Skip to main content

ஐஏஎஸ் ஆக முயன்றவரை அடையாளம் தெரியாமல் ஆக்கிய காதல் தோல்வி... குமரியில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்!

Published on 20/07/2022 | Edited on 20/07/2022

 

 The love failure that made the person who tried to become an IAS unrecognizable... a touching incident in Kumari!

 

ராஜபாளையத்தில் பி.காம் பட்டப்படிப்பு, சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ, ஐஏஎஸ் தேர்வுக்கு சீரிய முயற்சி இப்படி கனவுடன் இருந்த இளைஞர் ஒருவரை அடையாளம் தெரியாமல் நிர்மூலமாக்கியுள்ளது காதல் தோல்வி. அப்படியொரு நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது கன்னியாகுமரியில்.

 

வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் தென்காசி மாவட்டம் தென்மலையைச் சேர்ந்த முருகன் என்பவர் தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளார். அப்பொழுது மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் முருகனையே சுற்றி சுற்றி வந்துள்ளார். அடையாளமே தெரியாத அந்த நபர் யார் என அருகில் சென்று விசாரிக்கையில் அந்த நபர் தனது உறவினர் முத்து என்பது தெரிந்தது அதிர்ந்து போனார் முருகன். மூன்று ஆண்டுகளுக்கு முன் காணாமல்போன முத்துவை பல இடங்களிலும் தேடி கிடைக்காத நிலையில் முத்து கிடைத்த செய்தியை அவரது குடும்பத்தினரிடம் சொல்லியிருக்கிறார் முருகன். 

 

 The love failure that made the person who tried to become an IAS unrecognizable... a touching incident in Kumari!

 

தொடர்ந்து முத்துவை சலூனுக்கு அழைத்து சென்று அழகுபடுத்தி, புது உடைகளை வாங்கித்தந்துள்ளார். சம்பவம் அறிந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது சம்பவ இடத்திற்கு வந்த முத்துவின் குடும்பத்தார் முத்து குறித்து தெரிவிக்கையில், ராஜபாளையத்தில் பி.காம் பட்டப்படிப்பு முடித்த முத்து, சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏவும் முடித்துள்ளார். தொடர்ந்து ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற கனவுடன் விடுதியில் தங்கி இருந்து தேர்வு எழுதி வந்துள்ளார். அதேநேரம் காதல் தோல்வியால் சற்று மனமுடைந்து காணப்பட்டார் முத்து. இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி தங்கியிருந்த விடுதியிலிருந்து காணாமல் போயுள்ளார். சென்னை காவல்துறையில் புகாரும் அளிக்கப்பட்டது. பல இடங்களில் தேடியும் கிடைக்காத முத்து தனது உறவினர் முருகன் மூலமாகக் கிடைத்ததாக நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பொது இடத்தில் இளம்பெண் மீது தாக்குதல்; வைரலான வீடியோ காட்சி

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Viral video footage of Incident on girl in public place at chennai

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமரவைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொது இடத்தில் இளம்பெண் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.