yercaud cow and women incident police investigation

ஏற்காட்டில் காட்டு மாடு முட்டியதில் பெண் சிகிச்சைப் பலனின்றி இறந்தார்.

சேலம் மாவட்டம், ஏற்காடு பட்டிப்பாடியைச் சேர்ந்தவர் சேகர். இவருடைய மனைவி தேவி (வயது 37). இவர்,வியாழக்கிழமை (ஆக. 18) ஏற்காடு நகர பகுதிக்குச் சென்றுவிட்டு, இருசக்கர வாகனத்தில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தார்.

Advertisment

அன்று மாலை 05.00 மணியளவில், நடுவூர் அருகே சென்று கொண்டிருந்தபோது, சாலையின் குறுக்கேதிடீரென்று பாய்ந்து வந்த ஒரு காட்டு மாடு, தேவியை முட்டித் தள்ளியது. இதில், அவர் பலத்த காயம்அடைந்தார். கீழே விழுந்து கிடந்த அவரை அப்பகுதியினர் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில்சேர்த்தனர்.

Advertisment

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை03.30 மணியளவில் தேவி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஏற்காடு காவல்நிலைய காவல்துறையினர்வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.