Skip to main content

இணைந்து செயல்படுவோம்! திமுக எம்எல்ஏவிடம் ஒபிஎஸ் வாக்குறுதி!!

Published on 11/06/2019 | Edited on 11/06/2019

கடந்த காலங்களில் ஆளுங்கட்சி நடத்தும் அரசு விழாக்களில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் கலந்து கொள்வதில்லை என்ற நடைமுறைதான்  தொடர்ந்து  இருந்துவந்தது. ஆனால் தற்பொழுது நடந்து முடிந்த சட்ட மன்ற இடைத்தேர்தலுக்கு பிறகு எதிர் கட்சி எம்எல்ஏக்களின் கை ஓங்கி  இருப்பதை கண்டு எடப்பாடி அரசே எதிர்கட்சியினரை அனுசரித்து போகக்கூடிய நிலைக்கு வந்துவிட்டது. 

 

Work together! OPS promise to DMK MLA

 

அதுபோல் எதிர்க்கட்சி எம்எல்ஏக்களும் ஆளுங்கட்சி நடத்தும் அரசு விழாகளில் கலந்து கொண்டு வருகிறார்கள். கடந்த10ம் தேதி பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் உள்ள தேவதானப்பட்டி அருகே இருக்கும் பளியங்கு ராசிமலையில் உள்ள மழைவாழ் கிராம மக்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் அனைவருக்கும் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் 35 பயனாளிகளுக்கு 3.50 கோடி மதிப்பீட்டில் வீடுகட்டும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியும், அதுவரை தற்காலிக  குடியிருப்புக்கு நிதி உதவியுடன் அந்த  மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் துணை முதல்வர் ஒபிஎஸ் வழங்கினார். 

Work together! OPS promise to DMK MLA

 

இந்த விழாவில் பெரியகுளம் திமுக  சட்டமன்ற உறுப்பினரான சரவணக்குமாரும் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கியதை கண்டு ஆளும் கட்சியினரே அசந்து போய் விட்டனர்.
       

 

இது சம்பந்தமாக திமுக எம்எல்ஏ சரவணக்குமாரிடம் கேட்ட போது... 

 

மக்கள் பங்களிக்கும் திட்டத்தில் கலந்து கொள்ளலாம் என தலைமை அறிவுறிருத்தியுள்ளது. அதனடிப்படையில் ஒபிஎஸ் நடத்திய நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டேன். அப்பொழுது இப்பகுதியில் உள்ள மக்களின் அடிப்படை வசதிகளையும் தீர்த்து வைக்க வேண்டும் என்று கூறினேன். அதுபோல் கூடிய விரைவில் மழைகாலம் தொடங்க இருப்பதால் தொகுதியில் உள்ள மஞ்சளாறு டேம், சோத்துபாறைடேம், வைகைடேமை உடனடியாக தூர் வார நடவடிக்கை  எடுக்க வேண்டும். அதன் மூலம்  விவசாயிகளும் பொதுமக்களும் பயன் அடைவார்கள். அதுபோல் மக்களுக்கு  நலத்திட்ட வழங்கு வதிலும், அரசு சலுகைகளிலும் கருத்து வேறுபாடுபார்க்க கூடாது  என ஒபிஎஸ் சிடம் கூறினேன். அதை பொறுமையாக கேட்ட ஒபிஎஸ்சும் நான்  துணை முதல்வராக இருக்கிறேன் எனது மகனும் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதால் தொகுதி மக்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் இணைந்தே நிறைவேற்றி கொடுப்போம் என உறுதி கூறி இருக்கிறார்.

 

 

அதன் மூலம் தொகுதி மக்களின் அனைத்து  கோரிக்கைகளையும் விரைவில் நிறைவேற்றி கொடுப்பேன் என்று கூறினார். ஆக ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் இணைந்து மக்கள் நலனில் கை கோர்த்து வருவதை கண்டு பொதுமக்களும் கூட பாராட்டி வருகிறார்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.