Skip to main content

நடுநிசி நேரத்தில் கூலித் தொழிலாளிக்கு நேர்ந்த கொடூரம்!

Published on 11/05/2023 | Edited on 11/05/2023

 

  worker was injured in a wild cow attack near Dindigul

 

நடுநிசி நேரத்தில் தனியாக நடந்து சென்ற கூலித் தொழிலாளிக்கு நேர்ந்த கொடூர சம்பவம், கொடைக்கானல் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு அருகே உள்ளது பேத்துப்பாறை கிராமம். இந்த பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். கூலித் தொழிலாளியான இவர், அங்குள்ள காபி தோட்டத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த 10 ஆம் தேதி இரவு நேரத்தில், கண்ணன் வழக்கம்போல் தனது வேலையை முடித்துக்கொண்டு கையில் காபி மூட்டையுடன் நடந்தே வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார். அப்போது, அந்த இரவு நேரத்தில் தனியாக வந்துகொண்டிருந்த கண்ணனுக்கு, அவருக்கு பின்னால் ஏதோ சத்தம் கேட்டுள்ளது. பதற்றமடைந்த கண்ணன், பொறுமையாக பின்னால் திரும்பி பார்க்கும் நேரத்தில், அங்கு மறைந்திருந்த காட்டு மாடு ஒன்று திடீரென எதிர்பார்க்காத வேளையில், கண்ணனை கொடூரமாகத் தாக்கியுள்ளது.

 

மேலும், இதில் படுகாயமடைந்த கண்ணன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்துள்ளார். இதையடுத்து, பலத்த காயங்களுடன் பரிதவித்துக் கொண்டிருந்த கண்ணன், உதவிக்கு யாராவது வருவார்களா? எனக் கத்தி கூச்சலிட்டுள்ளார். அந்த சமயம், புனித அக்யூனாஸ் பள்ளியைச் சேர்ந்த நிர்வாகிகளான பாக்யராஜ், உதயகுமார், ஜோசப் உள்ளிட்ட சிலர் அவ்வழியாகச் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, கண்ணனின் அலறல் சத்தம் கேட்ட அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.

 

அங்கே உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த கண்ணனை பார்த்து அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகிகள், அவரை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதையடுத்து காட்டு மாடுகளால் தாக்கப்பட்ட கண்ணன், தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், வன விலங்கால் தாக்கப்பட்ட கூலித் தொழிலாளி ஒருவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று காப்பாற்றிய புனித அக்யூனாஸ் பள்ளி நிர்வாகிகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எல்லாருமே திருடங்கதான்... சொல்லப் போனா...' - பாடலுக்கு நடனமாடியபடி வந்த சுயேச்சை வேட்பாளர்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Independent candidate danced to the song 'ellarume Thirudangathan... sollpona...'

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் இன்று மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. நேற்று முக்கிய கட்சிகளின் பிரமுகர்கள் முதல் சுயேச்சை வேட்பாளர்கள் எனப் பலர் இறுதி நாள் என்பதால் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய வரும் சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் சிலர் நூதன முறைகளில் வந்து வேட்புமனு தாக்கல் செய்வது முன்னரே பல தேர்தல்களில் நடந்துள்ளது.

தேர்தல் நேரங்களில் இதுபோன்ற நூதன சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் திண்டுக்கல்லில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளர் ஒருவர் 'எல்லாருமே திருடங்கதான் சொல்லப்போனால் குருடங்கதான்' என்ற பாடலை ஒலிக்கவிட்டபடி சாலையில் நடனமாடிக்கொண்டே வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story

காற்றில் பறக்கும் தேர்தல் விதிமுறை-நிலக்கோட்டையில் அதிகாரிகளின் மெத்தனம்

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
Is there an election? Or not?- Complacency of authorities in Nilakottai

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று பிற்பகல் நாட்டின் 18 வது நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என தீவிரம் காட்டி வரும் நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை தொகுதியில் தேர்தல் நடைமுறைகள் அமல்படுத்துவதில் அரசு அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

நிலக்கோட்டை பேருந்து நிலையம் அருகே நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதியின் அலுவலகம் உள்ளது. பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நேற்று தேர்தல் தேதி அறிவித்தும் கூட இதுவரை சீல் வைக்கப்படவில்லை. எம்.எல்.ஏ தேன்மொழி ஆதரவாளர்கள் வழக்கம்போல்  சட்டமன்ற அலுவலகத்தை பூட்டிச் சென்ற பூட்டு மட்டுமே அங்கு காட்சிப் பொருளாக தொங்குகின்றதே தவிர தேர்தல் விதி முறைகளின்படி அந்த அலுவலகத்திற்கு அதிகாரிகள் சீல் வைக்காமல் மெத்தனப் போக்கை கடைபிடித்து வருகிறார்கள்.

இதே போல் தொகுதி முழுவதும் கொடிக் கம்பங்கள் அகற்றப்படவில்லை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைவரும் சாலையில் வைத்துள்ள பேனர்கள் அப்படியே இருக்கிறது. தொகுதியில் தேர்தல் நடக்கிறதா? இல்லையா? என பொதுமக்கள் கேட்கும் அளவிற்கு அதிகாரிகளின் செயல்பாடு மெத்தனமாக உள்ளதாகக் குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது.