Skip to main content

கடன் தவணையைக் கட்டச் சொல்லி நிதி நிறுவனங்கள் நெருக்கடி! மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் புகார்

Published on 27/05/2020 | Edited on 27/05/2020

 

kallakurichi

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர், திருநாவலூர் பகுதியில் மத்திய மாநில அரசுகள் அனுமதி பெற்ற சிறிய பைனான்ஸ் நிறுவனங்கள் உள்ளது. இந்த மினி வங்கிகள் தங்களது அலுவலகங்களின் உள்ள அலுவலர்களை வைத்துக்கொண்டு திருக்கோவிலூர், திருநாவலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பெரும்பட்டு, உடைய நந்தல் பெரும்பட்டு, ஒரத்தூர், சிறுநாகலூர், பாண்டூர்,  மதியனூர்,  பெரும்பாக்கம்,  சேந்தநாடு, மாரனோடை உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள கிராமப் பெண்கள் நடத்தும் சுய உதவிக் குழுக்களுக்கு 25 ஆயிரம் முதல் 3 லட்சம் வரை கடன் கொடுத்துள்ளது.
 


இந்தக் கடனை மாதாமாதம் அசலும் வட்டியும் சேர்த்து தவணை முறையில் அந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அந்தந்த பகுதிக்குச் சென்று மகளிர் சுய உதவிக் குழு பெண்களிடம் பணம் வசூலித்து வருவார்கள். இரண்டு மாதங்களாக கரோனா பரவல் காணமாக அரசு பிறப்பித்த ஊரடங்கால் வேலைவாய்ப்பு இழுந்து வருமானமின்றி மிகவும் சிரமமான நிலையில் மகளிர் உள்ளனர். அன்றாடம் சாப்பாட்டுப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். 

இந்த நிலையை அறிந்த மத்திய மாநில அரசுகள் மாதாமாதம் அவர்கள் செலுத்தும் கடன் தவணைத் தொகைக்கு மூன்று மாத விலக்கு அளித்துள்ளது. ஆனால் இவற்றையெல்லாம் பின்பற்றாமல் வங்கிகள் மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் சென்று மாதத் தவணைகளைத் தவறாமல் செலுத்த வேண்டும் என்று கோரி நேரிலும் செல்போன் மூலம் நெருக்கடி கொடுத்து வருகிறார்கள் என்றும் இப்படிப்பட்ட நிறுவனங்கள் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

உளுந்தூர்பேட்டையில் நடைபாதையில் வியாபாரம் செய்யும் பெண்கள், வங்கிகள் கடன் தவணையை கட்டச் சொல்லி நெருக்கடி கொடுப்பது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், சிபிஐ, சிபிஎம், முஸ்லீம் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் வந்தனர். 

அதேபோல் அதிமுக மாவட்டச் செயலாளரும் வேட்பாளருமான குமரகுரு கூட்டணி கட்சியான தேமுதிக நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் அதிகாரி ஷரவண்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ததால் இரு கட்சி மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சி நகரில் நிரம்பி வழிந்தது.

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரும் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனியிடம் வழங்கினார். ரவிக்குமாருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் குலாம் மொய்தீன் உட்பட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். 

அதேபோல் பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கர் பாமக மற்றும் பிஜேபி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இவரைத் தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் காந்தலவாடி பாக்யராஜ், அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகம், தேமுதிக மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். 

Next Story

ஏமாற்றிய வடமாநில இளைஞர்; தர்ம அடி கொடுத்த பொது மக்கள்

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Two people were arrested for deceiving people by claiming were applying jewelry polish

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நயினார்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு வாலிபர்கள் பழைய வெள்ளி, தங்கம், கண்ணாடி பொருட்கள், ஆகியவற்றிற்கு பாலிஷ் போட்டு தருவதாக கூறி கிராம மக்களை நம்ப வைத்துள்ளனர். அப்போது ஒரிஜினல் தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்களிடம் வாங்கிய அந்த பீகார் இளைஞர்கள் பாலிஷ் போட்டு கொடுத்துள்ளனர்.

இதை பயன்படுத்திக் கொண்டு அந்த பீகார் இளைஞர்கள் ஒரிஜினல் நகைகளை பாலிஷ் போடுவதாக வாங்கிக் மறைத்து வைத்துக்கொண்டு அதற்கு பதிலாக போலியான நகை மற்றும் பொருட்களை திருப்பிக் கொடுத்துள்ளனர். இந்த விவகாரம் ஊர்மக்களுக்கு தெரியவர இருவரையும் பிடித்து தர்ம அடிகொடுத்து நயினார்பாளையம் வி.ஏ.ஓவுக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த வி.ஏ.ஓ ரஞ்சித் குமார் பீகார் இளைஞர்களிடம் விசாரணை நடத்தினார். 

விசாரணையில், பீகார் மாநிலத்தை சேர்ந்த பப்புகுமார்(31), அமர குமார் யாதவ்(34) இருவரும் தான் என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பாலிஷ் போட வைத்திருந்த உபகரண பொருட்களுடன் இருவரையும் கீழ்குப்பம் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று ஒப்படைத்தனர். பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.