Published on 21/02/2022 | Edited on 21/02/2022
உலகம் முழுவதும் இன்று தாய்மொழி தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகின் மூத்த மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியைக் கொண்டாடும் விதமாக தமிழக அரசு பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது. இந்நிலையில், சென்னை அண்ணாநகர் வள்ளியம்மாள் மகளிர் கல்லூரி மாணவிகள் இன்று தாய்மொழி தமிழ் தினத்தைக் கொண்டாடினர்.