Skip to main content

பட்டாக்கத்தியுடன் போராட்டம்; வீதிக்கு வந்த பெண்கள் 

Published on 08/01/2024 | Edited on 08/01/2024
Women struggle with machetes in Tiruttani

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டத்தில் அமைந்துள்ளது பூனிமாங்காடு கிராமம். இந்தப் பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட பெண்கள், பூனிமாங்காடு கிராமத்திலிருந்து ஆந்திர மாநிலம் செல்லும் சாலையில், மகாத்மா காந்தி வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து தங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த ஊரைச் சேர்ந்த பெண்கள் வழக்கம்போல் தங்களுடைய பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது, சென்னை பதிவு எண் கொண்ட இருசக்கர வாகனம் ஒன்று அந்த வழியாக வந்துள்ளது. மேலும், அந்த வாகனத்தில் இருந்த மூன்று இளைஞர்கள் பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையில் பயங்கர வேகமாக சுற்றித் திரிந்தனர். இதனிடையே, அங்கு பணியில் இருந்த பெண்கள் அந்த 3 இளைஞர்களையும் பொறுமையாக போகும்படி கூறியுள்ளனர். ஆனால், அவர்கள் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அந்த பெண்களை உதாசீனப்படுத்திவிட்டு அங்கும் இங்குமாய் சுற்றித் திரிந்தனர். இதனிடையே, அந்த 3 இளைஞர்களும் கஞ்சா போதையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. அவர்கள் தள்ளாடிய நிலையில் அங்கிருந்த பெண்களை அச்சுறுத்தியுள்ளனர்.

அந்த சமயத்தில், சம்பவ இடத்திற்கு வந்த கிருஷ்ணன் என்பவர் அந்த இளைஞர்களை தட்டிக் கேட்டுள்ளார். இதனால் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, கஞ்சா போதையில் இருந்த மூன்று இளைஞர்களும் தாங்கள் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியை எடுத்து கிருஷ்ணனுக்கு கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து விரட்டியடித்தனர். அதுமட்டுமின்றி, அங்கிருந்த பெண்களையும் கத்தியை காட்டி பயமுறுத்தியுள்ளனர். இதனிடையே, இந்த தகவல் ஊருக்குள் பரவியதால் பொதுமக்கள் அனைவரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அந்த நேரத்தில், ஊர்மக்கள் தங்களை தாக்க வருகிறார்கள் என்பதை சுதாரித்துக் கொண்ட கஞ்சா கும்பல், தாங்கள் வைத்திருந்த மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்ப முயற்சித்தனர். அப்போது, தள்ளாடிய போதையில் இருந்த இளைஞர்கள் தடுமாற்றத்தில் அங்கிருந்த மரத்தில் மோதி கீழே விழுந்தனர். இதனிடையே, அங்கிருந்த பெண்கள் அந்த இளைஞர்களை தங்களுடைய செல்போனில் புகைப்படம் எடுத்துவிட்டனர். மேலும், இதைப் பார்த்தவுடன் அந்த இளைஞர்கள் தங்களுடைய பட்டாக்கத்தியை அங்கேயே போட்டுவிட்டு டூவீலரில் எஸ்கேப் ஆகிவிட்டனர்.

இத்தகைய சூழலில், கஞ்சா போதையில் இருந்த 3 இளைஞர்களால் தங்கள் பகுதிக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து ஏற்படலாம் என ஊர் மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். இதனால் அவர்கள் மூன்று பேரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் விட்டுச் சென்ற பட்டாக்கத்தியுடன் மாநில நெடுஞ்சாலையில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பேரில், தகவலறிந்த கனகம்மாசத்திரம் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், போலீசாரிடம் வாக்குவாதம் செய்த ஊர் மக்கள், அந்த இளைஞர்களை கைது செய்யாவிட்டால் எங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று கூறியிருந்தனர். அப்போது, அவர்களை சமாதானம் செய்த காவல்துறை அதிகாரிகள், இந்த விவகாரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து போராட்டத்தைக் கைவிட்டனர்.

இது ஒருபுறம் இருக்க, திருத்தணி சுற்று வட்டாரப் பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் புழக்கங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை பெரிதும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. மேலும், இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்தும் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், போதைப் பொருள் விற்பனையை கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தற்போது கஞ்சா இளைஞர்களைக் கைது செய்யக் கோரி பட்டாக்கத்தியை நடுரோட்டில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

விபத்தில் சிக்கி உயிரிழந்த காவலரின் கண்கள் தானம்!

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
Eye donation of a policeman who passed away in a two-wheeler accident

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை, இவர் வாணியம்பாடி கிராமிய காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி 1 வயதில் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கடந்த 28  ஆம் தேதி இரவு அண்ணாமலை தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் நாட்றம்பள்ளி நோக்கிச்சென்று கொண்டிருந்த போது, கல்லாறு என்ற பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், சாலையோர  தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற காவலர் அண்ணாமலையும் மற்றும் அவரது நண்பரும் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

சிகிச்சை பலனளிக்காமல் அண்ணாமலை 29 ஆம் தேதி மாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து காவலர் அண்ணாமலையின் கண்களை அவரது குடும்பத்தினர் தானமாக வழங்கினர்.

Next Story

“இப்படி ஆகும்னு நினைக்கல..”-உடைந்தே போனார் நிர்மலா தேவி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
"I didn't think it would happen like this.."- Nirmala Devi was devastated!

2018 ஏப்ரல் 5ஆம் தேதி முதன்முதலில் நிர்மலாதேவியைத் தொடர்புகொண்டு  ‘கல்லூரி மாணவிகளிடம் ஏன் இப்படி பேசினீர்கள்?’ என்று கேட்டபோது  “நான் மாணவிகளிடம் பேசிய ஆடியோ உங்க (நக்கீரன்) கைக்கு எப்படி வந்துச்சு? அந்த ஆடியோவைத் தந்தவர்கள் எதுவும் சொன்னார்களா? நான் ஏற்கெனவே போன்ல பேசி ஏதேதோ பிரச்சினைகள் ஆயிருச்சு. இது குறித்து போன்ல பேச வேண்டாமே.. நேரில் பேசலாமே!” என்று பதற்றத்துடன் பேசினார்.

அதன்பிறகு, செய்தி சம்பந்தமாக அவரிடமிருந்து விளக்கம் பெறுவதற்காக பல தடவை கைபேசி மூலம் பேசியிருக்கிறோம்.  சில நேரங்களில், நிர்மலாதேவி தனது சொந்த வருத்தங்களை நம்மிடம் பதிவு செய்திருக்கிறார். “உண்மையிலேயே நான் யார்? எப்படிப்பட்டவள்? என்னுடைய இன்னொரு பக்கம் பலருக்கும் தெரியாது.” என்று மனம் திறந்திருக்கிறார். அப்போது, தனக்கிருந்த சுற்றுச்சூழல் ஆர்வத்தையும்,  தாவரங்கள், மரங்கள்  குறித்த அக்கறையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

2024 ஏப்ரல் 29ஆம் தேதி குற்றவாளி எனத் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த நிர்மலாதேவியிடம் பேச்சுக் கொடுத்தோம். பழைய நினைவையும் பேச்சையும் அறவே மறந்திருந்த அவர், மிகவும் சன்னமான குரலில் “மாணவிகள்கிட்ட போன்ல பேசுனது இந்த அளவுக்கு சீரியஸா ஆகும்னு நான் நெனச்சே பார்க்கல. அந்தப் பேச்சுக்காக, இந்த நேரம் வரைக்கும் நான் கோர்ட்டுக்கு வந்துபோறது, ஜெயிலுக்குள்ள இருந்ததுன்னு எல்லாமே நடந்திருச்சு. இந்தச் சட்ட நடவடிக்கைகளை எல்லாம் அறியாதவளா அப்ப நான் இருந்திருக்கேன்.” என்று உடைந்துபோய் பேசியவரிடம்,  உடல்நலம் குறித்து விசாரித்தோம்.

“எனக்கு இருக்கிற உளவியல் பாதிப்பு முற்றிலுமா இன்னும் சரியாகல.” என்று சொன்னபோது  ‘நிர்மலாதேவி வகையறா..’ என்று நீதிமன்ற அரங்கத்திலிருந்து சத்தமாக அழைப்புவர, விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டார். இவ்வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளான உதவிப் பேராசிரியர் முருகனுக்கும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் விடுதலையை அறிவித்ததோடு,   நிர்மலாதேவி குற்றவாளி என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி பகவதி அம்மாள்  உறுதி செய்துவிட்டு,  “கூண்டில்போய் நில்லுங்க..” என்று உத்தரவிட, நடை தளர்ந்து, சோகம் அப்பிய முகத்துடன் கூண்டில் ஏறி நின்றார் நிர்மலாதேவி. அப்போது ஒரு இளம் வழக்கறிஞர் “ஒருவர் என்ன படித்திருந்தால் என்ன? எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தால் என்ன? தெரிந்தே தவறிழைத்தால், சட்டத்தின் பார்வையில் அது குற்றமென்றால், தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.” என்று நம் காதில் விழும் அளவுக்கு கமெண்ட் அடித்தார்.