திருவள்ளூர் மாவட்டத்தில் பெண் காவலர் ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் வேலை செய்பவர் ஆயுதப்படை பெண் காவலர் பிரிதிமா. இவர் இன்று காலை வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.
தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்ற பிரிதிமாவின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமைனயில் அனுமதித்துள்ளனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த விரைந்து வந்து போலீசார், காவலர் பிரிதிமா தற்கொலைக்கான காரணம் காதல் விவகாரமா அல்லது மேல்அதிகாரியின் அழுத்தம், பணிசுமை காரணமா என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)