Skip to main content

போட்டி அதிமுக நடத்திய வேலைவாய்ப்பு முகாம்... 1800 பேருக்கு பணி ஆணை...

Published on 29/05/2019 | Edited on 29/05/2019

ஜெ.மறைவுக்கு பிறகு அதிமுகவில் ஏறபட்ட பிளவு இன்னும் ஒட்டவே இல்லை. சசிகலா உறவுகளை அகற்ற வேண்டும் என்று ஒபிஎஸ் போர்க்கொடியுடன் தர்மயுத்தம் நடத்தினார். பிளவு அதிகமாவதைப் பார்த்து ஒபிஎஸ் நிபந்தனையை எடப்பாடி ஏற்றதாக கூறி துணை முதல்வர் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவியும்  வாங்கிக் கொண்டு ஒபிஎஸ் இணைந்தார்.

 

 Work Camp conducted by Competitive ADMK... Work Order for 1800 ...

 

ஒ.பி.எஸ் இணைந்தாலும் அவரை நம்பி  அதிமுகவில் இணைந்தவர்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிமுக நிர்வாகிகள் ஒதுக்கியே வைத்துள்ளனர். ஒபிஎஸ் அணிக்கு கட்சி பதவிகளும் இல்லை. ஆனால் தன்னை நம்பி வந்த தொண்டர்களைவிட தன் குடும்ப நலனில் அக்கறை செலுத்தினார் ஒபிஎஸ். அதனால் தான் ஒபிஎஸ் அணியினருக்கு கிடைத்த பதவியை கூட ஒரே நாளில் பறித்துக் கொண்டார்கள். அதை ஒபிஎஸ் கண்டுகொள்ளவில்லை.
இந்த நிலையில் தான் 17 வது மக்களவை தேர்தலும், சட்டமன்ற இடைத் தேர்தலும் வந்தது.

 

 

புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதி பறிக்கப்பட்டதால்  மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளும் திருச்சி, கரூர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய  4 நாடாளுமன்றத் தொகுதியில் இணைக்கப்பட்டது. நடந்து முடிந்த தேர்தலில் அமைச்சர் விஜயபாஸ்கர் தரப்பு ஒபிஎஸ் அணியை சேர்ந்த மாஜிக்களான கார்த்திக் தொண்டைமான் மற்றும் ராஜசேகர் குரூப்பை தேர்தல்பணிக்கு அழைக்கவில்லை. அதனால் புறக்கணிகப்படுவதை அறிந்த மாஜிக்கள் ஒபிஎஸ் மகன் போட்டியிட்ட தேனி தொகுதியில் முகாமிட்டு தேர்தல்பணியில் ஈடுபட்டனர்.

 

 Work Camp conducted by Competitive ADMK... Work Order for 1800 ...

 

தேர்தல் முடிவுகள் வெளியான போது அமைச்சர் தரப்பு அப்செட் ஆனது. மாஜிக்கள் தரப்பு ஆனந்தமடைந்தது. காரணம் அமைச்சர் தேர்தல் பணி செய்த தொகுதிகளில் அதிமுக கூட்டணி படுதோல்வி அடைந்ததுடன் சொந்த தொகுதியான விராலிமயைிலேயே காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு வாக்குகள் அதிகம் மாவட்டம் முழுவதும் அதே நிலை தான். ஆனால் நாங்கள் வேலை செய்த தேனியில் வேட்பாளரை வெற்றி பெறச் செய்துவிட்டோம் என்பது தான்.
 

 

இந்த நிலையில் தான் அமைச்சருக்கு எதிராக போட்டி அதிமுகவினரான  ஒபிஎஸ் ஆதரவாளர்களான கார்த்திக் தொண்டைமானும் ராஜசேகரும் 19 தனியார் நிறுவனங்களை அழைத்து வேலைவாய்ப்பு முகாம் நடத்தினார்கள். இதில் பல மாவட்டங்களில் இருந்து  2700  இளைஞர்கள் கலந்து கொண்டர். மாலை 1800 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
 

 

 

இதேபோல ஒவ்வொரு மாதமும் முகாம் நடத்த தி்டமிட்டுள்ளதாக கூறினார்கள். அதிமுகவுக்கு எதிராக  போட்டி அதிமுகவினர் நடத்திய வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெற்றவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். இவர்களின் போட்டியால் 1800 பேருக்கு வேலை கிடைத்திருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியே.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.