Skip to main content

நீரில் மிதந்தபடியே யோகா!  -விருதுகளைக் குவிக்கும் விருதுநகர் சிறுமி!

Published on 25/09/2019 | Edited on 25/09/2019

‘புவியீர்ப்பு சக்தியிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ள பல வழிகள் உள்ளன. ஹடயோகம் கற்றுத்தரும் பாதை மூலம் நீரில் மிதப்பது போன்ற வித்தைகளைச் செய்யமுடியும்.’ என்றும் ‘நீரைவிட அடர்த்தி குறைவான பொருட்களே நீரில் மிதக்கும். அப்பொருட்களுக்கு அதிக அடர்த்தி இருந்தால் அவை நீரில் மூழ்கிவிடும். இறந்தவரின் உடல் நீரில் மிதப்பது ஆர்கிமிடிஸ் தத்துவத்தின் அடிப்படையிலாகும். அத்தத்துவம் என்னவென்றால், ஒரு பொருள் நீரில் மூழ்கும்போது, அதனால் வெளியேற்றப்படும் நீரின் அளவானது, அப்பொருளின் கன அளவிற்குச் சமமாக இருக்கும் என்பதே. கடலில் கப்பல் மிதப்பதை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.’ என்கிறார்கள் அறிவியலார்கள். சித்தர்களும் யோகிகளும் தண்ணீரில் நடந்தனர் என்று புராணங்களில் கூறப்படுவதாகச் சொல்கின்றனர்.

 

Yoga as floating in water! award winning little girl!


மூன்றாம் வகுப்பு படிக்கும் 9 வயதே ஆன நவநீதாஸ்ரீ சித்தருமல்ல; யோகியுமல்ல. தன்னுடைய 4-வது வயதிலிருந்தே யோகா கற்று வருகிறார். ஆறு மாத நீச்சல் பயிற்சி, மூச்சுப் பயிற்சியுடன் யோகா பயிற்சியும் பெற்றிருக்கிறார். 2018-ல் ஈரோட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், நீரில் மிதந்தபடி 37 வகையான ஆசனங்களை 5 நிமிடங்கள் 56 விநாடிகளில் செய்து முடித்தார். அதன்மூலம், இந்தியா புக் ஆப் ரெகார்ட்ஸில் இடம் பெற்றிருக்கிறார்.

 

Yoga as floating in water! award winning little girl!


விருதுநகரைச் சேர்ந்த நவநீதாஸ்ரீ, அங்குள்ள தனியார் கல்லூரி நீச்சல் குளத்தில் நீரின் மேற்பரப்பில் மிதந்தும், நீருக்குள்ளும் த்ரிவிக்ரமாசனம், கூர்மாசனம், ரஜபாத தண்டையாசனம், விபத்தபட்சி மோத்தாசனம், ஜடாதித பரிவர்த்தன ஆசனம், பாதகேனாசனம் உள்ளிட்ட 37 வகை ஆசனங்களைச் செய்து காட்டினார்.

 

Yoga as floating in water! award winning little girl!


நீரில் ஆசனம் செய்தபோது மனித வடிவிலான ஒரு மீன் போலவே பார்வையாளர்களின் கண்ணுக்குத் தெரிந்தார் நவநீதாஸ்ரீ!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விருது வென்ற  'ஐயோ சாமி...’ பாடல் 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
ayyo sami gets edison award

அண்மையில் நடைபெற்ற 16வது எடிசன் திரைப்பட விருது விழாவில்  கவிஞர் பொத்துவில் அஸ்மினின்
 'ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்' சிறந்த உணர்ச்சி பூர்வமான பாடல் (Best Sensational Song -2023) விருதினைப் பெற்றுள்ளது. 'நான்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'தப்பெல்லாம் தப்பே இல்லை' பாடல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின் இப்பாடலை எழுதியுள்ளார். 

பாடலை பிரபல இலங்கை இசையமைப்பாளர் சனுக்க இசையமைக்க இலங்கையை சேர்ந்த பிரபல பாடகி விண்டி பாடியுள்ளார். இலங்கையில் அதிக பார்வைகளை ஈர்த்த முதல் இலங்கை தமிழ் பாடல் என்ற பெருமையை இப்பாடல் பெற்றுள்ளது. இவ்விருதினை பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின், இசையமைப்பாளர் சனுக்க, பாடகி விண்டி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இயக்குநர் மனோஜ் பாரதிராஜா, சென்னைக்கான ஆஸ்திரேலியா கவுன்சிலர் டேவிட் ஆகியோர் விருதை வழங்கினர்.
 

Next Story

காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிரான வழக்கு; உயர்நீதிமன்றம் அதிரடி!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Case against For the Congress candidate

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் விருதுநகரைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில், “விருதுநகர் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர் போட்டியிடுகிறார். இவரின் ஆதரவாளர்கள் தேர்தல் விதிகளை மீறி, வாக்காளர்களுக்கு டோக்கன்களை வினியோகித்தனர். எனவே மாணிக்கம் தாகூரை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக ஏப்ரல் 14 ஆம் தேதி தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளித்துள்ளேன்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் இன்று (22.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளித்த அடுத்த நாள் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் அவர்களே இது குறித்து நடவடிக்கை எடுப்பார்கள். இது சம்பந்தமாக மனுதாரர் தேர்தல் வழக்கு வேண்டுமானால் தாக்கல் செய்யலாம்.

இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் ஆணையத்திற்கு அளித்த புகார் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். மேலும் விளம்பர நோக்குடன் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது” எனக் கூறி இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.