Skip to main content

கோலம் போடும்போது தாலிக்கயிறு இல்லாததை கண்ட பெண்கள்... ரகசிய விசாரணை மூலம் கைது செய்த காவல்துறையினர்! 

Published on 24/09/2021 | Edited on 24/09/2021

 

The women who saw the absence of chain.. police arrested the thief

 

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ளது ஆங்கியனூர் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவரது மனைவி புனிதவதி, அழகப்பன் என்பவரது மனைவி வேம்பாயி ஆகிய  இருவரும் அன்றாடம் கூலி வேலைக்குச் சென்று உழைத்து சம்பாதித்துக் கொண்டுவந்து குடும்பத்திற்கு உதவி செய்துவரும் பெண்கள். இவர்கள் வழக்கம்போல கூலி வேலைக்குச் சென்றுவிட்டு மாலை வீடு திரும்பியதும், சமைத்து குடும்பத்தினருடன் சாப்பிட்டுவிட்டு படுத்து வழக்கம்போல அசந்து தூங்கியுள்ளனர். ஏழைகள் என்பதால் அவர்கள் வீடும் தகுந்த பாதுகாப்பு இல்லாத அளவில் இருந்துள்ளது.

 

இந்த நிலையில், சம்பவத்தன்று நடு இரவில் புனிதவதி வீட்டுக்குள் நுழைந்த மர்ம மனிதன், ஒரு பவுன் தாலியுடன் கூடிய அவரது தாலிக்கயிற்றை அறுத்துக்கொண்டு சென்றுள்ளான். அதேபோன்று அன்றிரவே வேம்பாயி வீட்டிற்குள் புகுந்த ஒரு மர்ம மனிதன், அவர் கழுத்தில் மஞ்சள் கயிற்றில் சேர்க்கப்பட்டிருந்த சுமார் ஒரு பவுன் தாலியையும் அறுத்துக்கொண்டு சென்றுள்ளான். காலையில் எழுந்ததும் வாசலில் சாணம் தெளித்து கோலம் போட இரு பெண்கள் குனியும்போது தங்கள் கழுத்தில் தொங்க வேண்டிய தாலிக்கயிறு இல்லாமல் இருப்பதைக் கண்டு இருவரும் திடுக்கிட்டனர். இதுகுறித்து தங்கள் கணவரிடம் முறையிட்டுள்ளனர்.

 

இதையடுத்து அவர்கள் வெங்கனூர் காவல் நிலையத்திற்குச் சென்று தங்களின் தாலியை அறுத்துச் சென்ற திருடர்களைக் கைது செய்யுமாறு புகார் அளித்துள்ளனர். அவர்களது புகாரின்பேரில் வழக்குப் பதிவுசெய்த போலீசார், தாலி திருடர்களைத் தேடிக்கொண்டிருந்தனர். இந்நிலையில், திருவிடைமருதூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ், கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த மதியழகன் ஆகிய இருவரையும் போலீசார் ரகசிய விசாரணை மூலம் கைது செய்துள்ளனர். இவர்கள் ஏற்கனவே இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு சிறையில் இருக்கும்போது இருவரும் அறிமுகமாகி, வெளியில் வந்ததும் நண்பர்களாக இணைந்து தாலியறுக்கும் திருட்டுத் தொழிலை செய்துவந்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.