Skip to main content

வேதனையை தந்த உலக சாதனை! தேர்வு நேரத்தில் இது தேவையா ?

Published on 19/04/2018 | Edited on 19/04/2018
student


மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையின் சார்பில் 2016 – 2017ல் திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகளில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில் தமிழ், ஆங்கில், கணிதப்பாடப்பிரிவில் மாணவ – மாணவிகள் தேசிய சாதனை மதிப்பீட்டில் 28வது இடத்தில் இருந்தது. 2017 – 2018ல் தேசிய சாதனை மதிப்பீட்டில் 14வது இடத்திற்கு உயர்ந்துள்ளது. அதை உயர்த்தி முதலிடத்தில் கொண்டு வரும் நோக்கத்தில் தமிழ் எழுத்துக்களை அடையாளம் கண்டுக்கொண்டு, அதன் உச்சரிப்பினை தெளிவாக புரிந்துக்கொண்டு படிக்க வைத்து சாதனை புரிய வைக்க திருவண்ணாமலை மாவட்ட பள்ளி கல்வித்துறை முடிவு செய்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 2177 அரசு ஆரம்ப பள்ளிகளில் 1.75 லட்சம் மாணவ – மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் 2 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான 85 ஆயிரம் மாணவர்கள், 90 ஆயிரம் மாணவிகளிடம், தமிழ் செய்தித்தாள்கள், இதழ்கள் வாசிக்க வைக்கும் நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்தது.

அதன்படி 19.4.18ந்தேதி காலை 9.30 மணி முதல் 9.50 வரை 470 மையங்களில் மாணவ – மாணவிகளை தமிழ் இதழ்களை வாசிக்க வைத்தனர். வாசித்ததோடு வாசித்த செய்திகளின் தலைப்புகளை உலக செய்திகள், தேசிய செய்திகள், மாநில செய்திகள், மாவட்ட செய்திகள் என்கிற தலைப்புகளில் எழுதி தந்தனர். ஒரே நேரத்தில் 1.75 ஆயிரம் மாணவ – மாணவிகள் இதில் வாசிப்பு பயிற்சியில் ஈடுப்பட்டதால் இதனை லிம்கா சாதனை புத்தகம், ஏசியன் சாதனை புத்தகம், இந்திய சாதனை புத்தகம், தமிழக சாதனை புத்தகத்தில் இடம் பெறவைக்கும் முயற்சியில் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து அதன் பிரதிநிதிகளை வரவைத்துயிருந்தது.

உலகத்தில் இதற்கு முன்பு 2003ல் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 72 ஆயிரம் மாணவ – மாணவிகள் புத்தகம் வாசித்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை தற்போது திருவண்ணாமலை மாவட்ட அரசு பள்ளி மாணவ – மாணவிகள் செய்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, மாவட்ட நீதிபதி மகிழேந்தி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார், சிறப்பு அழைப்பாளராக பத்திரிக்கையாளர் உதயசூரியன் உட்பட பலர் திருவண்ணாமலையில் உள்ள நகராட்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர்.

studen 2


நிகழ்ச்சி பற்றி மாணவிகள் சிலரிடம் பேசியபோது, இன்று 6 ஆம் வகுப்புக்கு ஆங்கில தேர்வும், 7 ஆம் வகுப்புக்கு தமிழும், 8ஆம் வகுப்புக்கு அறிவியல், 9 ஆம் வகுப்புக்கு சமூக அறிவியல் பாடத்துக்கான ஆண்டு பொதுத்தேர்வு நடைபெறுகிறது. தேர்வு நேரத்தில் படிக்கவிடாமல் சாதனை முயற்சி எனச்சொல்லி இரண்டு நாட்களாக எப்படி படிக்கனும், எப்படி எழுதனும், எதை எழுதனும் எனச்சொல்லி டார்ச்சர் செய்துவிட்டார்கள் அண்ணா. படிக்கவேயில்லை, எப்படி தேர்வு எழுதபோகிறோம்னு தெரியல அண்ணா என புலம்பினார்கள்.

இது பற்றி கல்வியாளர்களோ, மாணவ – மாணவிகளை புத்தகம், செய்தித்தாள் வாசிக்க வைப்பது என்பது நல்ல விஷயம் தான். அதிலும் சாதனை செய்கிறேன் என்பது நல்ல விஷயம் தான். ஆனால் அதனை எப்போது செய்துயிருக்க வேண்டும் பள்ளிகள் திறந்த கல்வியாண்டு தொடக்கத்திலோ அல்லது மத்தியிலோ செய்துயிருக்கலாம். அதைவிட்டுவிட்டு தேர்வு நேரத்தில் சாதனை செய்கிறேன் என மாணவ – மாணவிகளை படிக்கவிடாமல் செய்தது சரியல்ல என வேதனைப்பட்டார்கள்.

இந்த நிகழ்ச்சி அதிகாரிகளுக்கு வேண்டுமானல் சாதனையாக தெரியலாம், மாணவ – மாணவிகளை பொறுத்தவரை இது வேதனையைத்தான் தந்திருக்கும்.

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.