Skip to main content

ஒட்டப்பிடாரம் போலீசாரைக் கண்டித்து பெண்கள் சாலை மறியல்!

Published on 15/05/2019 | Edited on 15/05/2019

இரண்டாம் கட்டப் பிரச்சாரமாக திமுக வேட்பாளர் சண்முயைாவை ஆதரித்து ஒட்டப்பிடாரம் தொகுதிக்கு வந்த திமுக. தலைவர் ஸ்டாலின் காலை தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்தே பிரச்சாரத்திற்குக் கிளம்பி விட்டார். 

 

Women stir the road to against protest the police

 

புதுக்கோட்டை, காமராஜ் நகர் கூட்டாம்புளி ஆகிய பகுதிகளில் பரப்புரை நடத்திய ஸ்டாலின் மதியம் தூத்துக்குடியில் உள்ள சத்யா ரெஸ்டாரண்ட்டில் ஒய்வு எடுத்தார். மாலை அவர் தன், பிரச்சாரத்தை தொகுதிக்குட்பட்ட வல்லநாடு கிராமத்திலிருந்து தொடங்குவதாக இருந்தது. அவரைப் பார்ப்பதற்காக வரவேற்பதற்காகவும் வல்லநாட்டின் நான்கு வழிச்சாலையின் இருபுறமும் கூட்டமிருந்தது. அது சமயம், ஆண்கள் பெண்கள் திமுக கொடியோடு ரோட்டோரமிருந்தார்கள். 

 

Women stir the road to against protest the police

 

ஏ.டி.எஸ்.பி. வேடரத்தினம் தலைமையிலான போலீசார் பெண்களின் கூட்டம் நான்கு வழிச்சலைக்குச் செல்வதைத் தடுத்து அவர்களை கலியாவூர் சாலைக்குச் செல்ல வலியுறுத்தினர். ஆனால் நான்கு வழிச்சாலையின் இருபுறமும் பெண்கள் கூட்டம் அதிகமிருந்தது. போலீசார் போக்குவரத்தை சீர் செய்யாமலும், வேகமாகக் கடந்து செல்லும் வானகங்களைக் கண்டு கொள்ளாமலுமிருந்தனர். கடந்த 12 ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்திற்கு வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே போக்குவரத்தினை வேறுபகுதிக்கு மாற்றி விட்ட போலீசார் தற்போது ஸ்டாலின் பிரச்சாரத்தில் கூட்டம் அதிமாக இருந்தும் அவர்களை சாலை ஒரத்தில் கட்டுப்படுத்த முயற்சி செய்தார்களே தவிர குறைந்தபட்சம் போக்குவரத்தை மாற்றிவிடக் கூட ஏற்பாடு செய்யவில்லை. 

 

 

இதனால் திடீரென்று பெண்களின் கூட்டம் சாலையிலமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் இந்தப் போராட்டத்தில் திமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பசாமிபாண்டியன், டி.பி.எம்.மைதீன்கான் எம்.எல்.ஏ. உள்ளட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

 

மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து போக்குவரத்தை ஒரு வழியாக மாற்றி அமைத்ததால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து, ஸ்டாலின் வரவேற்பதற்காகச் சென்றனர் இந்தச் சம்பவத்திற்குப் பிறகு வந்த ஸ்டாலின், அங்கு வேட்பாளரை ஆதாரித்து பிரச்சாரம் மேற் கொண்டார். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.