Skip to main content

உலக சாதனை படைத்த நான்காம் வகுப்பு மாணவன்!  

Published on 19/05/2022 | Edited on 19/05/2022

 

World record fourth grade student!

 

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தாங்கள் கற்றுக் கொள்ளும் கலை பயிற்சிகளை உள்ளார்ந்த ஈடுபாட்டுடன், சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் பயிற்சி எடுத்துக் கொண்டால் அவர்கள் சாதனையாளர்களாக உருவாகிறார்கள். 


நான்காம் வகுப்பு படிக்கும் ஒன்பது வயது சிறுவன் ஒருவன் ஒரு மணி நேரம் பத்து நிமிடம், சுருள்வாள் மற்றும் ஒற்றைக் கம்பு சிலம்பத்தை ஒரு மணி நேரம் பத்து நிமிடங்கள் தொடர்ந்து சுற்றி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளான். ஈரோடு மாணவர் எஸ். செங்கதிர்வேலன் தான் அவர். 


புத்தாஸ் சிலம்பம்பாட்ட டிரஸ்ட் மற்றும் ஈரோடு மாவட்ட சிலம்பாட்ட கழகமும் இணைந்து நோபல் உலக சாதனை நிகழ்ச்சியை மாமரத்துபாளையம் சக்தி மசாலா நிறுவன அரங்கில்  நடத்தியது. இதில் தான் மாணவர் எஸ். செங்கதிர்வேலன் கலந்து கொண்டு, சுருள்வாள் மற்றும் ஒற்றைக்கம்பு சிலம்பம் ஆகியவற்றை ஒரு மணி நேரம் பத்து நிமிடம் தொடர்ந்து சுற்றி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்று சாதனைப்படைத்துள்ளார். 

 

இந்த நிகழ்ச்சி பிரபல நிறுவனமான சக்தி மசாலா நிறுவனர்கள் பி.சி.துரைசாமி, டாக்டர் சாந்தி துரைசாமி ஆகியோர் முன்னிலையில் நடந்தது. நோபல் உலக சாதனை தலைமை இயக்க அதிகாரி கே.கே.வினோத், தமிழ்நாடு நடுவர் எம்.கே.பரத்குமார் ஆகியோர் உலக சாதனைப்படைத்த மாணவர் எஸ்.செங்கதிர்வேலனுக்கு, விருது மற்றும் அங்கீகார சான்று வழங்கினர். நிகழ்ச்சியில் மாணவர் பெற்றோர் டி.செந்தில்குமார், தீபா செந்தில் குமார், தலைமை பயிற்சியாளரும், ஈரோடு மாவட்ட சிலம்பாட்ட கழக செயலாளர் ஆர். கந்தவேல் மற்றும் துணை பயிற்சியாளர் ஏ.மணி, எம்.ஆறுமுகம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 

சுருள்வாள் மற்றும் ஒற்றை கம்பு சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மாணவன் செங்கதிர்வேலன் சக்தி மசாலா நிறுவனங்களின் உரிமையாளர்களான துரைசாமி மற்றும் சாந்தி துரைசாமியின் மகன் வழி பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிலம்பத்தில் புதிய உலக சாதனை நிகழ்த்திய மாணவர்கள்

Published on 02/05/2023 | Edited on 02/05/2023

 

New World Record in silambam

 

சர்வதேச உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு திருச்சி தில்லைநகர் கி.ஆ.பெ.விசுவநாதம் மேல்நிலைப்பள்ளியில் தொடர்ந்து 8 மணி நேரம் சிலம்பம் சுற்றி ஆங்கிலோ இந்தியன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி கலை இளமணி மோ.பி.சுகித்தா புதிய உலக சாதனை படைத்தார். அவருடன் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் அவர்களின் மகன்கள் மித்ரன் மற்றும் பிரஜன் ஆகியோர் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர். இந்த மூவரின் சாதனைகள் துபாயில் இயங்கி வரும் ஐன்ஸ்டன் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது. இந்த உலக சாதனையை துபாயில் இருந்து வருகை புரிந்த ஐன்ஸ்டன் புத்தக இயக்குனர் கார்த்திக்குமார் மற்றும் நிர்வாக இயக்குனர் மோனிகா ரோஷினி ஆகியோர் ஆய்வு செய்து உலக சாதனை சான்றிதழை வழங்கினார்கள்.

 

மேலும் அமெரிக்க உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற 280க்கும் மேற்பட்ட சிலம்ப வீரர்கள் சுழற்சி முறையில் ஒரு குழுவிற்கு 40 பேர் என 7 குழுவாக ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தார்கள். இந்த சாதனையானது அமெரிக்காவில் இயங்கி வரும் அமெரிக்க உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. நிகழ்ச்சிக்கு உலக சிலம்ப இளையோர் சம்மேளன இந்திய தலைவர் டாக்டர். வி.ஜே.செந்தில்குமார்  தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் கலந்து கொண்டு சாதனை சான்றிதழை வழங்கினார். 

 

New World Record in silambam

 

மேலும் திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவன ஸ்ரீமத் சுவாமி கங்காதரானந்தா, கொடைக்கானல் விவேகானந்தா வித்யாலயா பள்ளி செயலர் சாதனை மாணவர்களுக்கு நினைவுப் பரிசினை வழங்கினார்கள். முன்னதாக இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர்.ஆர்.கிருஷ்ணன், டாக்டர்.கவிதா செந்தில் மற்றும் பத்மஸ்ரீ தாமோதரன் ஆகியோர் இந்நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் உலக சிலம்ப இளையோர் சம்மேளன தலைவர் ஆர்.மோகன், துணைத் தலைவர் வரகனேரி என்.கே.ரவிச்சந்திரன், மாணிக்கம், மணிகண்டன், ராஜ்குமார் மற்றும் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். இச்சாதனை நிகழ்ச்சியை உலக சிலம்ப இளையோர் சம்மேளனம் மற்றும் மன்னை மகாலிங்கம் சிலம்ப சங்கம் இணைந்து செய்திருந்தனர்.

 

 

Next Story

சிலம்பாட்ட சங்கத்தினர் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் (படங்கள்)

Published on 15/04/2023 | Edited on 15/04/2023

 

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் இன்று (15.04.2023) இன்று காலை 10 மணியளவில் உலக சிலம்ப ஆசான்கள் மற்றும் சிலம்ப ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த சங்கம் சார்பில் சிலம்ப வளர்ச்சிக்கான பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சிலம்பாட்ட ஆசிரியர்கள் மற்றும் சிலம்பம் கற்றுக் கொள்ளும் மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.