில்,  மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வருவது குறித்த சந்தேகங்களும் எழுந்தன. அதனால், ஹக்கீம் காசிம் என்பவர், மத்திய குடும்பநலம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சில கேள்விகளைக் கேட்டிருந்தார்.

 

AIMS

 

மத்திய அமைச்சரவை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒப்புதல் அளித்திருக்கிறதா? கட்டுமானப் பணிகளுக்கான அனுமதி கிடைத்துவிட்டதா? நிதி எவ்வளவு ஒதுக்கப்பட்டுள்ளது? என்பது போன்ற அவருடைய கேள்விகளுக்கு, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இதுவரையிலும் ஒப்புதல் அளிக்கவில்லை, எந்த நிதியும் ஒதுக்கவில்லை என்று பதில் அளித்திருக்கிறது அந்த அமைச்சகம்.

 

AIMS


இந்த பதிலால் ‘அட போங்கப்பா.. நீங்களும் உங்க எய்ம்ஸ் மருத்துவமனையும்..’ என்று தென்மாவட்ட மக்கள் எரிச்சல் அடைய, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் “படிப்படியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முறையாக நடவடிக்கைகள் முடிந்த பின்னர் தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்கும்.” என்றார்.

 

AIMS


தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனும் “மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான விரிவான திட்ட மதிப்பீடு தயார் செய்யும் பணி நடந்து வருகிறது. மத்திய அரசு விரைவிலேயே நிதி ஒதுக்கும்.” என்று கூறியிருக்கிறார்.

 


தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று 2015-ல் அறிவிப்பு வந்தது.  2018 ஜூனில் நிலம் ஒதுக்கீடு ஆனது. எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படாத நிலையில், அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் வரவிருக்கிறது. அதனால்,  நிதி ஒதுக்கப்படுமா? வெற்று அறிவிப்பாக இருந்துவிடுமா? என, சந்தேகங்கள் வரிசைகட்டி நிற்கின்றன.

சார்ந்த செய்திகள்

Next Story

“தமிழ்நாட்டிற்கு நீங்கள் தருவது தப்புத் தப்பாய் உச்சரிக்கும் திருக்குறள் மட்டும் தானா?” - சு.வெங்கடேசன் எம்.பி

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
Su Venkatesan MP crictized about pm modi to What you are giving to Tamil Nadu is only Thirukkural who pronounced mistakenly

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ஐ.ஐ.எம், மின்சார ரயில் சேவை உள்ளிட்ட பல்லாயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. அந்த வகையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி இன்று (20-02-24) திறந்து வைத்தார்.

எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைத்ததை தொடர்ந்து, மவுலானா பகுதியில் ஆசாத் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் சுமார் 32,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதனை தொடர்ந்து, குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் ராஜ்கோட், மங்களகிரி (ஆந்திரா), பதிண்டா (பஞ்சாப்), ரேபரேலி (உத்தரப்பிரதேசம், கல்யாணி (மேற்கு வங்கம்) ஆகிய இடங்களில் கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை வரும் 26ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார். 

227 ஏக்கர் பரப்பளவில், ரூ.1660 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், மதுரை நாடாளுமன்ற எம்.பி.சு.வெங்கடேசன், பிரதமர் மோடியை விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து சு.வெங்கடேசன் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “அடுத்த ஆறு நாட்களில் 6 எய்ம்ஸ் மருத்துவமனைகளை திறந்து வைக்கிறார் பிரதமர் ஒரே அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்ட அனைத்து எய்ம்ஸ்களும் திறக்கப்பட்டு விட்டன மதுரையைத் தவிர. தமிழ்நாட்டிற்கு நீங்கள் தருவது தப்புத் தப்பாய் உச்சரிக்கும் திருக்குறள் மட்டும் தானா?” என்று குறிப்பிட்டுள்ளார். 

Next Story

‘எங்கே எங்கள் மதுரை எய்ம்ஸ்?’ - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மதுரையில் நாளை போராட்டம்

Published on 23/01/2023 | Edited on 23/01/2023

 

'Where is our Madurai AIMS?'-Marxist struggle in Madurai tomorrow

 

கடந்த 2019 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு நான்காண்டுகள் கடந்தும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் கூட முழுமையாகக் கட்டி முடிக்கப்படாத நிலையே நீடித்து வரும் நிலையில், அண்மையில் பாஜக தலைவர் ஜே.பி.நாட்டா மதுரை எய்ம்ஸ்ஸின் 90% பணிகள் முடிந்துவிட்டதாகப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

 

இந்நிலையில் 'எங்கே எங்கள் மதுரை எய்ம்ஸ்?' எனக் கேட்டு நாளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரையில் போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''மதுரையின் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் எப்போது தொடங்கும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. இதற்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கு என்னென்னமோ காரணங்களைச் சொல்கிறார்கள். உண்மையான காரணம் தமிழக மக்களுக்கு நிதியை ஒதுக்கீடு செய்வதில் மனமற்ற; விருப்பமற்ற அரசாக பாஜக இருக்கிறது.

 

இப்பொழுது நடந்து முடிந்த குளிர்காலக் கூட்டத்தொடரில் நிதித்துறையின் விவாதத்தின் போது கேள்வியெழுப்பியும் எழுத்துப்பூர்வமான கேள்வியெழுப்பியும், அதற்கு அவர்கள் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மதுரையின் எய்ம்ஸ் கட்டி முடிக்கப்படும் என்று சொல்கிறார்கள். நமது கேள்வி எய்ம்ஸ் எப்போது கட்டி முடிக்கப்படும் என்பதல்ல, எப்பொழுது கட்டடப் பணியைத் துவக்குவீர்கள் என்பதுதான். அதற்கு தற்பொழுது வரை பதில் சொல்ல மறுக்கிறார்கள்'' என்றார்.