Skip to main content

50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட முக்கிய பிரமுகர். கடத்தியது எதற்காக என தீவிரம் காட்டும் போலீஸ்...  

Published on 07/11/2019 | Edited on 07/11/2019

வேலூர் மாவட்டம், ஏழைகளின் ஊட்டி என வர்ணிக்கப்படும் ஏலகிரி மலையில் உள்ள அத்தனாவூர் கிராமத்தை சேர்ந்தவர் அருள். இவர்  ரியல் எஸ்டேட் அதிபராக இருக்கிறார். நவம்பர் 6ந்தேதி காலை வீட்டில் இருந்து நடைபயிற்சிக்காக சென்றவர் நீண்ட நேரமாகியும் வரவில்லை.
 

yelagiri issue


அவரது மனைவி சாந்தி கணவர் திரும்பி இன்னும் வரவில்லையே என கவலையோடு இருந்துள்ளார். அப்போது அருள் தனது மகன் ராபின்சனுக்கு போன் செய்து தன்னை சிலர் கடத்தி சென்றுக்கொண்டுள்ளனர். அவர்கள் 10 லட்சம் பணம் கேட்கிறார்கள். வீட்டில் இருந்து 10 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு ஆந்திரா மாநிலம் குப்பம் நகருக்கு வரச்சொல்லியுள்ளார்.

தனது தாய் சாந்தியிடம் இந்த தகவலை சொல்ல, அவர் அதிர்ச்சியாகி அழுதவர், தன் மகனிடம் பத்து லட்சத்தை ஒரு ட்ராவல் பேக்கில் போட்டு தந்து அனுப்பியுள்ளார். பணத்தை எடுத்துக்கொண்டு ராபின் கிளம்பி சென்றுக்கொண்டுயிருந்தபோது, கடத்தல் கும்பலை சேர்ந்தவன் "அருள் நம்பரில் இருந்தே ராபின்க்கு போன் செய்து 50 லட்சத்தை கொடுத்தால் தான் விடுவோம்" எனச்சொல்லி மிரட்டியுள்ளான்.

இதில் அதிர்ச்சியான ராபின், தனது தாய்க்கு போன் செய்து தகவலை சொல்ல, வீட்டில் அழுதுக்கொண்டுயிருந்த சாந்திக்கு இது பயத்தை ஏற்படுத்தி அழுதுள்ளார். இந்த தகவல் ஊரில் பரவ, முக்கியஸ்தர்களுடன் சென்று ஏலகிரி காவல் நிலையத்தில், தனது கணவர் கடத்தப்பட்டதையும், பணம் கேட்டது, தந்து அனுப்பியது பற்றி புகார் எழுதி தந்துள்ளார்.

திருப்பத்தூர் டி.எஸ்.பி தங்கவேல், ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் பழனி தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அருள் செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது, ஆந்திரா மாநிலம் குப்பத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. ராபினிடம் பணம் தந்து அனுப்பி அவரை, டி.எஸ்.பி தங்கவேல் தலைமையிலான தனிப்படை பாலோ செய்து சென்றுள்ளது. குப்பத்தில் நவம்பர் 6ந்தேதி இரவு பணம் தரும்போது, பின்னால்  சென்ற போலீஸ் டீம் மடக்கி பிடித்தது. பின்பு
அருள் மீட்கப்பட்டுள்ளார். கடத்தல் கும்பலை சேர்ந்த 4 பேரை பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.

எதற்காக கடத்தினார்கள் ? ரியல் எஸ்டேட் தொழில் பிரச்சனையா அல்லது வேறு ஏதாவது தொழில் பிரச்சனையா என விசாரணை நடத்தி வருகின்றனர் போலலீஸார்.


ஏலகிரி மலையில் தமிழகத்தின் பிரபல அரசியல் முக்கியஸ்தர்கள் பலரும் மறைமுகமாக பினாமி பெயரில் கெஸ்ட் ஹவுஸ் கட்டி வைத்துள்ளனர். இதனால் இடங்களின் விலை தாறுமாறாக உள்ளது. அதோடு, மலையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் பலர் இடம் வாங்கியவர்களை ஏமாற்றுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அதேபோல் ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தின் பல கட்டப்பஞ்சாயத்துகள் மலையில் தான் நடக்கின்றன. மலைப்பகுதியை சேர்ந்த மாலைவாசிகள் பலர் ஆந்திராவுக்கு செம்மரம் வெட்டவும் செல்கிறார்கள். ஆட்களை அனுப்பிவைக்கும் ஏஜென்ட்களும் மலையில் உள்ளார்கள்.

இப்படிப்பட்ட மலையில் கடத்தல் நடந்துயிருக்கிறது என்றால் அது நிச்சயம் ரியல் எஸ்டேட் தொழிலுக்கானது மட்டுமானதாக இருக்காது என முடிவு செய்து போலீஸார் சிக்கியவர்கள், கடத்தப்பட்டவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

லாரி ஏறியதால் பெண் தலைமை காவலர் பரிதாபமாக உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Female head constable passed away in lorry collision

வேலூர் மாவட்டம் அகரம் பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மனைவி பரிமளா (42) இவர் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ஏப்ரல் 17 ஆம் தேதி தேர்தல் பணிக்காக திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படையில் நடைபெற்ற கலந்தாய்வில் கலந்து கொண்டு மாலை வீட்டுக்கு புறப்பட்டார்.

திருப்பத்தூரில் இருந்து மாதனூர் வரை பேருந்தில் சென்றுள்ளார். மாதனூரில் இருந்து தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, மாதனூர்- ஒடுகத்தூர் சாலையில் தாகூர் பள்ளி அருகில் ஆட்டோ ஒன்று குறுக்கே வந்ததால் சட்டென்று பிரேக் அடித்துள்ளார். அப்போது பின்னால் உட்கார்ந்து இருந்த பெண் தலைமை காவலர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஒடுகத்தூரில் இருந்து மாதனூர் நோக்கி வந்த லாரி தலைமை காவலர் பரிமளா மீது ஏறி இறங்கியதில் தலை நசுங்கிய நிலையில்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். படுகாயமடைந்த பெண் தலைமை காவலரின் கணவர் தட்சிணாமூர்த்தி மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பழுதான லோடு ஆட்டோவை சாலையோரம் நிறுத்தி விபத்து ஏற்பட காரணமாக இருந்த ஒர்க் ஷாப் உரிமையாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அரசு மருத்துவமனையில் விபத்து குறித்து நேரில் விசாரணை மேற்கொண்டு உயிரிழந்த தலைமை காவலர் பரிமளாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இது காவல்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள்  மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story

கடும் வெயிலில் போக்குவரத்தை சரி செய்யும் முதியவர்!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
 old man fixing the traffic in the hot sun

சமீபகாலமாக வேலூரில் நூறு டிகிரியை தாண்டிய வெயில் 106.4 டிகிரி வரை வெயில் பொதுமக்களை வாட்டி வரும் நிலையில், வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே சில்க் மில் பேருந்து நிலையத்தில் நான்கு முனை சந்திப்பு சாலையில் வாகனங்கள் கரடுமுரடாக சென்று கொண்டிருந்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதுபோன்ற சிக்னல்களில் மதிய நேரத்தில் வெய்யிலின் தாக்கத்தால் போக்குவரத்து காவலர்கள் பணி செய்வதில்லை. சுடும் வெயிலில் நிற்க முடியாமல் வாகன ஓட்டிகளும் போக்குவரத்து விதிகளை மீறி வேகமாக செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனைப் பார்த்த அந்தப் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர், சாலையின் மையத்துக்கு சென்று ஒவ்வொரு புறத்தில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்து காவலரைப்போல் வழியனுப்பும் காட்சி அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தது. வாகன ஓட்டிகளும் போக்குவரத்தை சரி செய்ய முயலும் முதியவருக்கு மரியாதை கொடுத்து வாகனங்களை நிறுத்தி, அதன் பிறகு சென்றனர். இதனால் சிலமணி நேரம் போக்குவரத்து நெரிசல் இல்லாத நிலை ஏற்பட்டது.