Worker hangs himself near Sathyamangalam

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அரியப்பம்பாளையம்பட்டத்தரசி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் துரைசாமி(48). இவரது மனைவி பழனியம்மாள். இவர்களுக்கு விஜய் என்ற மகன் உள்ளார். துரைசாமி மற்றும் பழனியம்மாள் கூலி வேலை செய்து வருகின்றனர்.

Advertisment

துரைசாமிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. கடந்த ஒரு வருடமாக அவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு அதற்காக நாட்டு மருந்து சாப்பிட்டு வந்தார். எனினும் வயிற்று வலி குணமாகவில்லை எனக் கூறப்படுகிறது. வயிற்று வலி வரும்போதெல்லாம் துரைசாமி இந்த வலிக்கு பேசாமல் செத்துவிடலாம் என்று புலம்பி வந்துள்ளார். அவருக்கு அவரது குடும்பத்தினர் ஆறுதல் கூறி வந்தனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு துரைசாமி, பழனியம்மாள், விஜய் மூவரும் சாப்பிட்டனர்.பின்னர் பழனியம்மாள், அவரது மகன் விஜய் வீட்டுக்குள் தூங்கச் சென்று விட்டனர். துரைசாமி வீட்டின் வெளியே தூங்கச் சென்றார். இரவில் திடீரென ஏதோ சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த பழனியம்மாள் கதவைத் திறக்க முயன்றார். ஆனால் கதவு வெளிப்பக்கம் தாழ் போடப்பட்டிருந்தது. உடனடியாக விஜய் அவரது நண்பருக்கு போன் செய்து தகவல் சொன்னார் .

Advertisment

அவரது நண்பரும் விரைந்து வந்து கதவை திறந்தார். பழனியம்மாள், விஜய் வெளியே வந்து பார்த்தபோது துரைசாமி தூக்கு போட்டு தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு கார் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே துரைசாமி இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.