Skip to main content

யமஹா நிறுவன ஊழியர்கள் வேலைநிறுத்தம்..!

Published on 27/09/2018 | Edited on 27/09/2018

 

protest

 

யமஹா நிறுவனத்தின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கண்டித்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை கைது செய்யும் தமிழக காவல்துறைக்கு சிஐடியு கண்டனம் தெரிவித்துள்ளது.

 

சென்னை அடுத்துள்ள திருபெரும்புதூர் பகுதியில் இந்திய யமஹா மோட்டார் பிரைவேட் லிட் எனும் ஜப்பான் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்களுக்கென ஒரு தொழிற்சங்கத்தை  அமைத்தனர். இதை ஏற்க மறுத்த யமஹா நிர்வாகம் சங்க நிர்வாகிகள் இரண்டு பேரை வேலைநீக்கம் செய்தது.  இதனை கண்டித்து  செப்டம்பர் 21 முதல் தொடர்ந்து ஆறு  நாட்கள் அனைத்து தொழிலாளர்களும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இப்பிரச்சனையில் தொழிலாளர் துறை, மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல் நிர்வாகம் என அனைத்து அரசு தரப்பினரின் கவனத்திற்கும் கொண்டு சென்று தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 

 

இந்த நிலையில் இன்று 26.9.2018  தொழிலாளர் தனி துணை ஆணையர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், காவல்துறையினர் நிறுவன வளாகத்துக்குள் நுழைந்து அமைதியான முறையில் உள்ள தொழிலாளர்களை  பலவந்தப்படுத்தி கைது செய்து அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதை சிஐடியு தமிழ் மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது.

 

தொழிலாளர் பிரச்சனைகளில் காவல்துறை தலையிடக்கூடாது என்ற பொது வழிகாட்டுதலை தமிழ்நாடு காவல்துறை அப்பட்டமாக மீறி முதலாளிகளுக்கு சாதகமாக நடந்து கொள்வது  தொழிலமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் செயலாகும்.

 

சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் வந்துள்ள பன்னாட்டு நிறுவனங்களில் இந்திய தொழிலாளர் சட்டங்களை அப்பட்டமாக மீறுவதும், சங்கம் அமைக்கும் உரிமையை மறுப்பதும் போன்ற பிரச்சனைகளில் தமிழக அரசு  நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் மெத்தனம் காட்டி வருவதே தொழிலாளர்கள் போராட்டத்தை கையில் எடுக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது.

 

இப்பிரச்சனையில் காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் தமிழக முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு காவல்துறையின் தலையீட்டை தடுத்து நிறுத்திடவும், கைது செய்யப்பட்ட தொழிலாளர்களை விடுவிக்கவும், பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கவும்  உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமென சிஐடியு பொதுச்செயலாளர் சுகுமாறன் தெரிவித்தார்.

சார்ந்த செய்திகள்

Next Story

ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல்...5 சுங்கச்சாவடிகளில் டுவிஸ்ட்!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
From the first day of April; Twist at 5 toll booths

வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் தமிழகத்தில் 5 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இருக்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 5 சுங்கச்சாவடிகளில் குறைந்தபட்சம் 5 ரூபாயில் இருந்து 20 ரூபாய் வரை கட்டண உயர்வு இருக்கும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.மாதாந்திர கட்டணம் 100 ரூபாயில் இருந்து 400 ரூபாய் வரை உயர இருப்பதாகக் கூறப்படுகிறது. அரியலூர் மாவட்டத்தில் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லாடி, வேலூர் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தால், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

“மத்திய அரசு சி.ஏ.ஏ சட்டத்தை அமல்படுத்தியதன் நோக்கம் இதுதான்” - திருமாவளவன்

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
Thirumavalavan announced the protest for CAA Act

பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசால் கடந்த 2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் (C.A.A.) கொண்டுவரப்பட்டது. அதில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பெரிய அளவில் போராட்டங்களும் நடைபெற்றன.

அதாவது இந்த சட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க சி.ஏ.ஏ. வகை செய்கிறது. அதே சமயம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறும் இஸ்லாமிய மக்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்படவில்லை. மேலும் தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவும் சிஏஏ சட்டத்தில் வழிவகை செய்யப்படாததும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி இருந்தார். இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் நேற்று முன்தினம் முதல் (11.03.2024) அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. 

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு, பல்வேறு எதிர்க்கட்சிகள், தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், சி.ஏ.ஏ சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதனையொட்டி, செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய திருமாவளவன், “இந்த சட்டத்திற்கு இந்தியா முழுவதும் உள்ள ஜனநாயக சக்திகள் கடும் எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார்கள். அந்த எதிர்ப்பை எதிர்கொள்ள இயலாத காரணத்தில் கடந்த 3 ஆண்டுகளாக் அச்சட்டத்தை கிடப்பில் போட்டு வைத்திருந்தார்கள். தேர்தல் நேரத்தில் இஸ்லாமியர்களுக்கும், இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இப்போது அதை அமல்படுத்திருக்கிறார்கள். இதன் மூலம் பெரும்பான்மைவாத அரசியலை முன்னெடுக்க முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

இதனை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், வரும் மார்ச் 15ஆம் தேதி அன்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். பா.ஜ.க.வினர் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திலும் சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டாலும் அவர்கள் சென்றதேயில்லை. மணிப்பூரில் நாள்தோறும் பற்றி எரிந்துக் கொண்டிருக்கிறது. ஆனால், பிரதமரோ, உள்துறை அமைச்சரோ அங்கு சென்று பார்க்கவேயில்லை. ஆனால், தேர்தல் நேரத்தில் ஒரே மாநிலத்தில் திரும்ப திரும்ப வருகிற நிலையை நாம் பார்க்கிறோம். அவர்கள் எவ்வளவு சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் என்பதை நாட்டு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். மக்கள் நலனை விட தங்கள் அரசியல் ஆதாயம் தான் முக்கியம் என்று கருதக்கூடியவர்கள். அதனால், இந்தியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிப்பது அவசியம். சனாதன சக்திக்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்” என்று கூறினார்.