Skip to main content

"இந்து ராஷ்டிரா லட்சியத்தை நோக்கி நாட்டை இட்டுச் செல்வது பேரழிவிற்கு வித்திடும்"- எழுத்தாளுமைகள் கூட்டறிக்கை!

Published on 18/12/2019 | Edited on 18/12/2019

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தில் அங்கம் வகிக்கும் எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் என படைப்பாளிகள் அனைவரும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

 

Writers' Joint Statement Against Citizenship Amendment Bill

 



அந்த அறிக்கையில் "மத்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் நாட்டின் மதச்சார்பின்மை மரபைத் தகர்த்து, மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்தக் கூடியது என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டிய கடமையுடன் கீழ்கண்ட கோரிக்கையை மத்திய அரசிற்கு முன் வைக்கிறோம். பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறியுள்ள முஸ்லிம்கள் அல்லாத பிற ஆறு மதத்தைச் சார்ந்தவர்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்க இந்த சட்டம் வகை செய்கிறது.

குடியேறிகளை மத அடிப்படையில் பிரிப்பதும், இலங்கை, மியன்மார் போன்ற நாடுகளிலிருந்து குடியேறியுள்ள ஈழத்தமிழர்கள், ரோஹிங்கியா முஸ்லிம்கள் ஆகியோருக்கு குடியுரிமை மறுப்பதும் அநீதியானது; பாரபட்சமானது; இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமை பிரிவு 14 ஐ மீறுவதுமாகும் என்று எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்ததை மத்திய அரசு சற்றும் மதிக்காமல் ஆணவத்துடன் இந்தச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

மக்கள் நலன் சார்ந்த திட்டங்களைவிட, தங்களது  பெரும்பான்மை மதம் சார்ந்த இந்து ராஷ்டிரா லட்சியத்தை நோக்கி நாட்டை இட்டுச் செல்வது பேரழிவிற்கு வித்திடும் என்பதை கவலையுடன் எடுத்துரைக்க விரும்புகிறோம். நூற்றாண்டுகளாக இந்திய மக்களிடையே நிலவி வரும் கலப்புப் பண்பாடும், மதச்சார்பின்மை நெறியும், பாதுகாக்கப்பட, குடியுரிமை திருத்தச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் செய்யப்பட்டு பல நாடுகளிலிலிருந்து குடியேறியுள்ள அனைத்து மதத்தினரும் சமவுரிமை வழங்கப்படக் கோருகிறோம். உரிமைக்காகக் குரல் கொடுத்துப் போராடிய மாணவர் சமுதாயத்தின் மீது நடத்தப்பட்ட அடக்குமுறையைக் கண்டிப்பதுடன் அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்யவும் வலியுறுத்துகிறோம்" என குறிப்பிட்டுள்ளனர். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.