நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோயிலில் கரோனா வைரஸை கட்டுப்படுத்தவும், விரைவில் கரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கவும் வேண்டி மிகப்பெரிய மித்ருஞ்சய ஹோமம், தன்வந்திரி ஹோமத்தை நடத்தியுள்ளனர் பாஜகவினர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
நவக்கிரக ஸ்தலங்களுல் ஒன்றான வைத்தீஸ்வரன்கோயில், வைத்தியநாதசுவாமிக்கோயில் நோய் தீர்க்கும் ஸ்தலமானவும் நம்பப்படுகிறது. வைத்தியநாதசாமி, செல்வ முத்துக்குமாரசாமி, அங்காரகன், தன்வந்திரி ஆகிய நான்கு சாமிகள் ஒரே இடத்தில் அருள் பாலிக்கும் தலமாக இருக்கிறது. இங்கு முறையாகவழிபாடு செய்தால் அனைத்து வியாதிகளும் தீரும் என்பது ஐதீகம்.
பிரசித்திப்பெற்ற இக்கோவிலில் 20 சிவாசாரியார்களை கொண்டு 5 வெள்ளி கடங்களில் புனித நீர் வைத்து சிறப்பு யாகம் பூர்ணாஹூதி செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. " ஹோம புகை மூட்டத்தால் கிருமி கட்டுப்படும்" என யாகத்தில் காஞ்சி சங்கர மட ஆஸ்தான பட்டர் தினகர சர்மா தெரிவித்தார்.
கரோனா வைரஸ் தாக்கம் பொதுமக்களை பாடாய்படுத்தி வருகிற நிலையில் பாஜகவினர் தங்கள் பங்கிற்கு ஹோமம் செய்துள்ளனர்.
Show comments