World Environment Day salem district corporation commissioner

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, சேலத்தில் மேலும் கூடுதலாக இரண்டு இடங்களில் நகருக்குள் வனம் அமைக்கும் பணிகளை, வெள்ளியன்று (ஜூன் 5) மாநகராட்சி ஆணையர் சதீஸ் தொடங்கி வைத்தார்.

Advertisment

Advertisment

சேலம் மாநகராட்சி பகுதிகளில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில், பயன்படுத்தப்படாத காலி இடங்களில் மரங்களை வளர்க்கும் வகையில், நகருக்குள் வனம் என்ற திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. அதன்படி, கடந்த ஆண்டு சேலம் சீலநாயக்கன்பட்டி, தாதம்பட்டி ஆட்டோ நகர், வாய்க்கால்பட்டறை, காக்காயன்காடு, சூரமங்கலம் அருகே போடிநாயக்கன்பட்டி ஏரிக்கரை ஆகிய இடங்களில் மொத்தம் 4200 மரக்கன்றுகள் நடப்பட்டன.

அதையடுத்து, மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து நிலை அலுவலக வளாகங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், பூங்காக்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வளாகங்கள், நுண்ணுயிர் உரம் தயாரிப்பு வளாகங்கள், 5 நகர் வனங்கள் உள்ளிட்ட இடங்களில் 10120 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. அரசுப் பொருட்காட்சிக்கு வந்த பொதுமக்களுக்கும் 15750 மரக்கன்றுகளை மாநகராட்சி நிர்வாகம் வழங்கியுள்ளது.

World Environment Day salem district corporation commissioner

இந்நிலையில், உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, ஜூன் 5- ஆம் தேதி, சீலநாயக்கன்பட்டி நுண்ணுயிர் உரம் தயாரிப்பு வளாகம், தாதம்பட்டி ஆட்டோ நகர் ஆகிய இரு இடங்களிலும் கூடுதலாக நகருக்குள் வனம் அமைக்கும் பணிகளை ஆணையர் துவக்கி வைத்தார்.மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள 7 நகருக்குள் வனங்களில், வேம்பு, புங்கன், வேங்கை, மருதம், நாவல், நெல்லி, கொய்யா, மாதுளை, சிசு, மலைவேம்பு, பூவரசு உள்ளிட்ட 25 வகையான மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

காற்றில் உள்ள கார்பன்- டை ஆக்சைடு வாயு அதிகளவில் உறிஞ்சப்பட்டு, ஆக்ஸிஜன் வாயு கிடைக்கவும், மழைநீரை சேமிக்கவும் நகருக்குள் வனம் திட்டம் உதவும். காற்றில் ஈரப்பதம் குறையாமல் பாதுகாக்கப்படும். சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட தன்னார்வலர்கள், குடியிருப்பு சங்கங்கள், பொதுமக்கள் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் தங்களுடைய வளாகப் பகுதிளில் மரக்கன்றுகளை நட முன்வர வேண்டும் என்று ஆணையர் சதீஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.