Skip to main content

1330 குறளும் எழுதியாகனும்... மாணவர்களுக்கு நூதன தண்டணை கொடுத்த இன்ஸ்பெக்டர்!

Published on 06/11/2019 | Edited on 06/11/2019

மண்ணோடு மண்ணாக மாறிக்கொண்டிக்கும் வாகனத்திலும், குட்டைச்சுவற்றிலும், காவல்நிலைய காம்பவுண்ட் சுவற்றிலும் இன்றைய பொழுதை கழித்ததை அவ்வளவு எளிதில் மறக்கமாட்டார்கள் பாளையங்கோட்டையை சேர்ந்த அந்த அரசு உதவி பெறும் இரு பள்ளி மாணக்கர்களும்.

 

write1330 thirukural... Inspector who gave fresh sentence to students!

 

விஷயம் இதுதான்... நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையிலுள்ளது அரசு உதவி பெறும் பள்ளிகளான கதீட்ரல் பள்ளியும், தூய ஜான்ஸ் பள்ளியும். பன்னிரெண்டாம் வகுப்பு வரை மாணாக்கர்கள் பயிலும் இப்பள்ளிகளில் இரண்டு பள்ளி மாணாக்கர்களுக்கிடையே அடிக்கடி மோதல் நடைப்பெற்று வந்திருக்கின்றன. அவ்வப்போது பள்ளி சார்பாகவும், பெற்றோர் சார்பாகவும் நடவடிக்கை எடுக்க கண்டிப்போடு அடங்கிவிடும் இத்தகைய சிறு சிறு மோதல்கள்.

 

write1330 thirukural... Inspector who gave fresh sentence to students!

 

இவ்வேளையில், நேற்று முன்தினம் ஒரு பள்ளியை சேர்ந்த மாணவனுக்கு பிறந்தநாள் என்பதால் பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அப்போது அங்கு வந்த மற்றொரு பள்ளி மாணவர்களுக்கும், இவர்களுக்கும் கேலி செய்வதாக மோதல் எழுந்தது. வாக்குவாதத்தில் ஆரம்பித்த இம்மோதல் கைக்கலப்பில் முடிந்துள்ளது. இந்நிலையில் நேற்று ஒரு பள்ளியை சேர்ந்த மாணவர்கள் கையில் பயங்கர ஆயுதங்களுடன் மற்றொரு பள்ளி மாணவர்களை அதே மைதானத்தில் தாக்க வந்துள்ளனர்,  இதுகுறித்து தகவலறிந்தத பாளையங்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த மாணவர்களை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.

 

write1330 thirukural... Inspector who gave fresh sentence to students!

 

விசாரணையில் இதற்கு முன்பு நடந்த சம்பவங்களை இருதரப்பும் கூற, இனிமேல் இப்பிரச்சனை தொடராத வண்ணம் இரண்டு தரப்பு மாணக்கர்கள் 49 பேரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து சமாதானப்படுத்தி, மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யாமல் இருப்பதற்காக அந்த நூதன தண்டனையை வழங்கினார் பாளையங்கோட்டை இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன்.

"அவர்கள் செய்தது சிறுபிள்ளைத்தனமானது என்பதால் முதலில் சமாதானப்படுத்தினேன் என்றாலும், அவர்கள் செய்த தவறு அவர்களுக்குத் தெரியவேண்டுமே அதனால்தான் 1330 திருக்குறளையும் எழுதி வந்து காண்பிக்க வேண்டுமென கூறினேன். அதிலும் ஒரு சில மாணாக்கர்கள் மட்டும்தான் எழுதி வந்து காண்பிச்சாங்க.. மத்தவங்க எழுதவில்லை. உடனடியாக வேண்டுமென்றேன். அதனால்தான் இப்படி உட்கார்ந்து எழுதிக்கொடுத்துவிட்டு சென்றார்கள். இனிமேல் பிரச்சனை செய்யமாட்டார்கள் பாருங்களேன்" என நம்பிக்கையுடன் பேசுகிறார் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன். அவருடைய நம்பிக்கையை காப்பாற்றுவார்களா மாணக்கர்கள்? 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கேளிக்கை விடுதி விபத்து; மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி இருந்தது.

இது விபத்து குறித்து சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

இந்நிலையில் இந்த விபத்து குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு கிளப்பில் உள்ள மெஸ்ஸானைன் தளம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக விளக்கமிக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் தற்போது நடந்து கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் பணிகளால் அல்ல என்பதை  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தெளிவுபடுத்த விரும்புகிறது.

ஏனெனில் மெட்ரோ ரயில் பணியானது, விபத்து நிகழ்ந்த கட்டிடத்திலிருந்து கிட்டத்தட்ட 240 அடி தொலைவில் உள்ளது. மேலும் விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் அதிர்வுகள் எதுவும் காணப்படவில்லை. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்புப் பணிகளில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரிகளுக்கு உதவி செய்ய உள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவிக்க விரும்புகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விபத்து; 3 பேர் உயிரிழந்த சோகம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Chennai Alwarpet hotel top roof incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது விபத்து குறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.