Skip to main content

"கடந்த 10 ஆண்டுகள் என்ன ஆட்சி நடத்தினார்கள் என கேட்கும் அளவிற்கான பணிகள் தான் நடைபெற்றுள்ளன" - அமைச்சர் மா.சு பேச்சு

Published on 06/10/2022 | Edited on 06/10/2022

 

"Works have been done to the extent of asking what the government has been doing for the last 10 years" - Minister M. Su's speech

 

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கார்மாங்குடி கிராமத்தில் ரூ 80 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட, புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிட திறப்பு விழா கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. சுகாதாரத்துறை துணை இயக்குனர் மீரா வரவேற்றார்.

 

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இருவரும்  ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினர்.

 

அதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 15 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தேசிய நல வாழ்வு குழும நிதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட சித்தா மருத்துவ பிரிவு கட்டிடம், காட்டுமன்னார்கோவில் வட்டம் செட்டித்தாங்கல் கிராமத்தில் 25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட துணை சுகாதார நிலைய கட்டிடம், ரெட்டியூர் கிராமத்தில் 25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலைய கட்டிடம், சிறுகாட்டூர் கிராமத்தில் 25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலைய கட்டிடம், நத்தமலை கிராமத்தில் 25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலைய கட்டிடம், முட்டம் கிராமத்தில் 25 லட்சம் மதிப்பீட்டில்  கட்டப்பட்ட துணை சுகாதார நிலைய கட்டிடம், ராஜேந்திரசோழகன் கிராமத்தில் 25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலைய கட்டிடம் உள்ளிட்ட ஆரம்ப துணை சுகாதார நிலையங்களையும் திறந்து வைத்தனர்.

 

நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், "மருத்துவத்துறை வரலாற்றில் ஒரே மாவட்டத்தில், ஒரே நாளில் 11 புதிய கட்டிடங்கள் திறந்து வைக்கப்படுவது அநேகமாக கடலூரில் மட்டுமே நடந்திருக்கிற ஒரு சிறப்பான நிகழ்வு. இவ்வளவு கட்டிடங்கள் திறந்து வைத்த பிறகும் கூட இன்னும் 70-க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், 200-க்கும் மேற்பட்ட துணை சுகாதார நிலையங்கள் கட்டிடங்கள் எல்லாம் சிதிலமடைந்து கிடக்கிறது. இந்த கட்டிடங்களை எல்லாம் சீரமைப்பதற்கு ஏற்கனவே சி.எஸ்.ஆர் நிதியுடன் முடிந்த அளவுக்கு செய்து கொண்டு இருந்தாலும், இந்த 15 வது நிதி ஆணையின் கீழ் இன்னமும் சரி செய்ய வேண்டிய கட்டிடங்களை கடலூர் மாவட்ட ஆட்சியர் பட்டியல் போட்டு காட்டினார். அப்படிஎன்றால் கடந்த 10 ஆண்டுகள் என்னதான் ஆட்சி நடத்தினார்கள் என்று கேட்கும் அளவிற்கான பணிகள் தான் இங்கு நடைபெற்றிருக்கிறது.

 

ஒரே மாவட்டத்தில் 19 கட்டிடங்களை கட்டியதற்கு பிறகும், இன்னமும் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டிடங்களை கட்ட வேண்டி இருக்கிற இந்த சூழல் இந்த மாவட்டத்தில் இருக்கிறது என்றால், மருத்துவ கட்டமைப்பு கடந்த 10 ஆண்டுகளில் எப்படி இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். மத்திய ஆயுஷ் அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்ததனால் 100 சித்த மருத்துவமனை கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் ஒரு சித்த மருத்துவமனை தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது. 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படுகின்ற இந்த மருத்துவமனைகள் 100 தமிழகத்தில் அமைய இருக்கின்றன" என்றார்.

 

அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசுகையில் "கம்மாபுரம் ஒன்றியத்தில் இருந்து பிரித்து ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்தில் சேர்க்கப்பட்டுள்ள இப்பகுதி மக்கள் மருத்துவமனைக்கு சுமார் 17 கிலோமீட்டர் தூரமுள்ள விருத்தாசலத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. இப்பகுதியை ஸ்ரீமுஷ்ணம் பகுதியுடன் சேர்க்க கள்ளிப்பாடி - காவனூர் இடையே வெள்ளாற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டப்படும். கீரமங்கலம் -தேவங்குடி இடையே சிறு பாலம் கட்டும் பணி விரைவில் தொடங்கப்படும்" என்றார்.

 

இவ்விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு 54 லட்சம் மதிப்பில் வேளாண்துறை மற்றும் மருத்துவ துறை மூலம் கர்ப்பிணி பெண்களுக்கான  பெட்டகம், விவசாயிகளுக்கான மருந்து தெளிப்பான், முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

 

முன்னதாக அப்பகுதியில் சுகாதாரத் துறை சார்பில் பன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பரவும் முறை குறித்தும், தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட கண்காட்சியை அமைச்சர்கள் பார்வையிட்டு, சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் நிறைகுறைகளை கேட்டறிந்தனர். விழாவில் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன், விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.ஆர்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.