The tragedy happened while charging the cell phone; College student lose their live

Advertisment

ராமநாதபுரத்தில் செல்போனுக்கு சார்ஜ் செய்த போது மின்சாரம் தாக்கி கல்லூரி இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவன் அமுத கிருஷ்ணன். சம்பவத்தன்று அமுத கிருஷ்ணன் தன்னுடைய மொபைல் போனுக்கு சார்ஜ் போட்டுள்ளார். அப்பொழுது திடீரென மின்சாரம் தாக்கி மாணவன் தூக்கி வீசப்பட்டார். உடனடியாக அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் மாணவனை திருவாடானை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவர்கள் நடத்திய பரிசோதனையில் மாணவன் அமுத கிருஷ்ணன் ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்தது.

மொபைல் போனுக்கு சார்ஜ் போடும்போது மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பையும்,சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.